மொத்தப் பக்கக்காட்சிகள்

20 பிப்., 2008

சிலேடைக்கவி - பெண்ணும் பூனையும்

சிலேடைக்கவி - பெண்ணும் பூனையும்


அடுப்படி வாசம் பிறாண்டும் குணமுண்டு மெல்ல நடக்கும்

மடியிலிடம் பிடிக்கும் வேண்டுமதற்கு மாற்றுப் பால் - கண்மூடி

நடிக்குமது இருண்டதாய் வீடகன்றுப் போகையில் துர்சகுனமாம்

நன்றாயிருப்பாயா நாகராசா பெண்ணைப் பூனையாக்கியதற்கு . ..


:::நாகராஜன்:::

சிலேடைக்கவி......:::நாகராஜன்:::

சிலேடைக்கவி

அக்காளை தொட்டவனை அடிவயிற்றில் குத்தியது கொம்பால்
அம்மாவைப்பிடித்திழுத்து அடக்கியது கம்பால் - அக்காளை
அத்தான் பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய
அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு கொம்பில் கட்டிய பணம்


பாடல் விளக்கம்


அக்காளை தொட்டவனை - அந்தக் காளையைத் தொட்டவவனை

அடிவயிற்றில் குத்தியது கொம்பால்

அம்மாவைப்பிடித்திழுத்து - அந்த மாட்டைப் பிடித்து இழுத்து

அடக்கியது கம்பால் - குச்சி கொண்டு அடக்கினார்

அக்காளை அத்தான் - அக்காளையைத்தான் அதாவது அந்தக் காளையைதான்

பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய


அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு - அந்தக் காளையை அடக்கி கயிறில் கட்டியனுக்கு மட்டுமே

கொம்பில் கட்டிய பணம் - கிடைக்குமாம் கொம்பில் சுற்றி வைக்கப்பட்ட பண முடிச்சு

இக்கவிதை அலங்கா நல்லூர் காளை பிடி விழாவை வர்ணிப்பதாகும்...

:::நாகராஜன்:::

அந்தாதித் துதி....:::நாகராஜன்:::

அந்தாதித் துதி

அபிராமி ஆத்தாளை .....
ஈசனடி அமர்ந்தாளை
வணங்கிடும் அக்காளை
ஒன்றாய் இருந்தாளை
பித்தன் இடந்த்தோளை
அனைவரையும் ஈத்தாளை
மலைமேல் உற்றாளை
கங்கை நீர் ஊற்றாளை
சூல் கையில் எடுத்தாளை
எனை மகனாய் ஏற்றாளை
அணிந்தாளை ஐந்தாழை
ஒறுத்தாரை ஒறுத்தாளை
ஓதித் தெளிந்தாளை
அண்டம் காத்தாளை
ஞானம் கொடுத்தாளை
பல்லுயிர்ச் சார்ந்தாளை
குங்கலீயம் சூழ்ந்தாளை
சேவித்தவரைத் தாழ்த்தாளை
குங்கும நிறத்தாளை
கரங்கீழ்ப் படிந்தாளை
தாளறுத்தாள் படிந்தாளை
கடைக்கண் பார்த்தாளை
பக்தனுக்குப் பித்தாளை
கரன் கரம் பிடித்தாளை
ஈசன் இடம் பிடித்தாளை
அகிலம் பூத்தாளை
பிள்ளையீர் பெற்றாளை
மோகமதை மாய்த்தாளை
பசிக்குணவு வார்த்தாளை
கடுகேனும் வெறுத்தாளை
மேனியெல்லாம் வேர்த்தாளை
பாசத்தளை அறுத்தாளை
ஓதித் துதித்தாளை
நடமாடிக் குதித்தாளை
மாரிப் பொழித்தாளை
ஆறாய் வழிந்தாளை
அசுரனை விழித்தாளை
விதியதை வகுத்தாளை
ஞானம் பகுத்தாளை
வீரம் சொரித்தாளை
மேனிபச்சை உகுத்தாளை
வெள்ளிமலை வாழ்ந்தாளை
சிவனடி வீழ்நதாளை
அந்தமாதி அற்றாளை
பகை கொள்ளாதாளை
திரண்ட ஞானத்தாளை
மேகமெனும் மானத்தாளை
மச்சமெனும் மீனத்தாளை
தவமெனும் மோனத்தாளை
மினுக்கும் மஞ்சத்தாளை
அணியுடை விஞ்சித்தாளை
கொடையிலை வஞ்சித்தாளை
இடையது இளைத்தாளை
புலிமேல் உடுத்தாளை
உடுக்கைப் பிடித்தாளை
இடுக்கண் கலைந்தாளை
புலிவாகனம் வரித்தாளை
திரிபுரம் எரித்தாளை
திரிகண்ணவனை உரித்தாளை
ஏகம்பர் தவத்தாளை
கரும்பொடு இருந்தாளை
காளத்தில் ஞானக்கொழுந்தாளை
உயிர் மெய் எழுத்தாளை
உயிர் மெய் எழுத்தாலே
பணிந்தேன் அத்தாய்த்தாளை


:::நாகராஜன்:::