மொத்தப் பக்கக்காட்சிகள்

23 பிப்., 2008

சிலேடைக்கவி- கம்பனும் கண்ணனும் ...

சிலேடைக்கவி- கம்பனும் கண்ணனும் ...


திருடியவன் அவதாரம் உணர்த்தியவன் திருவெண்ணெய்

விரும்பியவன் உபதேசித் தறியன் கவிக் கம்பன்

அம்மகன் வம்பன் கோவர் கவிக் குடையன்

கம்பனுக்கும் கண்ணனுக்கும் தமிழ் சிலேடையாம்....


:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - கலைஞரும் பேருந்து வண்டியும்

சிலேடைக்கவி - கலைஞரும் பேருந்து வண்டியும்

கண்ணாடி உண்டு அரசாங்கத்துக்குச் சொந்தம்
கண்டால் கூட்டம் முட்டி வரும் நடத்துனன் ஆனதால்
கோட்டையில் நிற்கும் நின்றவர்க்கு இடம் கொடுப்பதால் அகத்தில்
தொலைக் காட்சியுண்டு கலைஞரும் பேருந்தும் ஒன்றே..

:::நாகராஜன்::::

சிலேடைக் கவிதை! - ஷபிர் அஹ்மத்

சிலேடைக் கவிதை!

இல்லத்தின் ஒளிவிளக்கு உற்பத்திக்கு உறுதுணை
இணை சரியானால் பணி சிறக்கும் பிணை தவற பொறி பறக்கும்
முறையற்ற கைப்பட உதறித் தள்ளும் உலோகத்தின் தரமறிந்து
விரைவு கொள்ளும் உபயோகம் அறிந்தால் சேவகி உன்மத்தம் கொண்டால் அரக்கி ஆற்றல் உயர சக்தி பெருகும் அடக்கியாள அன்பு போதும்
சேவை பலவானால் செலவு அதிகம் சேமிப்புக்கோ இல்லை
சாத்தியம்! சம்சாரமும் மின்சாரமும் ஒன்றே!


பொருள் விளக்கம்:

இணை= husband=connection
பிணை தவற = angered = loose contact
முறையற்ற கைப்பட = unfair touch = unsafe handling
உதறித் தள்ளும் = will repel = will give shock
உலோகத்தின்= gold metal = conducting metals
விரைவு கொள்ளும்= haste to buy = conductivity variation
உன்மத்தம் = crazy = if get messed up
அரக்கி = destructive
ஆற்றல் = potential (voltage)
சக்தி = power (energy)
அன்பு போதும்= handle with care!
சேமிப்புக்கோ= storage of electricity

ஷபிர் அஹ்மத்

21 பிப்., 2008

சிலேடைக்கவி - வள்ளுவனும் நாயும்

சிலேடைக்கவி - வள்ளுவனும் நாயும்

வள்ளுண்டு சொல்லில் ஈரிரண்டடியாய் வந்திருக்கும்
வெண்பாவுண்டு, மனை விளிக்க நடுவில் நிற்கும் ஒரு பாத்திரம்
வெண் முடியுண்டு வாலாய் வா சுகி என்றேஉரைப்பார்
வான்புகழ்க் கவியே மன்னிப்பாய் இந்நாயின் சிலேடைக்கு!

:::நாகராஜன்:::

20 பிப்., 2008

சிலேடைக்கவி - பெண்ணும் பூனையும்

சிலேடைக்கவி - பெண்ணும் பூனையும்


அடுப்படி வாசம் பிறாண்டும் குணமுண்டு மெல்ல நடக்கும்

மடியிலிடம் பிடிக்கும் வேண்டுமதற்கு மாற்றுப் பால் - கண்மூடி

நடிக்குமது இருண்டதாய் வீடகன்றுப் போகையில் துர்சகுனமாம்

நன்றாயிருப்பாயா நாகராசா பெண்ணைப் பூனையாக்கியதற்கு . ..


:::நாகராஜன்:::

சிலேடைக்கவி......:::நாகராஜன்:::

சிலேடைக்கவி

அக்காளை தொட்டவனை அடிவயிற்றில் குத்தியது கொம்பால்
அம்மாவைப்பிடித்திழுத்து அடக்கியது கம்பால் - அக்காளை
அத்தான் பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய
அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு கொம்பில் கட்டிய பணம்


பாடல் விளக்கம்


அக்காளை தொட்டவனை - அந்தக் காளையைத் தொட்டவவனை

அடிவயிற்றில் குத்தியது கொம்பால்

அம்மாவைப்பிடித்திழுத்து - அந்த மாட்டைப் பிடித்து இழுத்து

அடக்கியது கம்பால் - குச்சி கொண்டு அடக்கினார்

அக்காளை அத்தான் - அக்காளையைத்தான் அதாவது அந்தக் காளையைதான்

பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய


அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு - அந்தக் காளையை அடக்கி கயிறில் கட்டியனுக்கு மட்டுமே

கொம்பில் கட்டிய பணம் - கிடைக்குமாம் கொம்பில் சுற்றி வைக்கப்பட்ட பண முடிச்சு

இக்கவிதை அலங்கா நல்லூர் காளை பிடி விழாவை வர்ணிப்பதாகும்...

:::நாகராஜன்:::

அந்தாதித் துதி....:::நாகராஜன்:::

அந்தாதித் துதி

அபிராமி ஆத்தாளை .....
ஈசனடி அமர்ந்தாளை
வணங்கிடும் அக்காளை
ஒன்றாய் இருந்தாளை
பித்தன் இடந்த்தோளை
அனைவரையும் ஈத்தாளை
மலைமேல் உற்றாளை
கங்கை நீர் ஊற்றாளை
சூல் கையில் எடுத்தாளை
எனை மகனாய் ஏற்றாளை
அணிந்தாளை ஐந்தாழை
ஒறுத்தாரை ஒறுத்தாளை
ஓதித் தெளிந்தாளை
அண்டம் காத்தாளை
ஞானம் கொடுத்தாளை
பல்லுயிர்ச் சார்ந்தாளை
குங்கலீயம் சூழ்ந்தாளை
சேவித்தவரைத் தாழ்த்தாளை
குங்கும நிறத்தாளை
கரங்கீழ்ப் படிந்தாளை
தாளறுத்தாள் படிந்தாளை
கடைக்கண் பார்த்தாளை
பக்தனுக்குப் பித்தாளை
கரன் கரம் பிடித்தாளை
ஈசன் இடம் பிடித்தாளை
அகிலம் பூத்தாளை
பிள்ளையீர் பெற்றாளை
மோகமதை மாய்த்தாளை
பசிக்குணவு வார்த்தாளை
கடுகேனும் வெறுத்தாளை
மேனியெல்லாம் வேர்த்தாளை
பாசத்தளை அறுத்தாளை
ஓதித் துதித்தாளை
நடமாடிக் குதித்தாளை
மாரிப் பொழித்தாளை
ஆறாய் வழிந்தாளை
அசுரனை விழித்தாளை
விதியதை வகுத்தாளை
ஞானம் பகுத்தாளை
வீரம் சொரித்தாளை
மேனிபச்சை உகுத்தாளை
வெள்ளிமலை வாழ்ந்தாளை
சிவனடி வீழ்நதாளை
அந்தமாதி அற்றாளை
பகை கொள்ளாதாளை
திரண்ட ஞானத்தாளை
மேகமெனும் மானத்தாளை
மச்சமெனும் மீனத்தாளை
தவமெனும் மோனத்தாளை
மினுக்கும் மஞ்சத்தாளை
அணியுடை விஞ்சித்தாளை
கொடையிலை வஞ்சித்தாளை
இடையது இளைத்தாளை
புலிமேல் உடுத்தாளை
உடுக்கைப் பிடித்தாளை
இடுக்கண் கலைந்தாளை
புலிவாகனம் வரித்தாளை
திரிபுரம் எரித்தாளை
திரிகண்ணவனை உரித்தாளை
ஏகம்பர் தவத்தாளை
கரும்பொடு இருந்தாளை
காளத்தில் ஞானக்கொழுந்தாளை
உயிர் மெய் எழுத்தாளை
உயிர் மெய் எழுத்தாலே
பணிந்தேன் அத்தாய்த்தாளை


:::நாகராஜன்:::

19 பிப்., 2008

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும் :::நாகராஜன்::::

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும்

இரைச்சலோடே வரும் வெளியில் நீர் குடிக்கும் முட்டி உருளும்
இடியுண்டு கூட்டமாய்ப் புரளும் வேண்டும்போது வாராது
பள்ளத்தில் நிற்கும் சாலையில் ஓடும் முன்னே வெளிச்சம் வரும்
தெப்பலாய் நனைக்கும் கார் என்பார் மழையும் பேருந்தும்

:::நாகராஜன்::::

உயிரின் இரகசியம்.....:::நாகராஜன்:::

உயிரின் இரகசியம்.....

ஞானம் தந்தான் மானம் தந்தான்
வானுளன் பெருமைக்கு வரிகள் போதா...

உலகம் யாவையும் உளவாக்கலும்
நிலைபெருத்தலும் நீக்கலும் நீங்கலும்

அலகிலா விளையட்டுடையானவன்
தலைவன் அன்னவர்க்கே சரணம்

பற்றற்றவன் உற்றிய பாதம்
பற்றுதலாம் பரம பதம்....

நீரில் பாசி போல நிலத்தில்
வேரு போல பற்றில்லாதவனவன்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஞானம்
ஆறுணர்வு தந்தவன் தாளே பற்றுக

நெஞ்சே அறி! ஞானம் சொன்னதைக்கேள்!
படைப்பின் இரகசியம் அறிவாய் நன்னெஞ்சே..

காணா வாயுக்கள் இரண்டாம் அவை
கலப்பதால் வரும் காணும் தண்ணீராம்....

நீராக வாயு விகிதம் வெப்பம் வேண்டும்
நீர்பிரிந்து ஆவியாகும் எதிர்மறை விதியில்

விதை உறக்கம் அறிவாய் நீ... நீரின்றி நிலமின்றி
உயிர் உள்ளடக்கி உறங்கும் எழுப்பும் வரை

விதை விழித்தெழ வேண்டுதல் இரண்டேயாம்
நீரும் சுவாசமும் பற்றிக்கொள்ள பிடியும்

மண்ணில் நீர் சேர பூமியில் பிடிக்கும்
தாழ் பரந்து உயர் வளரும் மரம்

விஞ்ஞானம் இல்லை உயிர் விளக்க
மெய்ஞானம் உண்டு தெளிவிக்க

உரைப்பேன் கேள் உயிர்பற்றை,
உடன்பட்டால் உபதேசிப்பேன்...

நிலம் காற்று நீர் தீ என்பது
பூதங்கள் என்பார் பூவுலகில்

நிலம் என்பது தாது உப்பு
காற்றென்பது பிராணவாயு

நீர் என்பது உடலில் தண்ணீர்
தீ என்பது உடலில் வெப்பம்

இவை அனைத்தும் உண்டிப்புவியில்
கலவை விகித சூட்சுமம் அவன் கையில்

சரிவிகிதம் கலவை சேர்கையில்
உடல் எனும் வேதி உண்டாகும்

உண்டான வேதியுடல் புலன்
உணர்வதுதான் உயிர்ப்பாகும்

கருவூரில் பிறந்து பையூரில் உறங்கி
மெய்யூரில் வளர்ந்து பாழுரில் தங்கி

பற்றற்றவன் பாதம் பற்றி நான்
வாழூர் செல்வது எக்காலம்?

உணர்வது முதலில் ஓர் அணுவாய்
அணுவின் பின்னே புழுவாய்

புழுவின் பின்னே மச்சமாய்
மீனின் பின்னே பறவையாய்

பறவையின் பின்னே விலங்காய்
விலங்கின் பின்னே மனிதனாய்

மனிதனின் பின்னே பேயாய்
பேயின் பின்னே பூதமாய்

பிறப்பென்பார் இதை ஏழு
சன்மம் என்பார் உடல் வதை

சகடச் சுற்றில் மீண்டும் நீ
புழுவாய் பிறப்பாய்

அல்லது தேவனாவாய் அது
உள்ளது உன் கையிலாம்

சரிவிகிதம் கண்ட உயிர்க்கு
விகிதம் மாற விதி மாறும்

காற்றிழந்தால் மூச்சில்லை
நீரிழந்தால் மூப்பாகும் கண்டாய்

தாதுப்புப் பிழையின் சலம் நிற்கும்
சூடிழந்தால் சுடுகாடே..

விகிதம் கலைந்தால் மரணம் உணரும்
உயிர்ப் போகும் வேதி உடல் அது உணரும்

விதி முடிந்ததென்பார் அது வலியதென்பார்
காலம் போனதேன்பார் காலன் வந்ததென்பார்

காலை மாலை காற்றை அடக்கினால்
கடவுள் அருகில் என்பான் அந்தணன்

கூடுதல் ஆயுள் தேடுதல் கூடும் என்பான்
அந்தணன் செய்வது கூடு புதுப்பிதலாம்

காற்றின் சூட்சுமக்கயிர் பற்றியவனை
புலன் அடக்கினால் காண முடியுமோ?

நூல் பிடி விட்டால் சாவான் அந்தணன்
சூத்திரம் மறந்த சூத்திரன் அவன்

புலன் அடக்குதல் பெருமை என்பான்
சித்தனும் அந்தப் புத்தனும்

புலன் அடக்கிப் பசியடக்கி உன் விகிதம்
நீயாய் கலைக்க உனக்கில்லை உரிமை...

உடல் வருத்தும் மெய்ஞானம்
காண்பான் முனியும் சமணனும்

யோகமும் போகமும் கடவுளைக்காணா
யாகமும் தொழுகையும் நமக்கின்னா..

கள் குடித்து கஞ்சா அடித்து கண்டேன்
கடவுள் என்பான் ஞானமில்லாதவன்

உடல் ஒரு கருவியாகும் என்றுணர்
உயிர் என்பது நீரில் பாசம் போல் என்றறி...

உடல் சூடு குறைகையில் ஆவி பிரியும்
ஆவிபோனால் கூடு மயானம் போகும்

அழுது புரள்வார் மனைவியும்
மக்களும் கிடத்திய சடலம் முன்பு

எரித்த பின் மயானம் ஒருமுறை
ஏனும் திரும்பி நோக்கார் மீண்டும்

உடைமையும் உற்றாரும் உடன் வர மாட்டா
கடமையும் தருமமும் செலுத்தும் உன் வழி

பற்றினால் உண்டு துயர் துன்பம்
பற்றற்றால் உண்டு என்றும் இன்பம்

திரண்ட முலை உருண்ட தொடை
கருத்த விழி பெருத்த சடை

தங்கம் வெள்ளி கூரை நிலம் பணம்
மக்கள் கிழத்தி சுற்றம் சிநேகம்

போகமாம் இவையனைத்தும்
பாசமாய் பற்றி ஈர்க்கும் உனை

பெண்ணோ பொருளோ பற்று வைக்காதே
புண்ணாக்கும் உன்னுடன்தான் வாராதே

தாளை அறுத்தல் கடினம் தான்
அறுத்த பின் உண்டு வீடுதான்

ஒன்பது வாசல் உண்டென்று காண்
வந்து விழுந்தது ஏதென்று பார்

பீளையும் சீழும் உமிழும் மலமும்
சளியும் வியர்வையும் சலமும்

புலனைந்தையும் சற்றே அடக்கிப்பார்
புலமாள்வாய் பெரியோர் சொல்வார்

ஆசையை அடக்கிப்பார் மடமே
பார் அடக்கும் சித்தி வருமே

கொண்டுவரவில்லை கொண்டு போவதில்லை
நீஎன்பது யாரென்று உனக்குள்ளே கேள்...

வழியில்லை விஞ்ஞானத்தில்
விடையுண்டு மெய்ஞானத்தில்….



:::நாகராஜன்:::

18 பிப்., 2008

சிலேடைக்கவி - பெண்ணும் பித்தளையும்

சிலேடைக்கவி - பெண்ணும் பித்தளையும்

நகையானால் இளிக்கும் வீட்டிற்க்கு விளக்காகும்
தேய்வதால் துலங்கும் குடும்பத்தில் பாத்திரமாகும் கச்சுண்டு
மஞ்சள் பூண்டு ஆற்றங்கரை செல்கையில் இடுப்பாடும்
நெஞ்சே சொல் பெண்ணும் பித்தளையும் வேறு வேறா?

:::நாகராஜன்::::

சிலேடைக்கவி...:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - கராமா வாழ் தமிழனின் வாரக்கடைசி காட்சிகள்
(விளக்கம் கீழே)

அப்பாவிற்க்கரிசி வாங்கி அம்மாவிற்கேற்ற பணியாரம் செய்ய
மாவிலையால் மேலிடாள் துளியேனும் உப்புமா மனையில்
மாவுண்டாதலால் தப்பாமல் குடும்பமாய் நிற்கும் வாசலில்
அதிரசம் அக்காவிற்கு போகையில் ...துயரன்றோ துபாய்க்கு...


விளக்கம்
அப்பாவிற்கு - அந்த பாவிற்கு (பாவு என்றால் அளக்கும் படி)
அம்மாவிற்கு - அந்த மாவிற்கு ஏற்ப பணியாரம் செய்ய
மாவிலையால் - மாவு போதவில்லையால்
மேலிடாள் துளியேனும் உப்பு மா மனையில் - சிறு ஊறுகாய் (உப்பு + மாங்காய்) கூட கொடுக்க மாட்டாள் மனைவி
மாவுண்டாதலால் - மா (செல்வம்) இருப்பதால்
தப்பாமல் குடும்பமாய் நிற்கும் வாசலில் - கராமா ஓட்டல் வாசல்களில் வியாழன்
வெள்ளியன்று ராத்திரி மணி பனிரெண்டு வரை
கூட்டமாய் நிற்கும் குடும்பம்.
அதிரசம் - மிகவும் ரசிக்கத்தக்கதாகும் அக்காட்சி
அக்காவிற்கு போகையில் - அந்த ஊர் பக்கம் போகும்போது

:::நாகராஜன்:::


17 பிப்., 2008

சிலேடைக்கவி... :::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பாகற்காயும் கந்தல் துணியும்

கசக்குதல் கூடியதால் பறிக்க ஏதுவாய் கொடியில் தொங்குதலால்
துவட்டலுக்கு உதவியதால் மேலே சொரசொரப்பாய் மஞ்சளாய் மாறும்
பழையதானால் தண்ணீர் இல்லாத் துபாயில் தலை துவட்டி
மழைநாளில் கவிராயன் கூறுவேன் பாகலும் கந்தலும் ஒன்றென்று!

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி....::::நாகராஜன்::::

சிலேடைக்கவி - பாம்பும் மலையாளிப் பெண்ணும்

சே(ட்)டன் என்பார் தலைக்கேறும் அவ்விடம் என்பார்
கட்டுடல் உண்டு வெளியே வருகையில் தலை விரித்து நெளியும்
தன் குலமே சேரும் வெளுப்பு முண்டு தமிழ் வீசும் தரணியில்
நாகராசன் சொல்வேன் சமன் மலையாளியும் பாம்பும்

சிலேடைக்கவி - அருவியும் மூக்குச்சளியும்

மேல் தொடங்கித் தாழ் ஒழுகும் கொட்டும் இயல்புண்டு
பச்சை நிறம் சேரும் அருகில் சாரல் அடிக்கும் மழையே பருவம்
கராமா காளமேகன் கவிராயன் நாகராசன் சொன்னது கேள்
அருவியும் மூக்குச்சளியும் இவ்விதத்தில் ஒன்றேயாம்


:::நாகராசன்:::

16 பிப்., 2008

அடங்கா மனைவி... :::நாகராஜன்:::

அடங்கா மனைவி...

ஆனைப்பெரிதெனினும் அங்குசத்திற்கு அடங்கும்
பானைப்பெரிதாயினும் கயிற்றுரிக்குள் அடங்கும்
ஆறு பெரிதானாலும் அகண்ட கரைக்கடங்கும்
எதைக்கொண்டு கட்டிய பெண் அடங்கும்?

வலியவன் எத்தனை பெரியவன் ஆயினும்
மெலியவன் தாள் வீழும் நாள் வரும்
வலியவன் வெளியே பெரியவன் ஆனாலும்
விழுவது பெண்ணின் தாள் வெளியில் அறியார்

எறும்பூர கல்லும் குழியும்
ஏர் ஊற நெல்லும் விளையும்
சேர்ந்தூர தேரும் நகரும்
எது செய்தல் பெண் நகரும்...

நிலவில் அழுக்கிருந்தாலும் உலகிற்கு வெளிச்சம்
மெய்யில் தாள் வலித்தால் கண் உகுக்கும் நீர்
கொள்வார் இல்லையெனினும் காக்கை விரும்பும் வேப்பங்கனி..
சுயநலம் இல்லாது வாழ்ந்தும் புரியாதே உன் மனை..

தாழற்ற கதவில் வலுவில்லை கொண்ட
தலையற்ற பெண்டிர்க்கு வழ்வுமில்லை
உடல் தாக்க விரையும் தடியை எதிர்பார்ப்பின்றி
முன்னின்று கரம் சென்று காக்கும் விழும் அடியை...

காப்புளது குளம் கரையுளது ஆறு விரிந்து பரந்த
கடலுக்குண்டோ கரை? கணவனைப்பேனும் பெண்டிர்க்கு
காவலுண்டு என்றைக்கும் கண்டீர் இம்மாநிலத்தீர்
கண் அற்றவன் அஞ்சான் இருளைக்கண்டு...

நிலம் நீர் காற்று நெருப்பு பூதங்களிவை மாத்திரம்
இதில் சரிவிகிதம் உணர்தல் உயிரின் மந்திரம் - பூத
விகிதம் கலைந்தால் உயிர் மறையும் என்பதே விதி
உயிர் மறையும் உணர்வே இறப்பென்றுணர் மனையே...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி....:::நாகராஜன்::;

சிலேடைக்கவி - ஒரு விளக்கம்.

ஒரே பாடல் இருவேறு பதங்களுக்கோ இருவேறு பொருள்களுக்கோ பொதுவாய் அமைவதை சிலேடை என்கிறோம். பண்டைய காலத்தில் கவி காளமேகப்புலவர் என்பார் மாத்திரம் இச்சிலேடைக்கவிதைகளை நமக்குத் தந்து போனார். அவர் காலம் போனபின் சிலேடைக்கவி வழக்கொழிந்து மரபுக்கவியும் புதுக்கவியும் மட்டும் அளவில் பெரிதாக உருவெடுத்தன. சம காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர் கி வா சகந்நாதன் மட்டும் சிலேடையை உரைநடையிலும் பேச்சிலும் உபயோகித்து மகிழ்வித்தார். வழக்கொழிந்த சிலேடைக்கவிக்கொரு வாழ்க்கை கொடுப்போம் . சில சிலேடைக்கவிதைகளை இங்கே நான் தொடுத்திருக்கிறேன். தமிழ் அறிந்த புலவர்கள் இலக்கண பிழை இருந்தால் எளியவனை மன்னிக்கவும். தயை கூர்ந்து தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், திருத்திக்கொள்கிறேன். எளிமையான நடையில் புரியும்படி எழுதியுள்ளேன் . தயவு செய்து அனைத்து நண்பர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பி, எவ்வொப்பிலக்கிய சிலேடைக்கவிதையை மீண்டும் வளர உதவுங்கள்.

:::நாகராஜன்:::

அரசாங்கமும்... குதிரையும்...


வரியுண்டாதலால் நல்ல குடிதேர்வால் கோட்டையில் இருத்தலால்
நாற்காலியாதலால் மக்களைச் சுமப்பதால் - நன்னாட்டில் இனிய
கராமா வாழ் காளமேகம் நாகராசன் உரைப்பதைக்கேள்
அரசாங்கமும் குதிரையும் ஒன்றே.

பின் கால் இழுத்தலால் நாற்காலி வேட்டைக்காய் கூட்டமும்
ஓட்டமும் உண்டதால் கள்ளில் கொள்ளில் விருப்பமுண்டாதலால்
கராமா வாழ் கவிராயன் உரைப்பதைக்கேள் பிடரி உடைய
பரியும் அரசும் ஒன்றே என்று.

க(ட்)ச்சியுடையதாம் போர்புரிவதாம் புறங்காட்டுதலாம்
சட்டத்தின் முன் நிற்பதால் நேரெதிர் மோதுதலால் - மாளிகை வாசத்தினால்
கட்டிய மனைவியுடன் சண்டையிடும் கராமா வாழ் கவி சொன்னேன் கேள்
கொட்டிலில் கட்டும் குதிரையும் அரசும் ஒன்றேயாம்.

கழுதையும் ஊசியும் ...

சந்தில் நக அழுக்கெடுத்தலால் அங்கு தைத்தலால் பழுதுக்குதவுவதால்
துணிகளைச் சேர்ப்பதால் துளையுள்ள செவியுள்ளதால் - விருப்பமுடன்
காகிதம் சேரும் தொலையும்போது கால் பாதையில் கவனம் வைப்பதால்
கராமா காளமேகம் உரைப்பேன் கேள் கழுதைக்கு சமன் ஊசிஎன்று.

ஆலமரமும் புகைப்படமும்.

நிழலாவதால் சேனை அரசர் படையையும் உள்ளடக்குவதால்
விழுவதால் சட்டத்திற்கும் தோதாய் வெளிச்சத்திற்கு எதிரியாய்
பல்லுக்கு உதவியாய் இருப்பதால் கவிராயன் நாகராசன் உரைப்பேன்
தொல்லுலகில் ஆலமரமும் புகைப்படமும் சரிசமம் என்று..

:::நாகராஜன்:::

நன்றி நண்பர்களே! - தனமதவன்

மழையில் நனைந்தேன்
உங்கள் புதுக்கவிதைமழையில் நனைந்தேன்.

விட்ட உறவை
வீதியில் புதுபித்தோம்
இந்த வலை வீதியில் புதுப்பிதோம்!! .

நேரில் கண்டோம்
நெஞ்சார அணைத்தோம்!
நேரம் தெரியாமல் நெடு நேரம் பேசினோம்!! .

கூடினோம்! கொட்டமடித்தோம்!
கொண்டாடினோம்!!
கும்மலமிட்டோம்! கூட்டான் சோறும் உண்டோம். .

நாட்கள் கடந்து நான் இங்கே வந்தாலும்
நல்ல கவிதை பார்த்து
நெஞ்சம் உருகினேன் உள்ளம் மகிழ்ந்தேன்!
.
நன்றி நண்பர்களே!
உங்கள் பணி தொடரட்டும்
நாவில் சுவையூட்டும் நற்றமிழ் வாசிப்போம்
.
தனமாதவன்

கவிதைக்கழகு - ஷபீர் அஹ்மத்

கல்விக்கழகு கசடறக் கற்றல் நல்ல
கவிதைக்கழகு 'நச்'சென்று இருத்தல்
- ஷபிர் அஹ்மத்

பற்றறு....:::நாகராஜன்::;

பற்றறு....
(இவ்வடிகளுக்குக் கீழே விளக்கம் காண்க)

பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்

பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..

பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
பற்றற்று ஆசை களைந்தவன் முனிவன்..

பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..

வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..

பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்

பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..

