மொத்தப் பக்கக்காட்சிகள்

25 மார்., 2008

இராமாயணம்....

இராமாயணம்

பத்துத் தேரோன் மகன் பத்தினிக்குப் பதியானவன் பத்தினியை
பத்துத் தலையன் பத்திஎடுத்து பறந்து போனான் - பத்தால்
அணையும் பத்தன் பத்த வைத்து போனபின் பத்தினியும் பதியும்
இணைந்ததைப் பத்தி பத்தியோடு சொன்னவன் பத்தன்


:::நாகராஜன்::::


இராமாயணம் - விளக்கம்

பத்துத் தேரோன் மகன் – தச (பத்து) ரதன் (தேரோன்) மகன்
பத்தினிக்குப் பதியானவன் - சீதைக்குக் கணவனான ராமன்
பத்தினியை பத்துத் தலையன் - சீதையை ராவணன்
பத்திஎடுத்து பறந்து போனான் - பற்றிஎடுத்து பறந்து போனான்
பத்தால் அணையும் பத்தன் - பற்றால் அணையும் பக்தன் ஹனுமான்
பத்த வைத்து போனபின் - வாளால் இலங்கையைப் பற்றவைத்து போனபின் பத்தினியும் பதியும் - ராமனும் சீதையும்
இணைந்ததைப் பத்தி - இணைந்ததைப் பற்றி
பத்தியோடு சொன்னவன் பத்தன் - பக்தியோடு சொன்னவன் பக்தன் வால்மீகி

கருத்துகள் இல்லை: