மொத்தப் பக்கக்காட்சிகள்

10 பிப்., 2008

வாத்தி... ::::நாகராஜன்::::

அய்யாசாமிக்கும் அருக்காணி சிறுக்கிக்கும்
அருமைப்பிள்ளையாம் வெள்ளையப்பன்...

அரை திரௌசெர் போட்டு அனுப்பி வைத்தார்
அடுத்த தெருவில் அரைப்பள்ளிக்கூடம் ....

மூக்கொழுகும் வெள்ளையப்பனை பிடிக்கவில்லை வாத்திக்கு...
மூலையில் அமர்த்தி முட்டிபோட வைத்தான் நாள் பாதிக்கு...

முன்சீப்பு பிள்ளைக்கும் கர்ணம் பொண்ணு காமாட்சிக்கும்
முன்சீட்டு எதுக்கென்று கேட்கவில்லை வெள்ளையப்பன்...

முன்சீப்பு பிள்ளை வரவில்லைஎன்றாலும் பிரெசென்ட் தான்..
வீட்டுப்பாடம் பண்ணினாலும் வெள்ளையப்பனுக்கு முட்டிதான்...

சந்தேகம் தீர்க்க யாரும் இல்லை அருகிலேயும்..
கர்ணம் போல ட்யூஷன் வைக்க வக்குமில்லை...

அந்த வருஷமே முடிந்தது வெள்ளையப்பன் படிப்பு..
அப்பா சொன்னது போல எருமை ஓட்டமட்டும் லாயக்கு..

கிழிந்த டவுசரும் கையில் ஏருமாய் மாறிப்போச்சு வாழ்க்கை..
பட்டணத்திற்கு படிக்கப்போனது முன்சீட்டு பிள்ளைகள் ...

கல்லூரிக்குப்போன பிள்ளைகள் காதலித்து ஓட..
ஊரே சிரித்தது முன்சீப்பையும் கர்ணத்தையும்...

முன்சீப்பு பிள்ளை கம்ப்யூட்டர் படித்து அமெரிக்கா வேலை..
காமாட்சிக்கு யோகம் ஒரு பிரசவத்தில் இரட்டை பிள்ளை...

வெள்ளையப்பனுக்கு தெரியாது அமெரிக்கா பற்றி..
நாட்டமை விளக்கியபோது விழுந்தது வாய் எச்சி ...

கொள்ளிபோட யாருமின்றி வாய் பிளந்தார் வாத்தி..
ஊர் கூடி யோசித்தது பிணம் எரிப்பது பற்றி...

முடிவானது வெள்ளையப்பந்தான் கொள்ளிபோடணுமாம்..
ஏனென்றால் தன் பிள்ளைபோல வளர்த்தானாம் வாத்தி...

:::நாகராஜன்:::

2 கருத்துகள்:

sivanandam சொன்னது…

nice one , really proud of and heard that you are fron GCE, salem, I am also from there only, passed out in 1982, Mechanical branch. M.P.Sivanandam

துபாய் நாகராஜன் சொன்னது…

Hi Sivanandam

I know you very well. You also worked in Kuwait KNPC.

Pl send me your email to write to you separately.

nagarajan