பிச்சைக்காரன்... நன்றி - புகைப்பட உதவி
- ஹென்றி டிசில்வா
அபுதாபி
http://www.henrydsilva.com/
ஏந்திப்பிழைப்பவன் நீயென்றால் ...
எந்தப் பிழைப்பில் பின் நாங்கள்?
வானுக்கும் பூமிக்கும் நடுவில் உன் வாசம்..
வாழ்க்கையோடு வெகுதூரம் உன் நேசம்...
வர்ணமடித்த கூரைக்குக் கீழும் பளிங்கு
தரைக்கு மேலும் நான் வாழும் கூடு...
வாங்கிய கட்டிலில் உறக்கம் வரவில்லை..
வட்டிக்குப் போய் பின்னே கையில் மிச்சமில்லை..
உன் பாத்திரம் உலோகத்தில் செய்த ஒன்று...
என் பாத்திரம் அளாளுக்குமாய் மாறும் என்றும்..
இல்லாத ஒன்றை கேட்பது பிச்சை என்றால்...
உன்னிடம் மட்டும் கேட்பேன் பிச்சை..
பச்சை வர்ணம் அச்சடித்த காகிதமும் கவலையும்
கட்டுக் கட்டாய் என் வீட்டு பெட்டிக்குள் மட்டும்..
இசையும் அமைதியும் கலையும் வித்தையும்
கட்டுண்டிருப்பது காண்பேன் உன்முன்னம் ..
யாசித்தவனிடமே நான் யாசிக்கிறேன்..
பிச்சை போட்டு பிச்சை கேட்கிறேன் ...
காகிதம் கொடுக்கிறேன் கலையைக்கோடு...
இருப்பதைக் கொடுக்கிறேன் இசையைக்கொடு..
இல்லாததை யாசிப்பது பிச்சை என்றால்...
இங்கு நீ மட்டுமா பிச்சைக்காரன்...
:::நாகராஜன்:::
10 பிப்., 2008
வாழ்க்கை - முஹம்மது எலியாஸ்
என் வாழ்க்கை எனக்கு
miss ஆகிவிட்டது!
என் காதலி Mrs
ஆகி விட்டாள்!!
அதுவும் எனக்கே!
miss ஆகிவிட்டது!
என் காதலி Mrs
ஆகி விட்டாள்!!
அதுவும் எனக்கே!
காதலுக்கு மரியாதை - முஹம்மது எலியாஸ்
காதலித்தோம்! கருத்தொருமித்தோம்!!
மயிரிழையில் தப்பிப்யது எங்கள் காதல்!!
மணங்கோண்டோம் நாங்கள்!!
வெவ்வேறு நபர்களுக்கு!!
மயிரிழையில் தப்பிப்யது எங்கள் காதல்!!
மணங்கோண்டோம் நாங்கள்!!
வெவ்வேறு நபர்களுக்கு!!
தையல்காரன் :::நாகராஜன்:::
வேலை வெட்டி செய்ய வேண்டி
வெட்டி வேலை செய்பவன்....
காலச் சக்கரம் சுற்ற வேண்டி
காலால் சக்கரம் சுற்றுபவன்...
பாக்கெட்டிலும் கை வைப்பான்
ஜாக்கெட்டிலும் கை வைப்பான்...
ராமன் இவன்தானோ...
இன்று போய் நாளை வா என்பானே...
அருகில் உதவியாய் அங்கு(ஸ்தான்) தைப்பானை
அங்கு (உ)தைப்பானே...
பழைய துணி தைக்கான்! மழைக்காலத்தில்
அல்லது புதிய துணி இல்லாதபோது..
இவன் பெண் உடுத்தும் துணிகள் எல்லாம்
ஊரான் வீட்டு துணியின் மிச்சம்....
தையல்காரன் புதுத்துணி உடுத்தியதை
நீவிர் எங்கேனும் பார்த்ததுண்டோ?
தீபாவளியோ பொங்கலோ கிறிஸ்துமஸ் இல்லை
ரம்ஜானோ இவன் உறங்கியதாய் நினைவில்லை...
ஏற்ற தாழ்வு தையல்காரனிலும் உண்டன்றோ?
கடை வைத்தவன் மற்றவன் கையில் சுமப்பவன்..
ஆயத்த ஆடை வந்தபின் வேலை வெட்டி
ஏதும் இன்றி வெட்டி வேலை ஆனதே....
