மொத்தப் பக்கக்காட்சிகள்

11 மார்., 2008

மனிதா!....ஷபீர் அஹ்மத்

மனிதா!
நீ பொய்யனா பித்தனாகபடனா கசடனா

மழலைப் பருவத்தை மடைமையில் கழித்தாய்மடைமை தெளிந்ததும் விளையாட்டில் திளைத்தாய்

கல்வியின் காலங்களில் களவியல் வாசித்தாய்களவியல் தேர்ந்ததும் காதலை யோசித்தாய்

வாலிப வீரியத்தில் உணர்ச்சிகள் பிரதானம்உணர்ச்சிகள் வேகத்தில் உடலுக்கும் சமாதானம்

இதயங்கள் மறுத்துவிட்டு உருவங்கள் நேசித்தாய்உருவங்கள் தளர்ந்தபின் உள்ளங்கள் யாசித்தாய்

காதலிக்க வேண்டும் ஒரு கட்டுடல் மாதவிகைபிடிக்க மட்டும் தேவை குணத்துடன் கண்ணகி

பிழைப்புதேடி பறந்தபோது பெற்றவரை மறந்தாய்
பெற்றமக்கள் பிரிந்ததும் பிள்ளைப்பாசம் பேசினாய்

சுற்றங்கள் வந்தபோது செல்வங்கள் தேடினாய்செல்வங்கள் பொய்த்தபின் சொந்தங்கள் நாடினாய்

இருக்கும் வரையிலும் இன்பமே நாடிநின்றாய் இறக்கும் தருணத்தில் இறைவனைத் தேடுகின்றாய்

-ஷபீர் அஹ்மத்