மொத்தப் பக்கக்காட்சிகள்

11 மார்., 2008

தமிழ் மீது கைவைக்காதே...

தமிழ் மீது கைவைக்காதே...

காதலித்தாய்
கைவிட்டாள்
தாடி வைத்தாய்
தண்ணி அடித்தாய்
அடுத்த பெண்ணிடம்
தோற்ற கதை சொல்லி
கல்யாணம் செய்தாய்
அப்புறம் ஏனடா
தமிழ் மீது கைவைத்து
கவிதைஎழுதி கொல்கிறாய்?

:::நாகராஜன்:::

அவள்... ஷபீர் அஹ்மத்

அவள் புன்னகையை

கனவில் கண்டேன்

அதனால்தானோ

கதறிக்கொண்டு எழுந்தேன்?

------------ --------- --------- ---//---- --------- --------- -------
ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலையுதிர்காலம்

தொலைவில் அவள் முகம் பார்த்தேன்

அப்புறம்தான் இவள முகம் கண்டேன்

பல்டியடித்தேன் நானே.

------------ --------- --------- --------- ----//--- --------- --------- --------
நீண்ட நாள்
கனவில் வந்தாய்
நேற்றுதான்
நேரில் வந்தாய்
சுவாசமே ஸ்தம்பித்ததடி!

சாணம் ஏன் மிதித்து வந்தாய்?
------------ --------- --------- -------// --------- --------- --------- -
உன் போன்ற காதலி

எல்லோருக்கும்
கிடைக்க வேண்டும் யான்

பெற்ற அவஸ்தை பெறுக

இவ்வகிலம்
------------ --------- --------- --------- ----//--- --------- --------- ------
இன்று நான் அவளை

சொர்க்கத்தில் சந்தித்தேன்
இதயத்தில் கூக்குரல்

இங்கேயும் நரகமா?
------------ --------- --------- --------- --//----- --------- -------

ஷபீர் அஹ்மத்

மனிதா!....ஷபீர் அஹ்மத்

மனிதா!
நீ பொய்யனா பித்தனாகபடனா கசடனா

மழலைப் பருவத்தை மடைமையில் கழித்தாய்மடைமை தெளிந்ததும் விளையாட்டில் திளைத்தாய்

கல்வியின் காலங்களில் களவியல் வாசித்தாய்களவியல் தேர்ந்ததும் காதலை யோசித்தாய்

வாலிப வீரியத்தில் உணர்ச்சிகள் பிரதானம்உணர்ச்சிகள் வேகத்தில் உடலுக்கும் சமாதானம்

இதயங்கள் மறுத்துவிட்டு உருவங்கள் நேசித்தாய்உருவங்கள் தளர்ந்தபின் உள்ளங்கள் யாசித்தாய்

காதலிக்க வேண்டும் ஒரு கட்டுடல் மாதவிகைபிடிக்க மட்டும் தேவை குணத்துடன் கண்ணகி

பிழைப்புதேடி பறந்தபோது பெற்றவரை மறந்தாய்
பெற்றமக்கள் பிரிந்ததும் பிள்ளைப்பாசம் பேசினாய்

சுற்றங்கள் வந்தபோது செல்வங்கள் தேடினாய்செல்வங்கள் பொய்த்தபின் சொந்தங்கள் நாடினாய்

இருக்கும் வரையிலும் இன்பமே நாடிநின்றாய் இறக்கும் தருணத்தில் இறைவனைத் தேடுகின்றாய்

-ஷபீர் அஹ்மத்

பிரமிடு கவிதை

.
வா
சேர்
இதழ்
முத்தம்
உதடணை
பிடியிறுக்கு
கையளைத்துபார்
குழந்தையாய் மாறி


:::நாகராஜன்:::

வினையெழுத்துக் கவிதை.....:::நாகராஜன்:::

வினையெழுத்துக் கவிதை.....

பிற பாலுக்கழு
முகம் நோக்கிச் சிரி
தவழ் நட ஓடு
பாடம் படி தேர்வெழுது
விளையாடு சண்டையிடு

தெருப் பெண்களிடம்
செட்டைசெய் வம்பிழு
தொட்டுப்பார் புகைப்பிடி
மையால் மீசை வரை
படியில் தொங்கு பிரயாணி

கல்லூரி சேர் நண்பனைப்பெறு
காதலி பெண்ணைப் புரி
பிரி வருந்து மீண்டும்
சேர்கையில் மகிழ்
வாழ்க்கைப் பாதைக்குள் வா

வேலைக்கு அலை பணம் பார்
ஒண்ட ஓர் கூரை செய்
கல்யாணம் செய் பிள்ளை பெறு
வாலிபம் விலகு பொருள்
சேர் வித்தை அறி

உலகம் சுற்று அனுபவி
போகி மோகி பின் யோகி
நாற்பதில் எல்லாம் முடி
பற்றறுத்து பரமன் பதம் பார்
பந்தம் விலக்கு வாழ்தலின் நோக்கு காண்..

இல்லையெனில்.....

அனுபவங்களை திரட்டு
அசைபோடு நினைவுகளை
இதயத்தில் உள்ளதைக்
கைக்குக் கொண்டு வா
கவிதை எழுது.. இதுபோல...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - லாட்டரியும் சினிமா நடிகையும்

சிலேடைக்கவிதை - லாட்டரியும் சினிமா நடிகையும்

குலுக்கலுண்டாம், விளம்பரமும் உண்டாம், பலர் வியந்து பாராட்ட
அதிர்ஷ்டம் தேவையாம், சுற்றிலும் கூட்டம் காண் - வலையில் விழுந்தால்
சொத்தெல்லாம் போச்சென்பார், பழக்கம் கெடுதியாம், எல்லா மாநிலமும்
இருக்கும், குலுக்கிய நாள் கடந்தால் அரைகுறையாய் வீதியில் இளிக்கும் ...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - அரியும் சிவனும் ஒன்றே...

களைதலால் தீயால் தகித்தலால் விளையுண்டாதலால்
உமி அனைத்துப் பிடிக்குமாம் வானவன் புண்ணியமாம்
சாம்பல் உரமாம் போர் உண்டாம் நீர் உண்டாம்
வம்பன் கராமா காளமேகம் சொன்னால் தப்புண்டா?

:::நாகராஜன்:::

குறிப்பு - அரி என்பது அரிசி அல்லது விஷ்ணுவாகும்

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

முண்டிருக்கும் முழக்கமிடும் கடல் கடக்கும் ஒரு பக்கமும் சேராது
இடதுசாரிக் கொள்கைப்பிடிப்பிருக்கும் - சுய அபிப்ராயமே
சொந்தம் சேர்த்த சொத்து ஏதெனத் தெரியாமல் இறக்கும்
பார்ப் புலவனும் மலையாளியும் சமமாகுமா?

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

ஒரு கூடைக்குளடங்கும், கொத்துண்டு காண், விரியும் வகை,
நாமமுண்டு, மண்ணோடுதான் வளரும், துணை சேர்கையில்
மணக்கும் என்பார், தலையின்கண் வைத்ததால், தாள்
மடிக்கப் பாலைக்காணும் பூவும் பாம்பும் ஒன்றே..


:::நாகராஜன்:::