மொத்தப் பக்கக்காட்சிகள்

10 பிப்., 2008

பிச்சைக்காரன்....:::நாகராஜன்:::

பிச்சைக்காரன்... நன்றி - புகைப்பட உதவி
- ஹென்றி டிசில்வா
அபுதாபி
http://www.henrydsilva.com/


ஏந்திப்பிழைப்பவன் நீயென்றால் ...
எந்தப் பிழைப்பில் பின் நாங்கள்?

வானுக்கும் பூமிக்கும் நடுவில் உன் வாசம்..
வாழ்க்கையோடு வெகுதூரம் உன் நேசம்...

வர்ணமடித்த கூரைக்குக் கீழும் பளிங்கு
தரைக்கு மேலும் நான் வாழும் கூடு...

வாங்கிய கட்டிலில் உறக்கம் வரவில்லை..
வட்டிக்குப் போய் பின்னே கையில் மிச்சமில்லை..

உன் பாத்திரம் உலோகத்தில் செய்த ஒன்று...
என் பாத்திரம் அளாளுக்குமாய் மாறும் என்றும்..

இல்லாத ஒன்றை கேட்பது பிச்சை என்றால்...
உன்னிடம் மட்டும் கேட்பேன் பிச்சை..

பச்சை வர்ணம் அச்சடித்த காகிதமும் கவலையும்
கட்டுக் கட்டாய் என் வீட்டு பெட்டிக்குள் மட்டும்..

இசையும் அமைதியும் கலையும் வித்தையும்
கட்டுண்டிருப்பது காண்பேன் உன்முன்னம் ..

யாசித்தவனிடமே நான் யாசிக்கிறேன்..
பிச்சை போட்டு பிச்சை கேட்கிறேன் ...

காகிதம் கொடுக்கிறேன் கலையைக்கோடு...
இருப்பதைக் கொடுக்கிறேன் இசையைக்கொடு..

இல்லாததை யாசிப்பது பிச்சை என்றால்...
இங்கு நீ மட்டுமா பிச்சைக்காரன்...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: