மொத்தப் பக்கக்காட்சிகள்

25 மார்., 2008


தலைப்புகூட வேண்டுமா?

எம்ஜியார் நம்பியார் என்டியார்
சிவாஜி பாலாஜி சாயாஜி
ரஜினி நளினி பரணி
விசித்ரா சுசித்ரா சுமித்ரா

வனிதா சரிதா வினிதா
சுஜிதா சாஜிதா சுஜாதா
ராதிகா ஜோதிகா தேவிகா
பூமிகா சரிகா கோபிகா

அஜய் விஜய் ஜெய்
அஜீத் சஜித் சுஜித்
சுரேஷ் ரமேஷ் உமேஷ்
நாகேஷ் ராஜேஷ் லோகேஷ்

அகல்யா சரண்யா சுகன்யா
சுஷ்மிதா மதுமிதா மம்தா

நமீதா ஸ்மீதா ஸ்ரீஜா பூஜா
வாணிஸ்ரீ ராஜஸ்ரீ பாக்யஸ்ரீ

தங்கர் சங்கர் ரவீந்தர்
பாலசந்தர் ரவிச்சந்தர் சரத்சந்தர்
சந்திரகலா சூர்யகலா மேகலா
அருண் வருண் தருண்

அமலா விமலா கமலா
வனஜா ஜலஜா கிரிஜா
ரஜினிகாந்த் நளினிகாந்த் விஜயகாந்த்
சுந்தராஜன் சௌந்தராஜன் ராமராஜன்

சரோஜா ரோஜா ஹாஜா
யுவராணி கலைவாணி கல்யாணி
முரளி சுருளி சார்லி
கலா நிலா கஜாலா

வசந்த் சுமந்த் நிஷாந்த்
சிவகுமார் சுகுமார் விஜயகுமார்
ரவிக்குமார் சரத்குமார் சக்திகுமார்
அசின் சிம்ரன் சுஹாசினி
நதியா காவ்யா பாக்யா

பாரதிராஜா பாக்கியாரஜா பாண்டியராஜா
ராஜ்கிரண் உதய்கிரண் கிரண்
விவேக் விக்ரம் விஷ்ணு
சிங்காரம் சீனிவாசன் கமல்ஹாசன்

மனோகர் சுதாகர் பிரபாகர்
கவுண்டமணி போண்டாமணி
குள்ளமணி குண்டுமணி

மாதவன் ராகவன்
சந்திரன் இந்திரன்
தங்கவேலு வடிவேலு
ஐ ஆர் எஸ் ஏ ஆர் எஸ்

எஸ் எஸ் ஆர் டி ஆர்
பார்த்திபன் கார்த்திக்
கசன்கான் ரியாஸ்கான்
மோகன் ஜகன்

அஜீத் ரஞ்சித்
விஜய் பாபு சோபன் பாபு
த்ரிஷா உஷா
ஆஷா நிஷா

பாபிலோனா கல்பனா
சித்ரா உத்ரா
ஜெயஸ்ரீ சதிஸ்ரீ
கலாஸ்ரீ மாலாஸ்ரீ

சுபஸ்ரீ ஸ்ரீ
சாந்தி காந்தி
சுப்ரியா ஸ்ரீப்ரியா
லக்ஷ்மி மகாலக்ஷ்மி


ராஜேஸ்வரி புவனேஸ்வரி
சுப்பு லக்ஷ்மி ஜெயலக்ஷ்மி
சந்திரா வசுந்தரா
சுந்தர் சௌந்தர்
நாசர் ஈஸ்வர்

மதுபாலா விதுபாலா

மனோபாலா சிங்பாலா
மனோரமா பிரபாரமா

ரமா உமா சுமா

லதா சுதா சதா

விஜய்பாபு சரத்பாபு மதன்பாபு

தேவன் ராஜன்தேவன் மஹாதேவன்


அய்யயோ சாமி
ஆளை விடுங்கோ....

:::நாகராஜன்::::

இராமாயணம்....

இராமாயணம்

பத்துத் தேரோன் மகன் பத்தினிக்குப் பதியானவன் பத்தினியை
பத்துத் தலையன் பத்திஎடுத்து பறந்து போனான் - பத்தால்
அணையும் பத்தன் பத்த வைத்து போனபின் பத்தினியும் பதியும்
இணைந்ததைப் பத்தி பத்தியோடு சொன்னவன் பத்தன்


:::நாகராஜன்::::


