மொத்தப் பக்கக்காட்சிகள்

25 மார்., 2008

சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்


சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
அன்னைக்குமரியாய் , கொட்டிலில் பிறப்பாய், இடையன் கையில்
கோலும், விரித்த சடையும், உள்ளமுள்ளும் அறப்போரில்
முன்னும் சீடர்கள் உடன் உணவருந்தி, இருவரும் ஒருவனே..

:::நாகராஜன்::;

விளக்கம்:

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
வேதம் (மறை) உரைத்தது கண்ணனும் கிறிஸ்துவும்
கடமையை செய் பாவங்கள் நான் சுமக்கிறேன் என்றனர் இருவரும்

அன்னைக்குமரியாய்
அன்னை குமரி - கிறிஸ்துவின் தாய் மரியாள் கன்னியாவாள்
அன்னைக்கும் அரியாய் (தன் பிறப்பை தாய்க்கு வாயில் மண்ணுண்டு உலகம் காட்டியது கண்ணன்)

கொட்டிலில் பிறப்பாய்
ஒருவர் மாட்டுத் கொட்டிலிலும் மற்றவர் சிறைக் கொட்டிலிலும் உதித்தவர்கள்

இடையன் கையில் கோலும்
இருவரும் விலங்கு மேய்த்த இடையர்கள் - ஒருவர் ஆடும் மற்றவர் மாடும்
ஒருவர் கையில் கம்பெனும் கோலும் மற்றவர் கையில் குழல் எனும் கோலும்

விரித்த சடையும்,
நாம் காணும் இரு பிம்பங்களும் திருத்தா முடியுடன் இருபபதாய்க் காண்கிறோம்

உள்ளமுள்ளும்
ஆணி அடித்து சிலுவையில் அறைந்ததில் உள்ள முள் வடுக்களும் உடைய கிறிஸ்துவும்
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் அழகனுமான கண்ணன்

அறப்போரில் முன்னும்
படைத்தவன் பெருமை பேசி சரணகதம் செய்ய முன்னின்று புரட்சி செய்த ஏசு
பாண்டவர் போரில் சாரதியாய் முன் நின்றவன் கண்ணன்

சீடர்கள் உடன் உணவருந்தி,
சிறிய ரொட்டித்துண்டினை பகிர்ந்தளித்தவர் ஏசுபிரான்
தன்னுடன் இருந்த பொடியன்களுடன் வெண்ணெய் உண்டவன் கண்ணபிரான்

இருவரும் ஒருவனே..

கருத்துகள் இல்லை: