மொத்தப் பக்கக்காட்சிகள்

13 பிப்., 2008

காணாமல் போனவன்...::::நாகராஜன்::::


காணாமல் போனவன்...



பெத்த மனசு பதறுதய்யா...பாவி
மகனெக் பார்க்கலியே.....

கஞ்சி குடிச்சியோ கால்வயிறு ரொப்பினயோ. ..
பொலம்பறேனே நா இங்கே வெறுஞ்சிறுக்கி ...

உறியிலே காசு களவாண்டப்போ
நீதான் எடுத்தேன்னு நினைக்கலையே ....

அருக்காணி நெக்லசை எடுத்தது நீயாம் ..
அம்பல பூட்டையும் உடைச்சதும் நீயாம்...

ஆரோ சொன்னப்ப உடம்பெல்லாம் பதறிச்சு...
போலிசு பிடிச்சப்போ உசிரே பூடிச்சு..

வெலங்கேல்லாம் பூட்டிட்டு புடிச்சிட்டு போனானாம்..
வழியெல்லாம் உன்ன உதைச்சிட்டே போனானாம்...

பெத்த மனசு பதறுதய்யா... களவாணிப்பய
குடியிருந்த கருவும் கதறுதய்யா....

என்ன கொற வச்சோமையா நாங்க ஒனக்கு...
பஞ்சத்தைக்கூட வைக்கலயே பங்கு ஒனக்கு...

போலிசு ஜெயிலிலே தப்பிச்சு போனயாமே ...
போட்டாவெல்லாம் பேப்பர்ல வந்துச்சாமே ...

பெத்த மனசு பதறுதய்யா... உன் பேரக்கேட்டா
உடம்பெல்லாம் நடுங்குதய்யா ...

பூட்டு சூட்டு போட்ட போலிஸய்யா...
நல்லாத்தான் நான் வளத்தேன் எம்புள்ளய்ய...

கண்டா சுடசொல்லி உத்தரவாமே?
கலக்டர் ஐயா சொன்னாலும் நடக்காதாமே?

பொலம்பினாலும் மனசு ஆறலியே..
பாவிப்பய புத்தி மாறலியே...

பெத்தவ மனசு பதறுதய்யா...அம்மாவா
கோரிக்கை ஒன்னு கேக்கிறேன்யா..

சுட்டாக்க என்கிட்டே சொல்லாதீங்க...எங்காச்சும்
சொகமாத்தேன் இருக்கான்னு நெனச்சிப் போறேன்..

::::நாகராஜன்::::