மொத்தப் பக்கக்காட்சிகள்

18 ஜன., 2008

சென்னை என்னும் மாநகரம்....:::நாகராஜன்:::

விலைகொடுத்து வாங்கலின்றி வேறேதும் இல்லை
வியர்வைக்கு எந்நேரமும் பஞ்சமில்லை...

தெருவெல்லாம் ஜனக் கூட்டம்...
சந்து பொந்தெல்லாம் மூத்திர நாற்றம்...

கூவம் என்னும் பெருநகர் பேரோடை
நடைபதைக்குள் புகும் நகரப்பேருந்து...

அழுகின காய்க்கு ஜாம் பஜாரோ பாண்டி பஜாரோ..
ஆப்பம் பாயாவிற்கு தள்ளுவண்டி கையேந்திபவன்...

ஒழுங்கு வரிசையில் டாஸ்மாக்கில் மக்கள்
நெரிசலிலும் நகைவாங்கும் உஸ்மான் ரோட்டில் நங்கைகள்...

ஹார்ன் அடித்து அதிரவைக்கும் டூ வீலர்கள்
படிக்கட்டுத் தேய தார் ரோடு கீரலிட்டு பல்லவன் பஸ்...

புகுந்து புயலாய்ப் போகும் ஆட்டோ ரிக்க்ஷா ...
புகைக்குள் புதைந்த வீதிகள் தந்தது கண்ணெரிச்சல் மட்டும்...

வெளிநாட்டு சாமானை இன்னும் வாங்கும் பர்மா பஜார்
தேங்கியதை தலையில் கட்டும் நடைபாதை வியாபாரி....

தேடிச்சென்று காற்று வாங்கும் கடற்கரை கூட்டம்
திருட்டுக் கொடுத்து திரும்பி வர ரயில் வண்டி...

காணாமல் போய் திரும்பி வரும் கண்ணகி சிலைகள்
அடுத்த தலைவனுக்கு காத்திருக்கும் சமாதி வரிசை...

கெட்டும் பட்டினம் சேர்வதா இல்லை
கெட்டுப்போன பட்டினம் சேர்வதா?

ஒரு நாள் பயணத்தில் போதுமடா சாமி பட்டினம் ...
பிச்சை எடுத்தாலும் பரதேசம் பரதேசம்தான்....

::::நாகராஜன்::::

துணுக்குக் கவிதைகள் -ஷபீர் அஹ்மத்

சென்னை கடற்கரையில் ...

பிசசை கேட்டசிறுவனுக்கு ஒரு ரூபாய்மறுப்பு!
சுண்டல்காரனுக்குக்கொடுக்கும் போது
பறந்தே போயிற்றுபத்து ரூபாய் நோட்டு!!


மும்பை பஸ்ஸில்...

கர்ப்பவதிக்குஉட்கார இடம் இல்லயா?
கொடுத்துவிட்டுக் கேட்டேன்.
எத்தனை மாதம்?
அரை மணி நேரம்!

துபாய் ரோட்டில்....

நடந்து கொண்டிருந்த நண்பனை
காரிலிருந்து அழைத்தேன்.
வா. உனை drop செய்கிறேன்.
வேண்டாம்நான்
அவசரமாபோகணும்!