அடுத்த முறை ஆயத்த ஆடை வாங்கும்போது
இக்கவிதை உனக்குள்ளே எட்டிப்பார்க்கும்...
முடிந்தால் உதவி செய்! ஒரு துணியேனும்
தைக்கக்கொடு ஒரு வேளை சோற்றுக்காய்...
::::நாகராஜன்:::
வெட்டி வேலை செய்பவன்....
காலச் சக்கரம் சுற்ற வேண்டி
காலால் சக்கரம் சுற்றுபவன்...
பாக்கெட்டிலும் கை வைப்பான்
ஜாக்கெட்டிலும் கை வைப்பான்...
ராமன் இவன்தானோ...
இன்று போய் நாளை வா என்பானே...
அருகில் உதவியாய் அங்கு(ஸ்தான்) தைப்பானை
அங்கு (உ)தைப்பானே...
பழைய துணி தைக்கான்! மழைக்காலத்தில்
அல்லது புதிய துணி இல்லாதபோது..
இவன் பெண் உடுத்தும் துணிகள் எல்லாம்
ஊரான் வீட்டு துணியின் மிச்சம்....
தையல்காரன் புதுத்துணி உடுத்தியதை
நீவிர் எங்கேனும் பார்த்ததுண்டோ?
தீபாவளியோ பொங்கலோ கிறிஸ்துமஸ் இல்லை
ரம்ஜானோ இவன் உறங்கியதாய் நினைவில்லை...
ஏற்ற தாழ்வு தையல்காரனிலும் உண்டன்றோ?
கடை வைத்தவன் மற்றவன் கையில் சுமப்பவன்..
ஆயத்த ஆடை வந்தபின் வேலை வெட்டி
ஏதும் இன்றி வெட்டி வேலை ஆனதே....
அடுத்த முறை ஆயத்த ஆடை வாங்கும்போது
இக்கவிதை உனக்குள்ளே எட்டிப்பார்க்கும்...
முடிந்தால் உதவி செய்! ஒரு துணியேனும்
தைக்கக்கொடு ஒரு வேளை சோற்றுக்காய்...
::::நாகராஜன்:::
மு. மேத்தா & ஷபிர் அஹ்மத்
காதலியிடம்!
மௌனம் உலகத்தில்
சிறந்த மொழிதான்
இருந்தாலும்
இன்னொரு மொழியை
தெரிந்து கொள்வதில்
என்ன தவறு?
ஏதேனும் பேசு!
-மு. மேத்தா
மனைவியிடம்!
உன் பேச்சைக்
கேட்ட பின் புரிந்தது.
மௌனம் எவ்வளவு
அழகு என்று!
கொஞ்சம் நிறுத்து!
-ஷபிர் அஹ்மத்
மௌனம் உலகத்தில்
சிறந்த மொழிதான்
இருந்தாலும்
இன்னொரு மொழியை
தெரிந்து கொள்வதில்
என்ன தவறு?
ஏதேனும் பேசு!
-மு. மேத்தா
மனைவியிடம்!
உன் பேச்சைக்
கேட்ட பின் புரிந்தது.
மௌனம் எவ்வளவு
அழகு என்று!
கொஞ்சம் நிறுத்து!
-ஷபிர் அஹ்மத்
படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்
படித்ததில் பிடித்தது
திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.
கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.
காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.
கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்
சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.
திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.
கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.
காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.
கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்
சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.
படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்
படித்ததில் பிடித்தது
திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.
கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.
காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.
கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்
சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.
திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.
கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.
காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.
கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்
சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.
மனைவி ::::நாகராஜன்::::
பெண்ணென்றால் பேயென்று சொல்லிச்
சென்றவன் ஒரு சித்தனோ இல்லை புத்தனோ...
அற்றது பற்றென்றால் உற்றது வீடென்றார்..
புத்தா... விட்டுச்சென்றவளை வீண்டும் நினைத்தாயோ?
எதை எண்ணி உன்னோடு வந்தாள்?
எதைக்கொண்டு அவள் நிறைவெய்தினாள்?
படுக்கையை பகிர்ந்தாள், பின்னே உண்டாள்..
உன் பிள்ளையை பெற்றாள், உன் சுகம் தன் சுகம் என்றாளே...
வறுமை வந்தபோதும் வழக்கு விரட்டும் போதும்
நீண்டது அவள் கைதானே.. வளையல் போய் விஞ்சியது வெறுமை..
அம்மை போட்டபோதும் காமாலை கண்டபோதும்
உடல் மெலிந்ததும் எடை குறைந்ததும் அவள்தானே..
எத்தனை தந்தைக்குத் தெரியும் தன் மகன் தேவைகள்?
தேவைகளை செய்வித்து வாழ்க்கை சக்கரம் உருட்டியதவள்தனே..
ஒரு பண்டிகையின் முதல் நாளிரவு அவள் உறங்கினாளா?
உறங்காத குழந்தையைத்தான் உதறினாளா?
பேருந்தில் தெரியாதவன் கால் மிதித்தாலும்
மன்னிப்புக் கேட்கும் ஆண் வர்க்கமே..
ஒரு முறையாவது அவள் பணிவிடைக்கு நீ
மனப்பூர்வமாய் நன்றி சொன்னதுண்டா?
சில நேரம் நமக்குப் புரிவதில்லை
அருகில் உள்ள நம் சொத்துக்கள்...
அது மனைவியையும் சேர்த்துத்தான்...
புரியும்போது அவள் நம்மருகில் இருப்பதில்லை...
ஒரு நாள் அவள் அருகில் உட்கார்... அவள் செய்த
நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்..
பின் புரியும் உனக்கு நீ அடைந்த பெண்ணால்
எத்தனை பாக்கியம் உனக்கு என்று...
:::நாகராஜன்:::
சென்றவன் ஒரு சித்தனோ இல்லை புத்தனோ...
அற்றது பற்றென்றால் உற்றது வீடென்றார்..
புத்தா... விட்டுச்சென்றவளை வீண்டும் நினைத்தாயோ?
எதை எண்ணி உன்னோடு வந்தாள்?
எதைக்கொண்டு அவள் நிறைவெய்தினாள்?
படுக்கையை பகிர்ந்தாள், பின்னே உண்டாள்..
உன் பிள்ளையை பெற்றாள், உன் சுகம் தன் சுகம் என்றாளே...
வறுமை வந்தபோதும் வழக்கு விரட்டும் போதும்
நீண்டது அவள் கைதானே.. வளையல் போய் விஞ்சியது வெறுமை..
அம்மை போட்டபோதும் காமாலை கண்டபோதும்
உடல் மெலிந்ததும் எடை குறைந்ததும் அவள்தானே..
எத்தனை தந்தைக்குத் தெரியும் தன் மகன் தேவைகள்?
தேவைகளை செய்வித்து வாழ்க்கை சக்கரம் உருட்டியதவள்தனே..
ஒரு பண்டிகையின் முதல் நாளிரவு அவள் உறங்கினாளா?
உறங்காத குழந்தையைத்தான் உதறினாளா?
பேருந்தில் தெரியாதவன் கால் மிதித்தாலும்
மன்னிப்புக் கேட்கும் ஆண் வர்க்கமே..
ஒரு முறையாவது அவள் பணிவிடைக்கு நீ
மனப்பூர்வமாய் நன்றி சொன்னதுண்டா?
சில நேரம் நமக்குப் புரிவதில்லை
அருகில் உள்ள நம் சொத்துக்கள்...
அது மனைவியையும் சேர்த்துத்தான்...
புரியும்போது அவள் நம்மருகில் இருப்பதில்லை...
ஒரு நாள் அவள் அருகில் உட்கார்... அவள் செய்த
நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்..
பின் புரியும் உனக்கு நீ அடைந்த பெண்ணால்
எத்தனை பாக்கியம் உனக்கு என்று...
:::நாகராஜன்:::
வாத்தி... ::::நாகராஜன்::::
அய்யாசாமிக்கும் அருக்காணி சிறுக்கிக்கும்
அருமைப்பிள்ளையாம் வெள்ளையப்பன்...
அரை திரௌசெர் போட்டு அனுப்பி வைத்தார்
அடுத்த தெருவில் அரைப்பள்ளிக்கூடம் ....
மூக்கொழுகும் வெள்ளையப்பனை பிடிக்கவில்லை வாத்திக்கு...
மூலையில் அமர்த்தி முட்டிபோட வைத்தான் நாள் பாதிக்கு...
முன்சீப்பு பிள்ளைக்கும் கர்ணம் பொண்ணு காமாட்சிக்கும்
முன்சீட்டு எதுக்கென்று கேட்கவில்லை வெள்ளையப்பன்...
முன்சீப்பு பிள்ளை வரவில்லைஎன்றாலும் பிரெசென்ட் தான்..
வீட்டுப்பாடம் பண்ணினாலும் வெள்ளையப்பனுக்கு முட்டிதான்...
சந்தேகம் தீர்க்க யாரும் இல்லை அருகிலேயும்..
கர்ணம் போல ட்யூஷன் வைக்க வக்குமில்லை...
அந்த வருஷமே முடிந்தது வெள்ளையப்பன் படிப்பு..
அப்பா சொன்னது போல எருமை ஓட்டமட்டும் லாயக்கு..
கிழிந்த டவுசரும் கையில் ஏருமாய் மாறிப்போச்சு வாழ்க்கை..
பட்டணத்திற்கு படிக்கப்போனது முன்சீட்டு பிள்ளைகள் ...
கல்லூரிக்குப்போன பிள்ளைகள் காதலித்து ஓட..
ஊரே சிரித்தது முன்சீப்பையும் கர்ணத்தையும்...
முன்சீப்பு பிள்ளை கம்ப்யூட்டர் படித்து அமெரிக்கா வேலை..
காமாட்சிக்கு யோகம் ஒரு பிரசவத்தில் இரட்டை பிள்ளை...
வெள்ளையப்பனுக்கு தெரியாது அமெரிக்கா பற்றி..
நாட்டமை விளக்கியபோது விழுந்தது வாய் எச்சி ...
கொள்ளிபோட யாருமின்றி வாய் பிளந்தார் வாத்தி..
ஊர் கூடி யோசித்தது பிணம் எரிப்பது பற்றி...
முடிவானது வெள்ளையப்பந்தான் கொள்ளிபோடணுமாம்..
ஏனென்றால் தன் பிள்ளைபோல வளர்த்தானாம் வாத்தி...
:::நாகராஜன்:::
அருமைப்பிள்ளையாம் வெள்ளையப்பன்...
அரை திரௌசெர் போட்டு அனுப்பி வைத்தார்
அடுத்த தெருவில் அரைப்பள்ளிக்கூடம் ....
மூக்கொழுகும் வெள்ளையப்பனை பிடிக்கவில்லை வாத்திக்கு...
மூலையில் அமர்த்தி முட்டிபோட வைத்தான் நாள் பாதிக்கு...
முன்சீப்பு பிள்ளைக்கும் கர்ணம் பொண்ணு காமாட்சிக்கும்
முன்சீட்டு எதுக்கென்று கேட்கவில்லை வெள்ளையப்பன்...
முன்சீப்பு பிள்ளை வரவில்லைஎன்றாலும் பிரெசென்ட் தான்..
வீட்டுப்பாடம் பண்ணினாலும் வெள்ளையப்பனுக்கு முட்டிதான்...
சந்தேகம் தீர்க்க யாரும் இல்லை அருகிலேயும்..
கர்ணம் போல ட்யூஷன் வைக்க வக்குமில்லை...
அந்த வருஷமே முடிந்தது வெள்ளையப்பன் படிப்பு..
அப்பா சொன்னது போல எருமை ஓட்டமட்டும் லாயக்கு..
கிழிந்த டவுசரும் கையில் ஏருமாய் மாறிப்போச்சு வாழ்க்கை..
பட்டணத்திற்கு படிக்கப்போனது முன்சீட்டு பிள்ளைகள் ...
கல்லூரிக்குப்போன பிள்ளைகள் காதலித்து ஓட..
ஊரே சிரித்தது முன்சீப்பையும் கர்ணத்தையும்...
முன்சீப்பு பிள்ளை கம்ப்யூட்டர் படித்து அமெரிக்கா வேலை..
காமாட்சிக்கு யோகம் ஒரு பிரசவத்தில் இரட்டை பிள்ளை...
வெள்ளையப்பனுக்கு தெரியாது அமெரிக்கா பற்றி..
நாட்டமை விளக்கியபோது விழுந்தது வாய் எச்சி ...
கொள்ளிபோட யாருமின்றி வாய் பிளந்தார் வாத்தி..
ஊர் கூடி யோசித்தது பிணம் எரிப்பது பற்றி...
முடிவானது வெள்ளையப்பந்தான் கொள்ளிபோடணுமாம்..
ஏனென்றால் தன் பிள்ளைபோல வளர்த்தானாம் வாத்தி...
:::நாகராஜன்:::
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)