இராமாயணம் - விளக்கம்

பத்துத் தேரோன் மகன் – தச (பத்து) ரதன் (தேரோன்) மகன்
பத்தினிக்குப் பதியானவன் - சீதைக்குக் கணவனான ராமன்
பத்தினியை பத்துத் தலையன் - சீதையை ராவணன்
பத்திஎடுத்து பறந்து போனான் - பற்றிஎடுத்து பறந்து போனான்
பத்தால் அணையும் பத்தன் - பற்றால் அணையும் பக்தன் ஹனுமான்
பத்த வைத்து போனபின் - வாளால் இலங்கையைப் பற்றவைத்து போனபின் பத்தினியும் பதியும் - ராமனும் சீதையும்
இணைந்ததைப் பத்தி - இணைந்ததைப் பற்றி
பத்தியோடு சொன்னவன் பத்தன் - பக்தியோடு சொன்னவன் பக்தன் வால்மீகி

சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்


சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
அன்னைக்குமரியாய் , கொட்டிலில் பிறப்பாய், இடையன் கையில்
கோலும், விரித்த சடையும், உள்ளமுள்ளும் அறப்போரில்
முன்னும் சீடர்கள் உடன் உணவருந்தி, இருவரும் ஒருவனே..

:::நாகராஜன்::;

விளக்கம்:

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
வேதம் (மறை) உரைத்தது கண்ணனும் கிறிஸ்துவும்
கடமையை செய் பாவங்கள் நான் சுமக்கிறேன் என்றனர் இருவரும்

அன்னைக்குமரியாய்
அன்னை குமரி - கிறிஸ்துவின் தாய் மரியாள் கன்னியாவாள்
அன்னைக்கும் அரியாய் (தன் பிறப்பை தாய்க்கு வாயில் மண்ணுண்டு உலகம் காட்டியது கண்ணன்)

கொட்டிலில் பிறப்பாய்
ஒருவர் மாட்டுத் கொட்டிலிலும் மற்றவர் சிறைக் கொட்டிலிலும் உதித்தவர்கள்

இடையன் கையில் கோலும்
இருவரும் விலங்கு மேய்த்த இடையர்கள் - ஒருவர் ஆடும் மற்றவர் மாடும்
ஒருவர் கையில் கம்பெனும் கோலும் மற்றவர் கையில் குழல் எனும் கோலும்

விரித்த சடையும்,
நாம் காணும் இரு பிம்பங்களும் திருத்தா முடியுடன் இருபபதாய்க் காண்கிறோம்

உள்ளமுள்ளும்
ஆணி அடித்து சிலுவையில் அறைந்ததில் உள்ள முள் வடுக்களும் உடைய கிறிஸ்துவும்
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் அழகனுமான கண்ணன்

அறப்போரில் முன்னும்
படைத்தவன் பெருமை பேசி சரணகதம் செய்ய முன்னின்று புரட்சி செய்த ஏசு
பாண்டவர் போரில் சாரதியாய் முன் நின்றவன் கண்ணன்

சீடர்கள் உடன் உணவருந்தி,
சிறிய ரொட்டித்துண்டினை பகிர்ந்தளித்தவர் ஏசுபிரான்
தன்னுடன் இருந்த பொடியன்களுடன் வெண்ணெய் உண்டவன் கண்ணபிரான்

இருவரும் ஒருவனே..

எல்லாம் நீ சிவனே....

எல்லாம் நீ சிவனே....

கற்றாளை கற்றாழை எண்ணாது
கற்றாளின் நற்றாளைப் பற்றியால்
அற்றாளின் உற்றால் உண்டதால்
பெற்றாளின் உற்றது பொற்றாள்

வேசிதொட்டால் அறும்பற்றென
நீசனெனை பொருப்பற்றாக்கி
கடையில் உனை விருப்புற்றாக்கி
என்னென்பேன் எனை பற்றாக்கியதில்...

கெட்ட குடி தொட்டமுளை
அம்முட்ட நட்ட குழி
இம்முட்ட நீரிட்டலை நான்
அடித்தே தோற்பதென்னாளோ ?

இடைதடவி முலையருந்தி
பீக்குடல் மேலமர்ந்த்துருத்தி
புணர்ந்துணரும் சிற்றின்பக்
கழிவாயில் மறப்பதென்னாளோ ?

பட்டினத்து செட்டியைப்போல்
பலகொடுத்து நாயடியனை
நினைவெல்லாம் கசிந்துருக
செய்தவனை காண்பதென்னாளோ?

நூலில் ஊசிபோல நீரில் பாசிபோல
காசில் வேசிபோல காவில் தாசிபோல
காடேறும் உடலுடன் வாரா
பந்தம் அறுப்பது என்னாளோ ?

சீவனும் சிவனும் ஒன்றேயறி
உயிர் வேரறி வலியுடல் புறம் எறி
வரமும் வானமும் பெறவேன்றரி
உடல் ஒரு பழுதென்றேயறி


புழுத்து புழுதியில் போகுமுடல்
கரித்து எழுதீயில் வேகுமுடல்
இழுத்து சுழியில் போகுமுடல்
கழுத்தில் சுருக்கையில் போகுமுடல்

வாலறி வாலறு
பலனறி புலனறி
புரியும் அவனறி


வான் செயல் நாதன்
செயல்தானென்றறி

வாலறி புலனறி
பொறியறி புகலறி
வானறி விரியறி

கோளறி குறியறி
திரிமுனியறி
துணையறி பொறியே


மண்ணெடுத்து பசை கலந்து
எண்ணற்ற குழிசெய்து மண்ணை
தீயிட்டுப் பொசுக்கி கசடகற்றி
காற்றிட்டு கடினப்படுத்தி குழம்பினை
ஊற்றிட்டு வார்த்ததை நீரிட்டணைத்து
வானில் பறக்கவிட்ட ஞானமே
விஞ்ஞானமாம்....

மண்ணாய் தீயாய்
காற்றாய் நீராய்
வெளியாய் ஆகிய நீயே...

என்னை எடுத்து பற்று கலந்து
என்னில் மண்ணை நிறைத்து
சுட்டு ஊதி நீராட்டி வானில்
பறக்கவைத்து என்னில் உன்னை
உணர வைத்தது மெய்ஞானமா?

இல்லையெனில் ....

உன்னை உருக்கி வடித்து
உன்னை அறுத்து உன்னைக் கொண்டு
பொசுக்கி உன்னைக்கொண்டு வடித்து
நீயால் தணித்து உன் சக்தியை
உபயோகித்து நீயாய் நிற்கும்
காற்றை உருவாக்குதல் விஞ்ஞானமா?

நாதம் நீ பூதம் நீ
வேதம் நீ கீதம் நீ

அலையாய் சிலையாய்
அனலாய் கனலாய்
காற்றாய் ஊற்றாய்
அடியாய் முடியாய்
தளையாய் விளையாய்
தாயாய் தீயாய்
தந்தையாய் விந்தையாய்
ஒளியாய் ஒலியாய்
வழியாய் வளியாய்
மீனாய் மானாய்
மண்ணாய் விண்ணாய்
கண்ணாய் எண்ணாய்
அருளாய் பொருளாய்
மழையாய் விழையாய்
மதியாய் நதியாய்
விதியாய் கதியாய்
அரமாய் உரமாய்
மரமாய் சரமாய்

அகமாய் இகமாய்
ஏகமாய் ஊகமாய்
இணையாய் துணையாய்
அணையாய் கணையாய்

அணியாய் மணியாய்
கணியாய் தணியாய்
யாதுமாய் ஏதுமாய்
ஜோதியாய் வாதியாய்
ஆதியாய் நீதியாய்
எடுப்பதும் நீ அடுப்பதும் நீ
கொடுப்பதும் நீ தடுப்பதும் நீ

வரம் நீ கரம் நீ
புறம் நீ அறம் நீ

உன்னை எடுத்து உன்னை
வடித்து உன்னை பிரித்து
உன்னை வெட்டி உன்னை ஒட்டி
உன்னை அணைத்து உன்னை தகித்து
உன்னை வடிவாக்கி உன்னை கைமாற்றும்
வித்தை தந்தாய்

எல்லாம் நீ எதுவும் நீ
எதிலும் நீ எங்கும் நீ

நான் செய்யும் ஒரொரு பொருளிலும்
நீ தானென்று உணர்த்துகிறாய்

வான் பரந்து ஆளும் சிவனே
நான் என்பது நானல்ல
நீஎன்பதை உணர்ந்தேன் அல்லால்
நீ வடித்த இவ்வுடல் சிவனே
சிறிய நேரம் தங்கிடல் மட்டுமே
காற்று வாங்கி நீரடக்கி சிவனே
மண்ணுண்டு வெப்பம் சீராக்கி
உயிர் அடங்கும் கட்டிடத்தில்
தங்கிப் போகும் சிலநாளே...சிவனே

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

மூக்கணாங்கயிறுண்டு முகத்தில் பட்டமுண்டு அடிக்கடி
தலையசைக்கும் அடி வாங்கி தோல் தடிக்கும்
அனாவசியமாய் சிலிர்க்கும் உழைத்துதேயும் பாரம் சுமக்கும்
வினா கேட்காமல் எருமையும் அருமை மணவாளனும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

அட்டை உள் அடங்கும், இரு பக்கமுண்டு, தெளிந்த நீரோடை
புரிதல் போலுண்டு, படித் துறையுண்டு, சிறுவர் தோள்
சேர்ந்து களிக்கும், ஞானமென்பார், கரையிலவென்பார்
ஒழுகும் ஆறும் நூலும் ஒன்றே என்பான் கராமா காளமேகன்.

:::நாகராஜன்:::