மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

ஆட்டோகிராப்....:::நாகராஜன்:::

ஆட்டோகிராப்....

பள்ளியின் இறுதி நாட்கள்
துள்ளலின் பருவ முடிவில்
பாடம் படித்த இடம்
மறக்குமோ என நினைக்கையில்...

இல்லை... அதுவரை கூடப்
படித்தவனை மட்டுமே அறிந்து
பிரியும் ஏக்கம் தாளாமல்
வரிகளில் துக்கம் அடக்கவோ...

அடுத்த பெஞ்சில் அமர்ந்தவள்
ஒருவேளை ஐ லவ் யூ எழுதி
காதலை சொல்வாளோ
என எதிர் பார்த்தோ....

எதுவோ ஒன்று… ஆனால் என்ன?....
கையில் அடக்கமாய் குறு நோட்டை
பல வண்ணத் தாள்களை ஒன்றொன்றாய்
ஓடிச்சென்று நிரப்பிய நினைவுகள்...

தெரியாமல் விரல் தொட்ட லலிதா
தப்பு கணக்கிற்காய் குட்டிய வாத்தி
விளையாட்டில் அடித்த சக மாணவன்
மணி அடிக்கும் பியூன் முனுசாமி ....

இன்னும் எத்தனையோ பேர்
நாலு வரிகள் எழுதிக் கொடுத்தது...
எதையோ பரணிலிருந்து இழுத்து
எடுக்கையில் தலைமேல் விழுந்தது....

பக்கம் புரட்டுகையில் எல்லார்
நினைவும் ஊர்ந்து போனது….
ஒரொரு பக்கமும் நினைவெல்லாம்
இனித்து நிகழ் காலம் மறந்தது...

கோவிலிலிருந்து அவசரமாய்
உள்ளே வந்த மனைவி குங்குமம்
சுற்ற ஒரு தாளைக் கிழிக்கையில்
என் இதயமும் கிழிந்தது...

:::நாகராஜன்:::

பிராமணன்....:::நாகராஜன்:::

பிராமணன்....

தலை மழித்து பின்னில் ஒரு
கற்றை மயிர் மட்டும் முடிச்சுடன்
மாரில் குறுக்காய் முப்புரி நூல்
இடையில் குறுக்கு கட்டி வேட்டி....

கையில் செம்புடன் காலை நேரம்
ஆற்றில் குளியலும் சூர்ய வந்தனமும்
மதியம் சந்தியைக்கு மீண்டும் தொழலும்
காயத்ரி மந்திரம் நூறு முறையேனும்....

இடைப்பட்ட வேளையில் கையில்
வாத்தியத்துடன் உஞ்ச விருத்தி
இல்லை கோவில் கருவறையில்
கடவுளோடு சமஸ்கிருதக் கொஞ்சல்...

வெளியே பக்தனுக்கு மேலிருந்து
பிரசாதம் எறிதல் அல்லது
வேலையில்லாதபோது பத்தாவது
பிள்ளையை உருவாக்குதல்....

தட்டில் விழும் காசிற்க்காய் கூடுதல்
மந்திரம் சொலல், இல்லையேல்
அமாவாசை, தர்ப்பணத்தி்ற்கு கால் கழுவி
வாழையும் அரிசியும் பிதுர் யாசகம் பெற்று…

பிராமணனுக்குத் தெரியாமல் போனது
வேறெந்த வேலையும் வாழ்வியலும்...
வியாபாரம் தெரியாது விளம்பரம்
தெரியாது அரசியல் தெரியாது....

காலம் மாறி கலி முற்றுகையில்
பிராமணன் வாயில் பீடியும் பிஸ்ஸாவும்
அமெரிக்க வாசம் மென்தொழில், நுனி நாக்கில்
சமஸ்கிருதம் மாறி அன்னிய மொழி....

வறுமை விரட்டுகையில் கைவசம்
சமையல் தொழில், இல்லையேல்
சேட்டு வீட்டு கணக்குப் பிள்ளை
வஞ்சனையில்லாத உழைப்புடன் ...

வாங்கும் சம்பளத்திற்கு நன்றியோடு
பணிசெய்யும் க்ருஷ்ண தர்மம்....
தொழில் பயம் பக்தி எல்லாம் இருக்கும்
மோசம் செய்ய ஒருபோதும் எண்ணமில்லை

அரசாங்கம் பிராமணனுக்கு ஒன்றும்
செய்யாது.... சில நேரம் வசவும்
சில நேரம் செருப்பு மாலையும்
சில நேரம் பூணுல் அறுத்தலும்....

எந்த ஜாதியிலும் பிராமணன் இல்லை
உயர் குடி, தாழ் குடி இல்லை
இட ஒதுக்கீடு இல்லை வறுமையை
கண்டுகொள்வாரில்லை அரசாங்கத்தில்

வெறுக்கப் படுவோமோ என்று பயந்து
பூணுல் மறைத்தவனை கண்டதுண்டு...
ஆனாலும் தெருவில் பிச்சை எடுக்கும்
பிராமணனை நான் பார்த்ததில்லை...

வேறெந்த வேலையும் தெரியாத
பிராமணன் செய்வது தற்காலம் எல்லா வேலையும்…
வியாபாரம் விளம்பரம் அரசியல் எல்லாம்...
பிராமணன் பணியினை தமிழ் ஓதுவான் செய்யலாச்சு ....

ஆனாலும் இன்னும் எனக்கொரு சந்தேகம்
கடவுளுக்கும் பிராமணனுக்கும் மட்டுமே
புரியும் சமஸ்கிருத பாஷையில் பக்தன் குறையை
இனி யார் கடவுளுக்கு புரிய வைப்பார் ?

:::நாகராஜன்:::

பட்டாளத்தான்... :::நாகராஜன்:::

பட்டாளத்தான்...

விரித்த மீசையும் காக்கி உடுப்பிலும்
கையில் இரட்டைக்குழல் துப்பாக்கியும்
எண்பது கிலோ தகர டப்பவோடும்
ரயில் இறக்கியது சுபேதார் சண்முகத்தை…

கிராமம் முழுதும் அதிசயித்தது…
வீறாப்பெல்லாம் பேசினார் பட்டாளத்தார்…
பாகிஸ்தானியை சுட்ட கதையெல்லாம்
சுவாரஸ்யமாய் சொன்னார் ....

ஹிமாச்சலின் குளிரும் பூஜின் மணலும்
விவரித்தபோது கூட்டம் மொத்தம்
சிலிர்த்துப் போனது,மயிரெல்லாம் கூச்சி
நரம்பிலெல்லாம் மின்சாரம் ஊர்ந்தது ...

பட்டாளத்தான் துப்பாக்கிக்குப் பயந்து
யாரும் சொல்லவில்லை அவன்
பெண்சாதியும் முன்சீப்பும் வருமுன்
கூடிக் குலாவியதை....

::::நாகராஜன்:::

சிதம்பரம்.... :::நாகராஜன்:::

சிதம்பரம்....

நடுக்கில் முளைத்த கோவில் சுவரில்
காவியும் வெளுப்பும் வர்ணமாய்
சுற்றிலும் மாட வீதிகள், முழுவதும்
அந்தணர்களும் அம்மாமிகளும் ...
மற்றவர் நுழையத்தடை....

ஆனாலும் பாலுக்கும் காய்க்கும்
சாக்கடை கழுவவும் ஜாதியின்றி
யாவர்க்கும் உண்டு அனுமதி...
கோவிலில் சில்லறையைக் கழுவாமல்
மடியில் சுருட்டும் குடுமி பிராம்மணன்....

சித்திரையோ பங்குனியோ
கண்டிப்பாய் ஒரு பண்டிகை….
பிராமணன் பிழைக்க வேண்டாமா?
உற்சவர் வீதியில் உலா வருதலும்
மற்றவர் சாமிக்கு தேங்காய் உடைத்தலும்....

ரத சப்தமியோ இல்லை ஆருர்தோடு
தரிசனமோ இல்லை பங்குனி
உத்திரமோ இல்லை சிவா ராத்திரியோ
ஏதும் இல்லை என்றால் இருக்கவே
இருக்கு நந்திப் பிரதோஷம்...

எத்தனை இருந்து என்ன?
ஈசனை தமிழில் துதிக்க நமக்கு
கோர்ட்டின் அனுமதி வேண்டியிருக்கு...
அல்லது தலித்தின் தோளேறிப் போராட
ஒரு முதிவனும் தமிழக அரசின்
பென்ஷன் திட்டத்தில் ஒரு வயதான
தருமபுர ஆதீன சிவ பக்தனும்....

:::நாகராஜன்:::

பயம்....:::நாகராஜன்:::

பயம்....

பகலில் ஒரு தொல்லையுமில்லை!
பேயோ பிசாசோ முனியோ சனியோ
வாய்க்கு வந்ததை வெளியில் சொல்லி
தைரியவான் ஆகலாம்...
ஆனாலும் சந்தை முடிந்து
மிச்சம் கட்டி சுவேகாவில்
ராத்திரி பத்திற்கு வீடு
திரும்புகையில் இருட்டில்
தெரியும் நிழலும் தூரத்து
லாந்தர் விளக்கும் உறங்காமல்
கத்தும் மரத்தும்பிகளும்...
சப்தம் போடும் மின் கம்பிகளும் ....
பேச்சு துணைக்கேனும் யாரும்
வருவாரோ என்று நினைக்கையில்
அதிகம் பேசினோமோ என்று
தோன்றுதலை தடுக்க முடியவில்லை...

:::நாகராஜன்:::

முனி .... :::நாகராஜன்::::

முனி ....

மூணாம் கிளாஸ் முருகேசனை
முனி அடித்ததை ஊரே பேசியது!
காப்பு கட்டணும் என்றது ஒரு சாரார்
ஆனைமுடி அவசியம் என்றாள்
பூனை மீசை கன்னியம்மா ….
முனியப்ப சாமிக்கு நேரணும்
முன்சீப்பு ராமசாமி சொன்னது …
புளியமரத்தில் ஆணி அடிக்க
மரமேறி நாடான் சொன்னான் ….
முருகேசன் முகத்தில் பயம் பார்த்து
நிச்சயம் போன மாசம் தூக்கில்
தொங்கிய அருக்காணிதான் என்று
அடித்து சொன்னார் கிராமத்து மணியகார் ….
யாரும் சொல்லவில்லை முருகேசனும்
சொல்லவில்லை எந்த முனிஎன்று...
ஆனாலும் நிறுத்தவில்லை
வேலிக்குள் புணர்தலை
யாருக்கும் தெரியாமல்...
தலையாரியும் தாயம்மாவும்.....

:::நாகராஜன்:::

நாளை மரணம்....

நாளை மரணம்....

சேமித்ததெல்லாம் மனைவியிடம் சொல்லியாச்சு..
வரும் கடன் வராக்கடன் வாங்கிய கடன்
எல்லாம் மகன் மகளிடம் தெரிவித்தாச்சு..
ஏ டி எம் அட்டை பின் நெம்பர் கொடுத்தாச்சு
பேங்க் அக்கௌன்ட் EOS மாத்தியாச்சு
இன்சூரன்ஸ் தொகை அதிகப் படுத்தியாச்சு
பர்சில் உள்ள காசை பிச்சை போட்டாச்சு
பத்து வெள்ளை தாளில் கையெழுத்திட்டு
பையன் கையில் கொடுத்தாச்சு...
இனி ஏதும் பாக்கியில்லை செய்ய...
ஆனாலும் சாகத்தான் வேண்டுமா?

::::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

கட்டுண்டு காவலுண்டு கையது பொத்தி மெய்யது அடங்க
பட்டுண்டு வாழ்வர் கண்டீர் - பெற்றது தண்டனையாய்
கூட்டில் வாழ்தலும் வழக்காய் மாறாது காண் கல்யாணம்
கட்டியவனும் கொட்டிலில் கைதியும்

:::நாகராஜன்:::

அன்பு நண்பர் திரு. கோவிந்தன் அவர்களுக்கு
தாங்கள் கேட்டபடி திரு. சீவரத்தினதிற்காக ஒரு சிலேடைக்கவிதை.
நன்றி


:::நாகராஜன்:::

காதல்....::::நாகராஜன்:::

காதல்

நீயே நானானதால் நானே நீயானதால்
நான் அங்கிருக்கிறேன் நீ இங்கிருக்கிறாய்
இடம் மாறுதல் பிழையல்ல பெண்ணே...
மாறாவிட்டால் இல்லை காதல் கண்ணே...

உறக்கத்திலும் உன்னை உணர்வேன் நீ
விழிக்காமலிருக்க நான் விழித்திருப்பேன்
உடல் வசமிழந்து தளர்கையில் நாளை
முடிந்தால் செய்வோம் என்பதிலிருக்கிறது காதல்..

தொடுவதில் படுவதில் உராய்வதில் இல்லை காதல்
கட்டுடல் தசைப் பிடிப்பு கவர்ச்சி வேண்டாம் காதலில்
எனக்கொரு தொல்லைஎனில் உன் கண் உகுக்கும்
என் தொல்லை உன்னிடம் சொல்லாமல் போகுமது காதல்

நாடி தளர்த்து நடை பிசகையில் துணையாய் வரும் உன் கை
ஆடி முடித்த நாட்களை அசை போடுகையில் உடன் உன் துணை
கிடக்கும் முன் நாளை பார்ப்போம் என்பதில் உண்டு காதல்
விதவையாய் நினைவுகளுடன் போராடித் தோற்பதில் உண்டு காதல்

:::நாகராஜன்:::

மந்திரமாவதும் நீரே மண்ணாவதும் நீரே.....

மந்திரமாவதும் நீரே மண்ணாவதும் நீரே.....

மண்ணை மண்ணால் சுத்தமாக்கி
மண்ணால் நீரை சுத்தமாக்கி
நீரை நீரால் சுத்தமாக்கி
நீரால் மண்ணை சுத்தமாக்கி....

(The process of cleaning iron using sand - sand blasting
The process of removing suspended solids from water – Sand Filtration
The process of making pure water from sea water – Reverse Osmosis
The process of cleaning the silica ores using water – Washing
-The engineering process of removal of foreign materials)


அழுத்தத்தால் கரியை எண்ணையாக்கி
தீயால் எண்ணையை வெப்பமாக்கி
வெப்பத்தால் சக்தியை சக்கரத்திலிட்டு
உந்திப் போகும் உத்தியைத் தந்து....

(pressure creates organic carbonaceous petroleum oil
Fire ignites the petrol and heats up or expands gas
Heat energy converted to torque and transferred to gears
Gears connected to wheel renders motion
- The mechanism of automotive machines)

மண்ணில் தனிமம் வேகுவதும் தீயால்
வெந்தது குளிர்ந்ததும் காற்றால்
வந்தது வடிவானது வெளியால்
வெளியில் வந்ததை வளியில் நிறுத்தி..

(ores from soil are melted with fire
Melted metal is cooled by air
The moulded stuff is used as a structure
For launching the rockets
- The science of metal moulding)

ஒளியைக் கடத்த காற்று ஓர் ஊடகம்
ஒலியைக் கடத்தவும் காற்று ஓர் ஊடகம்
வளியே ஒரு ஊடகம் ஆகும்
வெளியே புலன் அறியாமல் போகும்...

(light is transmitted via the air particles
Sound is transmitted by ether in air
Atmosphere is the media of transmission of light and sound
Transmission of these powers never are visible
- the science of sound and light transmission)

மின்னில் உண்டு சூடும் தணிப்பும்
மின்னில் உண்டு காற்றும் மண்ணும்
தீயே குளிரை மாறும் வித்தை
குளிரே தீயாய் மாறும் விந்தை

(light produces heat and cold
Heat produces wind and metal fusion
Heat converts itself to cold
Cold itself is a form of heat
- Thermodynamics)

எல்லாம் உனது என்பதை அறிவேன்
தீயும் நீ மண்ணும் நீ காற்றும் நீ
நீரும் நீ வளியும் நீ எங்கும் எதிலும் நீ
நான் எனது என்றில்லாமல் நீ உனது என்றானதால்

ஒன்றிலிருந்தே மற்றது வருமென்பது விதி
ஒன்றை மாற்றினாலே மற்றதாகும்
ஒன்றை அழித்தாலே மற்றது உருவாகும்
ஒன்று என்பதே நீயாய் உனதாய் இருக்கையில்


:::நாகராஜன்:::

சீதைக்கு ராமன் சித்தப்பா!


சீதைக்கு ராமன் சித்தப்பா!

ராமனுக்கு மருமகன் முருகன், முருகனின் முதல் மனைவி
இந்திரன் பெண் தேவயானி, அவளோ சரஸ்வதியின் மருமகள்,
பிரம்மனின் பெண் பூமாதேவி ராமனுக்கு அண்ணன்
மகள் என்றால், சீதைக்கு ராமன் சித்தப்பாதானே ?

:::நாகராஜன்:::

25 மார்., 2008


தலைப்புகூட வேண்டுமா?

எம்ஜியார் நம்பியார் என்டியார்
சிவாஜி பாலாஜி சாயாஜி
ரஜினி நளினி பரணி
விசித்ரா சுசித்ரா சுமித்ரா

வனிதா சரிதா வினிதா
சுஜிதா சாஜிதா சுஜாதா
ராதிகா ஜோதிகா தேவிகா
பூமிகா சரிகா கோபிகா

அஜய் விஜய் ஜெய்
அஜீத் சஜித் சுஜித்
சுரேஷ் ரமேஷ் உமேஷ்
நாகேஷ் ராஜேஷ் லோகேஷ்

அகல்யா சரண்யா சுகன்யா
சுஷ்மிதா மதுமிதா மம்தா

நமீதா ஸ்மீதா ஸ்ரீஜா பூஜா
வாணிஸ்ரீ ராஜஸ்ரீ பாக்யஸ்ரீ

தங்கர் சங்கர் ரவீந்தர்
பாலசந்தர் ரவிச்சந்தர் சரத்சந்தர்
சந்திரகலா சூர்யகலா மேகலா
அருண் வருண் தருண்

அமலா விமலா கமலா
வனஜா ஜலஜா கிரிஜா
ரஜினிகாந்த் நளினிகாந்த் விஜயகாந்த்
சுந்தராஜன் சௌந்தராஜன் ராமராஜன்

சரோஜா ரோஜா ஹாஜா
யுவராணி கலைவாணி கல்யாணி
முரளி சுருளி சார்லி
கலா நிலா கஜாலா

வசந்த் சுமந்த் நிஷாந்த்
சிவகுமார் சுகுமார் விஜயகுமார்
ரவிக்குமார் சரத்குமார் சக்திகுமார்
அசின் சிம்ரன் சுஹாசினி
நதியா காவ்யா பாக்யா

பாரதிராஜா பாக்கியாரஜா பாண்டியராஜா
ராஜ்கிரண் உதய்கிரண் கிரண்
விவேக் விக்ரம் விஷ்ணு
சிங்காரம் சீனிவாசன் கமல்ஹாசன்

மனோகர் சுதாகர் பிரபாகர்
கவுண்டமணி போண்டாமணி
குள்ளமணி குண்டுமணி

மாதவன் ராகவன்
சந்திரன் இந்திரன்
தங்கவேலு வடிவேலு
ஐ ஆர் எஸ் ஏ ஆர் எஸ்

எஸ் எஸ் ஆர் டி ஆர்
பார்த்திபன் கார்த்திக்
கசன்கான் ரியாஸ்கான்
மோகன் ஜகன்

அஜீத் ரஞ்சித்
விஜய் பாபு சோபன் பாபு
த்ரிஷா உஷா
ஆஷா நிஷா

பாபிலோனா கல்பனா
சித்ரா உத்ரா
ஜெயஸ்ரீ சதிஸ்ரீ
கலாஸ்ரீ மாலாஸ்ரீ

சுபஸ்ரீ ஸ்ரீ
சாந்தி காந்தி
சுப்ரியா ஸ்ரீப்ரியா
லக்ஷ்மி மகாலக்ஷ்மி


ராஜேஸ்வரி புவனேஸ்வரி
சுப்பு லக்ஷ்மி ஜெயலக்ஷ்மி
சந்திரா வசுந்தரா
சுந்தர் சௌந்தர்
நாசர் ஈஸ்வர்

மதுபாலா விதுபாலா

மனோபாலா சிங்பாலா
மனோரமா பிரபாரமா

ரமா உமா சுமா

லதா சுதா சதா

விஜய்பாபு சரத்பாபு மதன்பாபு

தேவன் ராஜன்தேவன் மஹாதேவன்


அய்யயோ சாமி
ஆளை விடுங்கோ....

:::நாகராஜன்::::

இராமாயணம்....

இராமாயணம்

பத்துத் தேரோன் மகன் பத்தினிக்குப் பதியானவன் பத்தினியை
பத்துத் தலையன் பத்திஎடுத்து பறந்து போனான் - பத்தால்
அணையும் பத்தன் பத்த வைத்து போனபின் பத்தினியும் பதியும்
இணைந்ததைப் பத்தி பத்தியோடு சொன்னவன் பத்தன்


:::நாகராஜன்::::


இராமாயணம் - விளக்கம்

பத்துத் தேரோன் மகன் – தச (பத்து) ரதன் (தேரோன்) மகன்
பத்தினிக்குப் பதியானவன் - சீதைக்குக் கணவனான ராமன்
பத்தினியை பத்துத் தலையன் - சீதையை ராவணன்
பத்திஎடுத்து பறந்து போனான் - பற்றிஎடுத்து பறந்து போனான்
பத்தால் அணையும் பத்தன் - பற்றால் அணையும் பக்தன் ஹனுமான்
பத்த வைத்து போனபின் - வாளால் இலங்கையைப் பற்றவைத்து போனபின் பத்தினியும் பதியும் - ராமனும் சீதையும்
இணைந்ததைப் பத்தி - இணைந்ததைப் பற்றி
பத்தியோடு சொன்னவன் பத்தன் - பக்தியோடு சொன்னவன் பக்தன் வால்மீகி

சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்


சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
அன்னைக்குமரியாய் , கொட்டிலில் பிறப்பாய், இடையன் கையில்
கோலும், விரித்த சடையும், உள்ளமுள்ளும் அறப்போரில்
முன்னும் சீடர்கள் உடன் உணவருந்தி, இருவரும் ஒருவனே..

:::நாகராஜன்::;

விளக்கம்:

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
வேதம் (மறை) உரைத்தது கண்ணனும் கிறிஸ்துவும்
கடமையை செய் பாவங்கள் நான் சுமக்கிறேன் என்றனர் இருவரும்

அன்னைக்குமரியாய்
அன்னை குமரி - கிறிஸ்துவின் தாய் மரியாள் கன்னியாவாள்
அன்னைக்கும் அரியாய் (தன் பிறப்பை தாய்க்கு வாயில் மண்ணுண்டு உலகம் காட்டியது கண்ணன்)

கொட்டிலில் பிறப்பாய்
ஒருவர் மாட்டுத் கொட்டிலிலும் மற்றவர் சிறைக் கொட்டிலிலும் உதித்தவர்கள்

இடையன் கையில் கோலும்
இருவரும் விலங்கு மேய்த்த இடையர்கள் - ஒருவர் ஆடும் மற்றவர் மாடும்
ஒருவர் கையில் கம்பெனும் கோலும் மற்றவர் கையில் குழல் எனும் கோலும்

விரித்த சடையும்,
நாம் காணும் இரு பிம்பங்களும் திருத்தா முடியுடன் இருபபதாய்க் காண்கிறோம்

உள்ளமுள்ளும்
ஆணி அடித்து சிலுவையில் அறைந்ததில் உள்ள முள் வடுக்களும் உடைய கிறிஸ்துவும்
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் அழகனுமான கண்ணன்

அறப்போரில் முன்னும்
படைத்தவன் பெருமை பேசி சரணகதம் செய்ய முன்னின்று புரட்சி செய்த ஏசு
பாண்டவர் போரில் சாரதியாய் முன் நின்றவன் கண்ணன்

சீடர்கள் உடன் உணவருந்தி,
சிறிய ரொட்டித்துண்டினை பகிர்ந்தளித்தவர் ஏசுபிரான்
தன்னுடன் இருந்த பொடியன்களுடன் வெண்ணெய் உண்டவன் கண்ணபிரான்

இருவரும் ஒருவனே..

எல்லாம் நீ சிவனே....

எல்லாம் நீ சிவனே....

கற்றாளை கற்றாழை எண்ணாது
கற்றாளின் நற்றாளைப் பற்றியால்
அற்றாளின் உற்றால் உண்டதால்
பெற்றாளின் உற்றது பொற்றாள்

வேசிதொட்டால் அறும்பற்றென
நீசனெனை பொருப்பற்றாக்கி
கடையில் உனை விருப்புற்றாக்கி
என்னென்பேன் எனை பற்றாக்கியதில்...

கெட்ட குடி தொட்டமுளை
அம்முட்ட நட்ட குழி
இம்முட்ட நீரிட்டலை நான்
அடித்தே தோற்பதென்னாளோ ?

இடைதடவி முலையருந்தி
பீக்குடல் மேலமர்ந்த்துருத்தி
புணர்ந்துணரும் சிற்றின்பக்
கழிவாயில் மறப்பதென்னாளோ ?

பட்டினத்து செட்டியைப்போல்
பலகொடுத்து நாயடியனை
நினைவெல்லாம் கசிந்துருக
செய்தவனை காண்பதென்னாளோ?

நூலில் ஊசிபோல நீரில் பாசிபோல
காசில் வேசிபோல காவில் தாசிபோல
காடேறும் உடலுடன் வாரா
பந்தம் அறுப்பது என்னாளோ ?

சீவனும் சிவனும் ஒன்றேயறி
உயிர் வேரறி வலியுடல் புறம் எறி
வரமும் வானமும் பெறவேன்றரி
உடல் ஒரு பழுதென்றேயறி


புழுத்து புழுதியில் போகுமுடல்
கரித்து எழுதீயில் வேகுமுடல்
இழுத்து சுழியில் போகுமுடல்
கழுத்தில் சுருக்கையில் போகுமுடல்

வாலறி வாலறு
பலனறி புலனறி
புரியும் அவனறி


வான் செயல் நாதன்
செயல்தானென்றறி

வாலறி புலனறி
பொறியறி புகலறி
வானறி விரியறி

கோளறி குறியறி
திரிமுனியறி
துணையறி பொறியே


மண்ணெடுத்து பசை கலந்து
எண்ணற்ற குழிசெய்து மண்ணை
தீயிட்டுப் பொசுக்கி கசடகற்றி
காற்றிட்டு கடினப்படுத்தி குழம்பினை
ஊற்றிட்டு வார்த்ததை நீரிட்டணைத்து
வானில் பறக்கவிட்ட ஞானமே
விஞ்ஞானமாம்....

மண்ணாய் தீயாய்
காற்றாய் நீராய்
வெளியாய் ஆகிய நீயே...

என்னை எடுத்து பற்று கலந்து
என்னில் மண்ணை நிறைத்து
சுட்டு ஊதி நீராட்டி வானில்
பறக்கவைத்து என்னில் உன்னை
உணர வைத்தது மெய்ஞானமா?

இல்லையெனில் ....

உன்னை உருக்கி வடித்து
உன்னை அறுத்து உன்னைக் கொண்டு
பொசுக்கி உன்னைக்கொண்டு வடித்து
நீயால் தணித்து உன் சக்தியை
உபயோகித்து நீயாய் நிற்கும்
காற்றை உருவாக்குதல் விஞ்ஞானமா?

நாதம் நீ பூதம் நீ
வேதம் நீ கீதம் நீ

அலையாய் சிலையாய்
அனலாய் கனலாய்
காற்றாய் ஊற்றாய்
அடியாய் முடியாய்
தளையாய் விளையாய்
தாயாய் தீயாய்
தந்தையாய் விந்தையாய்
ஒளியாய் ஒலியாய்
வழியாய் வளியாய்
மீனாய் மானாய்
மண்ணாய் விண்ணாய்
கண்ணாய் எண்ணாய்
அருளாய் பொருளாய்
மழையாய் விழையாய்
மதியாய் நதியாய்
விதியாய் கதியாய்
அரமாய் உரமாய்
மரமாய் சரமாய்

அகமாய் இகமாய்
ஏகமாய் ஊகமாய்
இணையாய் துணையாய்
அணையாய் கணையாய்

அணியாய் மணியாய்
கணியாய் தணியாய்
யாதுமாய் ஏதுமாய்
ஜோதியாய் வாதியாய்
ஆதியாய் நீதியாய்
எடுப்பதும் நீ அடுப்பதும் நீ
கொடுப்பதும் நீ தடுப்பதும் நீ

வரம் நீ கரம் நீ
புறம் நீ அறம் நீ

உன்னை எடுத்து உன்னை
வடித்து உன்னை பிரித்து
உன்னை வெட்டி உன்னை ஒட்டி
உன்னை அணைத்து உன்னை தகித்து
உன்னை வடிவாக்கி உன்னை கைமாற்றும்
வித்தை தந்தாய்

எல்லாம் நீ எதுவும் நீ
எதிலும் நீ எங்கும் நீ

நான் செய்யும் ஒரொரு பொருளிலும்
நீ தானென்று உணர்த்துகிறாய்

வான் பரந்து ஆளும் சிவனே
நான் என்பது நானல்ல
நீஎன்பதை உணர்ந்தேன் அல்லால்
நீ வடித்த இவ்வுடல் சிவனே
சிறிய நேரம் தங்கிடல் மட்டுமே
காற்று வாங்கி நீரடக்கி சிவனே
மண்ணுண்டு வெப்பம் சீராக்கி
உயிர் அடங்கும் கட்டிடத்தில்
தங்கிப் போகும் சிலநாளே...சிவனே

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

மூக்கணாங்கயிறுண்டு முகத்தில் பட்டமுண்டு அடிக்கடி
தலையசைக்கும் அடி வாங்கி தோல் தடிக்கும்
அனாவசியமாய் சிலிர்க்கும் உழைத்துதேயும் பாரம் சுமக்கும்
வினா கேட்காமல் எருமையும் அருமை மணவாளனும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

அட்டை உள் அடங்கும், இரு பக்கமுண்டு, தெளிந்த நீரோடை
புரிதல் போலுண்டு, படித் துறையுண்டு, சிறுவர் தோள்
சேர்ந்து களிக்கும், ஞானமென்பார், கரையிலவென்பார்
ஒழுகும் ஆறும் நூலும் ஒன்றே என்பான் கராமா காளமேகன்.

:::நாகராஜன்:::

11 மார்., 2008

தமிழ் மீது கைவைக்காதே...

தமிழ் மீது கைவைக்காதே...

காதலித்தாய்
கைவிட்டாள்
தாடி வைத்தாய்
தண்ணி அடித்தாய்
அடுத்த பெண்ணிடம்
தோற்ற கதை சொல்லி
கல்யாணம் செய்தாய்
அப்புறம் ஏனடா
தமிழ் மீது கைவைத்து
கவிதைஎழுதி கொல்கிறாய்?

:::நாகராஜன்:::

அவள்... ஷபீர் அஹ்மத்

அவள் புன்னகையை

கனவில் கண்டேன்

அதனால்தானோ

கதறிக்கொண்டு எழுந்தேன்?

------------ --------- --------- ---//---- --------- --------- -------
ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலையுதிர்காலம்

தொலைவில் அவள் முகம் பார்த்தேன்

அப்புறம்தான் இவள முகம் கண்டேன்

பல்டியடித்தேன் நானே.

------------ --------- --------- --------- ----//--- --------- --------- --------
நீண்ட நாள்
கனவில் வந்தாய்
நேற்றுதான்
நேரில் வந்தாய்
சுவாசமே ஸ்தம்பித்ததடி!

சாணம் ஏன் மிதித்து வந்தாய்?
------------ --------- --------- -------// --------- --------- --------- -
உன் போன்ற காதலி

எல்லோருக்கும்
கிடைக்க வேண்டும் யான்

பெற்ற அவஸ்தை பெறுக

இவ்வகிலம்
------------ --------- --------- --------- ----//--- --------- --------- ------
இன்று நான் அவளை

சொர்க்கத்தில் சந்தித்தேன்
இதயத்தில் கூக்குரல்

இங்கேயும் நரகமா?
------------ --------- --------- --------- --//----- --------- -------

ஷபீர் அஹ்மத்

மனிதா!....ஷபீர் அஹ்மத்

மனிதா!
நீ பொய்யனா பித்தனாகபடனா கசடனா

மழலைப் பருவத்தை மடைமையில் கழித்தாய்மடைமை தெளிந்ததும் விளையாட்டில் திளைத்தாய்

கல்வியின் காலங்களில் களவியல் வாசித்தாய்களவியல் தேர்ந்ததும் காதலை யோசித்தாய்

வாலிப வீரியத்தில் உணர்ச்சிகள் பிரதானம்உணர்ச்சிகள் வேகத்தில் உடலுக்கும் சமாதானம்

இதயங்கள் மறுத்துவிட்டு உருவங்கள் நேசித்தாய்உருவங்கள் தளர்ந்தபின் உள்ளங்கள் யாசித்தாய்

காதலிக்க வேண்டும் ஒரு கட்டுடல் மாதவிகைபிடிக்க மட்டும் தேவை குணத்துடன் கண்ணகி

பிழைப்புதேடி பறந்தபோது பெற்றவரை மறந்தாய்
பெற்றமக்கள் பிரிந்ததும் பிள்ளைப்பாசம் பேசினாய்

சுற்றங்கள் வந்தபோது செல்வங்கள் தேடினாய்செல்வங்கள் பொய்த்தபின் சொந்தங்கள் நாடினாய்

இருக்கும் வரையிலும் இன்பமே நாடிநின்றாய் இறக்கும் தருணத்தில் இறைவனைத் தேடுகின்றாய்

-ஷபீர் அஹ்மத்

பிரமிடு கவிதை

.
வா
சேர்
இதழ்
முத்தம்
உதடணை
பிடியிறுக்கு
கையளைத்துபார்
குழந்தையாய் மாறி


:::நாகராஜன்:::

வினையெழுத்துக் கவிதை.....:::நாகராஜன்:::

வினையெழுத்துக் கவிதை.....

பிற பாலுக்கழு
முகம் நோக்கிச் சிரி
தவழ் நட ஓடு
பாடம் படி தேர்வெழுது
விளையாடு சண்டையிடு

தெருப் பெண்களிடம்
செட்டைசெய் வம்பிழு
தொட்டுப்பார் புகைப்பிடி
மையால் மீசை வரை
படியில் தொங்கு பிரயாணி

கல்லூரி சேர் நண்பனைப்பெறு
காதலி பெண்ணைப் புரி
பிரி வருந்து மீண்டும்
சேர்கையில் மகிழ்
வாழ்க்கைப் பாதைக்குள் வா

வேலைக்கு அலை பணம் பார்
ஒண்ட ஓர் கூரை செய்
கல்யாணம் செய் பிள்ளை பெறு
வாலிபம் விலகு பொருள்
சேர் வித்தை அறி

உலகம் சுற்று அனுபவி
போகி மோகி பின் யோகி
நாற்பதில் எல்லாம் முடி
பற்றறுத்து பரமன் பதம் பார்
பந்தம் விலக்கு வாழ்தலின் நோக்கு காண்..

இல்லையெனில்.....

அனுபவங்களை திரட்டு
அசைபோடு நினைவுகளை
இதயத்தில் உள்ளதைக்
கைக்குக் கொண்டு வா
கவிதை எழுது.. இதுபோல...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - லாட்டரியும் சினிமா நடிகையும்

சிலேடைக்கவிதை - லாட்டரியும் சினிமா நடிகையும்

குலுக்கலுண்டாம், விளம்பரமும் உண்டாம், பலர் வியந்து பாராட்ட
அதிர்ஷ்டம் தேவையாம், சுற்றிலும் கூட்டம் காண் - வலையில் விழுந்தால்
சொத்தெல்லாம் போச்சென்பார், பழக்கம் கெடுதியாம், எல்லா மாநிலமும்
இருக்கும், குலுக்கிய நாள் கடந்தால் அரைகுறையாய் வீதியில் இளிக்கும் ...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - அரியும் சிவனும் ஒன்றே...

களைதலால் தீயால் தகித்தலால் விளையுண்டாதலால்
உமி அனைத்துப் பிடிக்குமாம் வானவன் புண்ணியமாம்
சாம்பல் உரமாம் போர் உண்டாம் நீர் உண்டாம்
வம்பன் கராமா காளமேகம் சொன்னால் தப்புண்டா?

:::நாகராஜன்:::

குறிப்பு - அரி என்பது அரிசி அல்லது விஷ்ணுவாகும்

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

முண்டிருக்கும் முழக்கமிடும் கடல் கடக்கும் ஒரு பக்கமும் சேராது
இடதுசாரிக் கொள்கைப்பிடிப்பிருக்கும் - சுய அபிப்ராயமே
சொந்தம் சேர்த்த சொத்து ஏதெனத் தெரியாமல் இறக்கும்
பார்ப் புலவனும் மலையாளியும் சமமாகுமா?

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

ஒரு கூடைக்குளடங்கும், கொத்துண்டு காண், விரியும் வகை,
நாமமுண்டு, மண்ணோடுதான் வளரும், துணை சேர்கையில்
மணக்கும் என்பார், தலையின்கண் வைத்ததால், தாள்
மடிக்கப் பாலைக்காணும் பூவும் பாம்பும் ஒன்றே..


:::நாகராஜன்:::

2 மார்., 2008

சுஜாதா மறைவு - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்


எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது.
கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு இல்லையா என்று ஆதங்கத்துடன் சொன்னான். நிஜம் அது.

எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார். படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள். இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது. ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது. எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.ஒரு எழுத்தாளராக அவரது புனைகதைகள் உருவாக்கிய வாசகர்கள் ஒரு பக்கம் என்றால் அவரது விஞ்ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம் பற்றிய அறிமுகத்தின் வழியாக தங்கள் வாழ்வை உருவாக்கி கொண்டவர்கள் மறுபக்கம். இரண்டிலுமே அவருக்குத் தனியிடமிருக்கிறது. சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் அளவு கன்னடத்தில் கூட வேறு எவரும் எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை. நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது. ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார் என்று. ஒரு முறை லேண்ட்மார்கினுள் அவர் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்து பார்த்தேன். அவர் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தவுடனே தீர்மானித்துவிடுகிறார். சில நிமிச நேரம் கூட தேர்வு செய்ய யோசிப்பதில்லை. எப்படி சார் அது என்று கேட்டவுடன் தாழ்ந்த குரலில் பட்சி சொல்லுது என்று சிரித்த முகத்தோடு சொன்னார். அவருக்குள் இருந்த பட்சி கடைசி வரை சரியாகவே சொல்லிக் கொண்டிருந்தது. தமிழ் கதையுலகில் அவரது எழுத்து விசேசமானது. இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்ல முடியாது என்பதற்கு அவரது நடையே உதாரணம். சொற்களை அவர் பயன்படுத்தும் விதம் ஆச்சரியமளிக்ககூடியது. குறிப்பாக அவரது வர்ணனைகள். சொல்லை உடைத்து சுருக்கும் லாவகம். அதை சவுக்கடி வசனநடை என்று சொல்லலாம். ஒரு சொடுக்கில் தாவிச் செல்லும் அற்புதம் கொண்டது. சுஜாதாவின் பழந்தமிழ் இலக்கியத் தேர்ச்சியும் தமிழ் கவிதைகளின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடும் மிக முக்கியமானது. அவர் கவிதைகளை உணர்ந்து வாசிப்பதையும் தான் உணர்ந்தவற்றை உலகிற்கு அடையாளம் காட்டுவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இன்று பிரபலங்களாக உள்ள பல முக்கியக் கவிஞர்கள் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். அதுவும் அவர்களது முதல் தொகுப்புகள் வெளியான நாட்களில் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டவர்கள். அவரது கவிதைரசனை மொழிக்கு அப்பாற்பட்டது. சங்கக்கவிதையை ரசிப்பது போலவே ஹைகூ கவிதைகளை ரசித்திருக்கிறார். அவருக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் பிடித்திருக்கிறது இன்னொரு புறம் மகுடேஸ்வரனையும் பிடித்திருக்கிறது. அவருக்குள் எப்போதுமே ஒரு கவிஞன் இருந்தான். அவன் மிக தன்னடக்கமானவன். எழுதி தன்னை காட்டிக் கொள்ளாதவன். மாறாக கவிதையை ரசிப்பதையும் கவிதையின் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதிலும், கவிதை வாசித்தலின் வழியாக தியானநிலையை உணர்ந்தவனுமாக இருந்திருக்கிறான். பகடிக்காக அவர் எழுதிய மரபுக்கவிதைகளில் கூட இலக்கணம் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கணிப்பொறியியல், இலக்கியம் நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞான கதைகள், சிறுகதைகள் குறுநாவல்கள், இசை என்று அவர் தொடாத துறைகளே இல்லை. எதிலும் அவர் நுனிப்புல் மேயவில்லை. சிறிய உதாரணம், ஒரு முறை அவரோடு நீலி கதை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு நிமிசம் இருங்கள் என்றபடியே அவரது புத்தக அடுக்கிலிருந்து நுறு வருசங்களுக்கு முன்பு வெளியான பெரிய எழுத்து நீலிகதையை கொண்டு வந்து வாசித்து காட்டி விளக்கினார். அவர் தேடுதலில் கொண்ட நாட்டம் ஆச்சரியமளிக்க கூடியது. அதே நேரம் தனக்கு தெரியாதது தொடர்பாக அவர் உடனே ஒத்துக் கொள்வதோடு அதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்பதற்கும் தயாராக இருப்பார்.தமிழ் சினிமாவில் அவரது கதைகள் முறையாகப் படமாக்கபடவில்லை என்ற குறை அவருக்குள் நெடுங்காலமாகவே இருந்து வந்தது. ஆனாலும் தான் வசனம் எழுதுகின்ற படங்கள் பற்றி அவருக்கு ஒரு குறையுமில்லை. அத்தோடு ஐம்பது வருசமாக எழுதப்பட்டு வந்த அடுக்குதொடர் வசனங்களும் கண்ணீர் மல்கி பெருகும் நீண்ட பிலாக்கணங்களையும் விலக்கி அவர் எழுதிய நறுக்கு தெறித்த வசனங்கள் இன்று என் போன்றோருக்கு முன்னோடியாக உள்ளன.அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது. எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.சுஜாதாவின் எழுத்து மூன்று தலைமுறைகளை தாண்டி இன்றும் தொடர்ந்த வாசிப்பிற்கும் விருப்பத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அவரது ஆளுமை எண்ணிக்கையற்ற வாசகர்களை உருவாக்கியிருக்கிறது. மேம்படுத்தியிருக்கிறது. அவர்களில் நானும் ஒருவனாகயிருக்கிறேன். சுஜாதா அதிகம் பேசக்கூடியவரில்லை. பொது விழாக்களில் கூட அவர் பேசுவதற்கு மிகுந்த தயக்கம் கொள்வார். அவர் பேசுவிரும்பியதெல்லாம் எழுத்தானது. சர்சைகள் விவாதங்கள். பாராட்டுகள் யாவற்றையும் மௌனமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இனியும் அவரோடு பேசிக் கொள்ள அவரது எழுத்து மட்டுமே இருக்கும். அவரது மௌனம் கவிதையைப் போல எங்கும் எப்போதும் நீக்கமற்று நிறைந்திருக்க கூடும்.பின்குறிப்பு. இதைக் கணிப்பொறியில் எழுதும் போது கூட முதல்முதலாக கணிப்பொறியில் எழுதியவர் சுஜாதா தான் என்ற நினைப்பு மேலோங்குகிறது. அவரைப்போல கணிப்பொறியில் எழுத வேண்டும் என்ற ஆசை சமீபமாக தான் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக நானும் சொல்லிக் கொள்கிறேன்.
போய் வாருங்கள் வாத்தியாரே.
எழுத்தாக எப்போதும் இருப்பீர்கள்.

எழுத்தாளர் சுஜாதா மறைவு...

I am immensely droused with the emotions and feelings on hearing that the Gentleman who has always been my friend phylosopher and guide had passed away.

Our association goes right from Year 1975, ever since I started writing in Tamil Magazine called 'Savi'.

Being an engineer he was able to easily move with me despite age differences. I have been the stern critic for his writings. Couple of famous novels, he consulted me for college dialogues, to name one ' Kolaiyuthir Kaalam', which was a thriller novel in Kumutham.

He was the Deputy General Manager of Bharat Electronics Limited in Bangalore. He is the one who has invented the present day Electronic Voting Machine.

He has introduced me a lot of technical books those days for micro electronics, such as Adam Osborne Series etc. He did many movies, Ninaithale Inikkum, Priya, Indian, Anniyan, Boys, and latest Sivaji.

He has readily accepted to inagurate an association called Tamil Nadu Engineers Forum in Kuwait in 1999, when I requested him to visit Kuwait. Being the founder, I had the honor to honor this marvelous genious on stage and introduced him to many of the Kuwaiti Scholars.

I have been always inviting him to visit Dubai for a couple of days with me and he was not comfortable with his health for the last 3 years. I recently met him on October 2007 at his home, when Sivaji Shooting was going on. We discussed couple of technical things about camera and digital conversion. I updated him on my present business in Dubai.

He is a classmate to Dr. Abdul Kalam. Legendary relationship exists between these to genii.

I am spell bound with imotions. I remember the days in Bangalore where we used to have breakfast and discussion and discussion and discussions.

He survived with Heart Attack Three times. He underwent bypass surgery for 2 times. He had a pacemaker implanted permanently. He had high diabetes and his vision was affected by Glucoma.

Nothing stopped his spirits. He worked as a consultant for Pentafour in Chennai, till his last minute. He has very special friends like Kamal Hasan, Vairamuthu, Kalaignar and Jayalalitha.

He respected people. His serial stories have boosted the circulation of the weekly magazines.

He is a guru for many including Endamoori Virendranath, another Sujatha in Andra Pradesh.

I have no more left to write, but have a lot in my thoughts and heart.

My eyes are popping out tears.

The tear is the full stop to this paragraph.

May God Rest You in Peace, My Dear Friend.....Mr. Srirangam Srinivasan Rangarajan....Good Bye....

Nagarajan

சிலேடைக்கவி - சிவபெருமானும் மிளகாயும்

சிலேடைக்கவி - சிவபெருமானும் மிளகாயும்

புரம் எரித்தலால், பச்சை உடையார், வேண்டாதவர்க்கு
உள்ளமிளகாய், தரித்தத்தில் நீர் வரும், பழுத்த சிவப்பன்,
நீயிருக்கும் இடத்தில் சீவனுண்டு, மேலே குடையுண்டு,
எரியும் கையது, தென்னாடுடை சிவனும் மிளகாயும் ஒன்றே...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - கள்ளும் கைப்பந்தும்

சிலேடைக்கவி - கள்ளும் கைப்பந்தும்

கோப்பையுண்டு, கையாள்வதால் பால் என்பார்,
உட்கொள்கையில் உடல் வீங்கும், அடித்தால் உயரே போகும்,
வெளியே உருண்டு விழுந்தால் ஆட்டம் முடிந்ததென்பார்,
வலையுண்டு தடுக்க, கண்டீர் கள்ளும் கைப்பந்தும் சமம்.

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - யானையும் கைதியும்

சிலேடைக்கவி - யானையும் கைதியும்

சங்கிலியால் பிணைப்பார் பொதுவில் கையுண்டு
கவளமாய் களியுண்பார் இரவில் உறக்கமில்லை
சட்டென்று மதம்பிடித்தல் குணமாம் ஆயுதத்திற்கு
அடங்குதல் கண்டீர் யானையும் கைதியும் சமன்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

முதிரும் முப்பத்திருபல், கழி கையிலேடுப்பர், உலர் காயம் ,மேலாம்
சுருங்கும் மேலெல்லாம், கைகால் தடுத்து தடிகொண்டடி வைப்பார்,
களியுண்டு அடிக்கடி (அடிக்கு அடி) கழியுண்டு , சுற்றுமிருந்து
வாய்பிளந்து போவார் காண், கழிச் சண்டையும் கிழவனும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

முதிரும் முப்பத்திருபல், கழி கையிலேடுப்பர், உலர் காயம் ,மேலாம்
சுருங்கும் மேலெல்லாம், கைகால் தடுத்து தடிகொண்டடி வைப்பார்,
களியுண்டு அடிக்கடி (அடிக்கு அடி) கழியுண்டு , சுற்றுமிருந்து
வாய்பிளந்து போவார் காண், கழிச் சண்டையும் கிழவனும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பரமசிவனும் பலாப்பழமும்


சிலேடைக்கவி - பரமசிவனும் பலாப்பழமும்

பிடித்தொரு சடையுண்டு கொட்டையுண்டு மரவுரியன்
பருத்ததைப் பெற்றவன் தேமதுரன் நாவிற்கினியவன்
பிரம்படி பெற்றுப் பழுப்பன் கராமா வாழ் காளமேகன் சிலேடை
உருப்படியாய் செய்வது பலாவையும் பரமசிவனையுமா?

::::நாகராஜன்:::

விளக்கம்:

பிடித்தொரு சடையுண்டு கொட்டையுண்டு மரவுரியன்
சிவன்: பிடித்தது போல சடைமுடி உண்டு, கழுத்தில் ருத்திராக்ஷ கொட்டை அணிந்தவன், முனிவர்களுக்கான மரவுரி என்னும் ஆடை அணிந்தவன்
பலா: சுளையைச் சுற்றிலும் சடை போன்றவற்றால் பிடிக்கப்பட்டது, பலாச் சுளையில் கொட்டையிருக்கும், மரத்தில் காய்ப்பது பலா

பருத்ததைப் பெற்றவன் தேமதுரன் நாவிற்கினியவன்

சிவன்: பருமனான விநாயகரைப் பெற்றவன், அடியவர்க்கு இனியவன், திருநாவுக்கரசருக்குப் பிடித்தமானவன்
பலா: பலா அளவில் பெருத்ததாகும், இனிப்பானது, நாவிற்கு சுவையானது

பிரம்படி பெற்றுப் பழுப்பன் கராமா வாழ் காளமேகன் சிலேடை

சிவன்: சிவ லீலையில் பிட்டிற்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பழுத்த வேடதாரி
பலா: பலாவைப் பிரம்பால் அடித்தால் பழுக்கும்

உருப்படியாய் செய்வது பாலாவையும் பரமசிவனையுமா?

செய்யுள் முற்று முத்திரை வாக்கியம்

சிலேடைக்கவி - சம்சாரமும் மின்சாரமும்

சிலேடைக்கவி - சம்சாரமும் மின்சாரமும்

சுடும் தூக்கியடிக்கும் தரையில் விழுகையில் விளக்கணையும்
உள்ளே ஓடுவது ஒருத்தனுக்கும் புரியாது - எரிந்து விழும்
உலோகம் விரும்பும் தடிக்குப் படியாது மேல் உடுக்கும்
பாதுகாப்பின்றி அணுகாதே பெண்ணையும் மின்னையும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி- பழைய சோறும் சினிமா நடிகனும்

சிலேடைக்கவி- பழைய சோறும் சினிமா நடிகனும்

பாத்திரமது பற்றும் பழையதானால் புளிக்கும்
சமயத்திற்குதவும் இரவில் நீரில் மூழ்கும் காலையில்
தெளியும் துணையுடனிருந்தால் சிறக்கும் கூட்டம்
ஈயென்று மொய்க்கும் நடிகன் சமம் பழைய சோற்றிற்கே

விளக்கம்:

பாத்திரமது பற்றும் பழையதானால் புளிக்கும்
பழைய சோறு: பாத்திரத்தின் அடியில் தங்கும் பழைய சோறு பற்று எனப்படும், நாளான சோறு புளிக்கும்
நடிகன்: நடிக்கும் பாத்திரத்தை உணர்ந்து நடிப்பார், ஒரே மாதிரி நீண்ட நாள் நடித்தால் நடிப்பு புளித்துப் போகும்

சமயத்திற்குதவும் இரவில் நீரில் மூழ்கும்
பழைய சோறு: காலையில் உண்ண உதவும், மீந்த சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்
நடிகன்: நடிகர்கள் அவர்கள் சார்ந்த சாதிக்குதவுவார்கள், இரவில் குளிப்பார்கள் (அல்லது குடிப்பார்கள்)

காலையில் தெளியும் துணையுடனிருந்தால் சிறக்கும் கூட்டம்
பழைய சோறு: காலையில் பாத்திரம் திறந்தால் சோறு கீழேயும் நீர்த் தெளிந்து மேலேயும் காணும், ஊறுகாயின் துணையிருந்தால் உண்பதில் சிறப்பிருக்கும்
நடிகன்: காலை நேரம் தெளிவாக இருப்பார், துணை நடிகர்கள் உடன் நடிக்கையில் நடிகன் பாத்திரம் சிறப்பாய் விளங்கும்

ஈயென்று மொய்க்கும் நடிகன் சமம் பழைய சோற்றிற்கே
பழைய சோறு: சோற்றுச் சட்டியைத் திறந்தால் ஈக்கள் மொய்க்கும்
நடிகன்: நடிகனைச் சுற்றிலும் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும் அல்லது எதாவது கொடை கொடு என்று கேட்டு சுற்றி வரும்

:::நாகராஜன்:::