பெண்ணென்றால் பேயென்று சொல்லிச்
சென்றவன் ஒரு சித்தனோ இல்லை புத்தனோ...
அற்றது பற்றென்றால் உற்றது வீடென்றார்..
புத்தா... விட்டுச்சென்றவளை வீண்டும் நினைத்தாயோ?
எதை எண்ணி உன்னோடு வந்தாள்?
எதைக்கொண்டு அவள் நிறைவெய்தினாள்?
படுக்கையை பகிர்ந்தாள், பின்னே உண்டாள்..
உன் பிள்ளையை பெற்றாள், உன் சுகம் தன் சுகம் என்றாளே...
வறுமை வந்தபோதும் வழக்கு விரட்டும் போதும்
நீண்டது அவள் கைதானே.. வளையல் போய் விஞ்சியது வெறுமை..
அம்மை போட்டபோதும் காமாலை கண்டபோதும்
உடல் மெலிந்ததும் எடை குறைந்ததும் அவள்தானே..
எத்தனை தந்தைக்குத் தெரியும் தன் மகன் தேவைகள்?
தேவைகளை செய்வித்து வாழ்க்கை சக்கரம் உருட்டியதவள்தனே..
ஒரு பண்டிகையின் முதல் நாளிரவு அவள் உறங்கினாளா?
உறங்காத குழந்தையைத்தான் உதறினாளா?
பேருந்தில் தெரியாதவன் கால் மிதித்தாலும்
மன்னிப்புக் கேட்கும் ஆண் வர்க்கமே..
ஒரு முறையாவது அவள் பணிவிடைக்கு நீ
மனப்பூர்வமாய் நன்றி சொன்னதுண்டா?
சில நேரம் நமக்குப் புரிவதில்லை
அருகில் உள்ள நம் சொத்துக்கள்...
அது மனைவியையும் சேர்த்துத்தான்...
புரியும்போது அவள் நம்மருகில் இருப்பதில்லை...
ஒரு நாள் அவள் அருகில் உட்கார்... அவள் செய்த
நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்..
பின் புரியும் உனக்கு நீ அடைந்த பெண்ணால்
எத்தனை பாக்கியம் உனக்கு என்று...
:::நாகராஜன்:::
10 பிப்., 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக