மொத்தப் பக்கக்காட்சிகள்

20 பிப்., 2008

சிலேடைக்கவி......:::நாகராஜன்:::

சிலேடைக்கவி

அக்காளை தொட்டவனை அடிவயிற்றில் குத்தியது கொம்பால்
அம்மாவைப்பிடித்திழுத்து அடக்கியது கம்பால் - அக்காளை
அத்தான் பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய
அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு கொம்பில் கட்டிய பணம்


பாடல் விளக்கம்


அக்காளை தொட்டவனை - அந்தக் காளையைத் தொட்டவவனை

அடிவயிற்றில் குத்தியது கொம்பால்

அம்மாவைப்பிடித்திழுத்து - அந்த மாட்டைப் பிடித்து இழுத்து

அடக்கியது கம்பால் - குச்சி கொண்டு அடக்கினார்

அக்காளை அத்தான் - அக்காளையைத்தான் அதாவது அந்தக் காளையைதான்

பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய


அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு - அந்தக் காளையை அடக்கி கயிறில் கட்டியனுக்கு மட்டுமே

கொம்பில் கட்டிய பணம் - கிடைக்குமாம் கொம்பில் சுற்றி வைக்கப்பட்ட பண முடிச்சு

இக்கவிதை அலங்கா நல்லூர் காளை பிடி விழாவை வர்ணிப்பதாகும்...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: