மொத்தப் பக்கக்காட்சிகள்

15 பிப்., 2008

ஒளிக்கவிதை - ஷபீர் அஹ்மத்




நட்சத்திரங்களைப் பறித்துவிட்டு
வானத்தில் தோரணம் கட்டியது யார்?
மலைக்கும் மேகத்துக்கும் கல்யாணமோ?
- ஷபீர் அஹ்மத்

ஒளிக்கவிதை - :::நாகராஜன்:::



மழைக்கும் மேகத்திற்கும் மறுமணமோ....
மலைக்கும் மாலைக்கும் தோரணமோ...

வர்ணத்தை நூல் கட்டி விட்டது யார்..
பட்டொளி வீசிப் பறக்குது பார்....

மேகத்தின் கொடையோ பன்னீர் அருவிகள்
மலை வகுத்த வழியோ வெள்ளிச்சரிகைகள்..

பொழிந்தது போதும் மருதத்தில் மேகமே...
வா கிராமத்துப்பக்கம் தீர்க்க எம் தாகமே..

சீக்கிரம் வா முடிந்து போனது உன்
திருமணமும் முதல் இரவும்....

வராவிட்டால் உன்னை வரவைக்க கிராமத்தில்
செய்வோம் கழுதைக்கு கல்யாணம்..

::::நாகராஜன்:::

கொடை....:::நாகராஜன்:::

செய்தி:

அதியமான் கோட்டையில் நக்சலைட்டுகள் ஸ்டேஷன் புகுந்துத் துப்பாக்கித் திருடியதில் போலீஸ்காரர்கள் உடந்தை..

நன்றி- சன் டிவி


கொடை:
தனக்கு வேண்டாம் நெடுவாழ்வு

உனக்குத்தந்தான் ஔவையே நெல்லிக்கனி...


விடுமோ வள்ளல்தன்மை

அதியமான் ஆண்ட நாட்டில்...

தமிழ் மாநிலக் காவலருக்கு
தப்பில்லை போலும்....

திருடனுக்கு துப்பாக்கித்

தூக்கித் தந்தாலும்....


:::நாகராஜன்:::

சங்கக் கவிதைகள்....வ. மதிவாணன் - சிங்கப்பூர்

சங்கக் கவிதைகள்....
இப்படியும் கூட யோசிக்க முடியுமா?

ரொம்ப ஆச்சர்யமாகவும் அதே சமயத்திலே

enjoyable ஆகவும் இருந்தது..


வ. மதிவாணன் - சிங்கப்பூர்

ஏ ஃபார் ஆப்பிள்

பி ஃபார் பிக் ஆப்பிள்

சி ஃபார் சின்ன ஆப்பிள்

டி ஃபார் டபுள் ஆப்பிள்

ஈ ஃபார் இன்னொரு ஆப்பிள்
- ஆப்பிளை அறுத்து வைத்து திங்காமல்யோசிப்போர் சங்கம்

என்னதான் பூமி சூரியனைச்

சுற்றிச் சுற்றி வந்தாலும்

பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...

- நாசா வில் வேலை வாங்கத் துடிப்போர் சங்கம்


பவர் ஃபைல்யூருக்கும்

லவ் ஃபைல்யூருக்கும்

என்ன ஒற்றுமை? ....
பவர் ஃபைல்யூர் ஆனால்

வீடு இருட்டாகும்

லவ் ஃபைல்யூர் ஆனால்

வாழ்க்கை வெளிச்சமாகும்...


- பிரம்மச்சாரிகள் சங்கம்

(தலைமை இடம்: வெளி நாடு..)


சங்க முழக்கங்கள்


விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல

பரிட்சையில் பிட்டுக்கொடுப்பதும் நட்பேயாம்....


- மிட்நைட்டில் படித்தும் மண்டையில் ஏறாதோர் சங்கம்

இந்தியாவில்...

தோண்டினால் தங்கம் கிடைக்கும்

வெட்டினால் வெள்ளி கிடைக்கும்

அடித்தால் அலுமினியம் கிடைக்கும் ஆனால்

படித்தால் மட்டும் வேலை கிடைக்காது..


- வேலையில்லாமல் யோசிப்போர் சங்கம்


என்னதான் தீனி போட்டு

கோழி வளர்த்தாலும்

அது முட்டைதான் போடும்

100/100 போடாது

- கையேந்தி பவனில் கோழிக்கால் சாப்பிடுவோர் சங்கம்

என்னைப்பார் யோகம் வரும்

ஃபிகரைப்பார் சோகம் வரும்


- ஃபிகரு வந்தாலும் பார்க்கததுபோல் நடிப்பவர் சங்கம்


- தொகுப்பு: மணிவண்ணன்

அனுப்பியவர்: எஸ். வாசுதேவன் , சிங்கப்பூர்

கடவுள் வந்திருந்தார்...:::நாகராஜன்:::

கடவுள் வந்திருந்தார்...

காலம் பல கடந்தாலும்
கடவுள் இங்கே வந்திருந்தார்...

கூப்பிட்டதும் வாராமல் காலம் கடந்தே
வந்தார்... கடமை நிறைய இருந்ததென்றார்...

கடவுளுக்கில்லை கையும் காலும்..
காலண்டர் அச்சில் நான் கண்டது போல...

கடவுளுக்கில்லை மெய்யில் வடுக்கள்
கடவுளுக்கில்லை வெறும் கை மட்டும்...

கடவுள் இல்லை ஆண் பெண் வடிவாய்..
கடவுள் இல்லை உயர்த்திய கைகளாய்..

கடவுள் வந்தார் ஓர் ஒளி வடிவாய்... முகமில்லை
அவர்க்கு... இடையில் மொழியில்லை எமக்கு ..

ஒளி ஊடகம் சென்றது என்னுள்ளே.. என்
உள்ளம் உணர்ந்தது கடவுள் மொழி..

மௌனமாய் இருந்தோம் சில மணித்துளிகள் ..
கேட்பதைக் கேள் என்றார் நம் கடவுள்...

எங்கே இருக்கிறாய் நீ என்றேன்...வானத்தில்
இருக்கிறேன் எனவில்லை அவன்...

விளித்தால் ஏன் வருவதில்லை என்றேன்
விளிப்பவர்க்கு இல்லை தகுதி என்றான்...

உன்னை எங்கே காண்பேன் இனி என்றேன்..
காணும் இடம் என்று ஒரு பட்டியல் தந்தான்...

ஏழைக்கு இடும் உணவில், ஒரு குழந்தையின்
சிரிப்பில், வறியவனுக்குதவும் வழிமுறைகளில்..

பெற்றோர் இழந்த பிள்ளையில், கணவனில்லாப் பெண்ணில்
ஏய்ச்சிப்பிழைக்கா எஜமானன், ஏமாற்றாத மாந்தரிடம்,

கற்றுக்கொடுத்த குருவிடம் பெற்ற வயிற்றுக் கருவிடம்
பற்றில்லா பக்தனிடம் சிற்றின்பம் அற்றவனிடம்..

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவன்
தாரம் இழந்த பெண்ணை மதித்தவன்

பட்சி மிருகத்தோடு பகையற்றவன், பணத்திற்காய்
பாசம் கொடுக்காதவன், பெற்றவரை மறக்காதவன்

கல்விக்கு உதவியவன், கடமைக்குத் தயங்காதவன்
வலி உணர்ந்த வலியவன் வழக்காடப் போகாதவன்

வாக்கில் சுத்தம் உண்டானவன் வேசிக்கு உதவியவன்
வாய்மையின் வலிமையை உணர்ந்தவன்

பகைவனை நேசித்தவன் பசியறிந்து கொடுத்தவன்,
பாத்திரம் அறிந்து பிச்சையிட்டவன்

அடுத்தவன் மனையை விரும்பாதவன்
ஆலய சொத்தை அபகரிக்காதவன்

உருவின்றி அருவிலும் அருவற்ற
உருவிலும் புல்லாய் பூண்டாய் புழுவாய்

மரமாய் மீனாய்ப் பறவையாய் பாம்பாய்
விலங்காய் மனிதனாய் பூதமாய்..

வானாகி மண்ணாகி ஒளியாகி வளியாகி
ஊணாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்..

ஒலியாகி வழியாகி விருத்தமாய் செய்யுளாய்
விதியாய் விளக்கமாய் விளங்காமலாய்

அத்தனை இடத்திலும் என்னைப் பார்ப்பாய்...
புத்தனை போல் அந்தச் சித்தனைப் போல்..

இங்கெல்லாம் தேடாமல் வேறெங்கும் தேடாதே...
இங்கில்லைஎன்றால் எங்கும் இல்லை மறவாதே...

புரிந்தது எனக்கு.. புரியவில்லை எனக்கு..
ஒளி மறைந்தது ஓரிரு நிமிடத்தில்....

கடவுள் வந்திருந்தார்... என் கண்களைத் திறந்திருந்தார்..
எங்கும் இருக்கிறேன் என்றது இதுதானோ?....

:::நாகராஜன்:::