:::நாகராஜன்::;


1. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்:
கடல் நீரில் கரைந்திருப்பது உப்பு. ஆனாலும் கடல் மீன் கரிப்பதில்லை. உப்பு நீரைப்பற்றியிருந்தாலும் மீனைப்பற்றுவதில்லை. இது கடவுளின் இயல்பு.

பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்:
பூமி மற்றும் ஏனைய கோள்கள் ஆதாரம் இன்றி வளி மண்டலத்தில் மிதக்கின்றன. எந்தப் பிடிப்பும் இல்லாமல் அவைகளைப் பற்றி இயக்குபவன் அவன். இது மற்றொரு கடவுள் இயல்பு.

2. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
எதிலும் பற்று வைத்தவனும் பற்றுவ் வைக்கதவனும் ஆகிய இறைவன் அடி பற்றுக.

அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..
ஆசையைத் துறந்து இன்மை மறுமை எனும் நிலை அடைவாயாக. (வீடு - சுவர்க்கம்)

3. பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
எதிலும் பற்றில்லாதிருக்க ஆடையையும் துறந்தவர்கள் ஜெயின் இனம் என்னும் சமணர் இனம்.
பற்றற்றுஆசை களைந்தவன் முனிவன்..
ஆசையைத் துறந்து மோகம் துறந்தவன் முனிவன்..

4. பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
இவ்வுலகில் கிடைக்கும் மூவகை துயர்தான் பணம், பாசம் மற்றும் மோகம்.
இறைவனை அறிய முடியாமல் நமக்குத் தடைக்கற்கள் இவை மட்டுமே. இம்மூன்றும் துறந்தால் ஞானம் வரும். பற்றற்ற நிலை வரும். இறைவன் வடிவமற்றவன். இறைவனை விவரிக்க மனிதனால் முடியாது. எனவே இறைவன் எப்படி இருப்பான் என்பதைக்காணாமல் அவனை உணர்தல் மட்டுமே மனிதனால் முடியும். மனிதன் படைத்த மதங்களில் மட்டும் இறைவன் வேறு வேறு. இறைவன் படைத்த உலகில் அவன் ஒன்று என்றே அறியப்படுகிறான்.

பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..
இறைவன் இருப்பது அடுத்தவன் மகிழ்வில். பசித்தவனுக்கு உணவிட்டால் இறைவன் உன்னுள் இருப்பதை உணர்வாய். வலியறியும் எவ்வுடம்பு நமக்கு என்றும் ஒரு துயரம் தான். வலியறியா நிலை அவனால் மட்டும் கொடுக்க முடியும்.

5. வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
ஆகையினால், பணம், பெண், மோகம் இவற்றால் வலி உணரும் இவ்வுடல் தேவையற்றது. மல சலம் சுமக்கும் இவ்வுடல் நிலையற்றது. ஒன்பது வாசல் உள்ள இவ்வுடல் வெளிப்படுத்தல் எல்லாம் கசடும் கழிவும் மட்டுமே. தெளிவாக அறிவீர்.

மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..
நம் உயிர் மற்றும் உடல் இரண்டும் வேறு வேறு. உயிர் நம் உடலைப் பற்றிக்கொண்டிருக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் உயிர் தன் கூடு மாற்றிக்கொள்ளும். வலி உணரும் இப்பிறப்பு நமக்கு ஒரு இடறேயன்றி வரமல்ல என்று உணர்வீர்.

6. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்


ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.

7. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..


ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.

15 பிப்., 2008

ஒளிக்கவிதை - ஷபீர் அஹ்மத்




நட்சத்திரங்களைப் பறித்துவிட்டு
வானத்தில் தோரணம் கட்டியது யார்?
மலைக்கும் மேகத்துக்கும் கல்யாணமோ?
- ஷபீர் அஹ்மத்

ஒளிக்கவிதை - :::நாகராஜன்:::



மழைக்கும் மேகத்திற்கும் மறுமணமோ....
மலைக்கும் மாலைக்கும் தோரணமோ...

வர்ணத்தை நூல் கட்டி விட்டது யார்..
பட்டொளி வீசிப் பறக்குது பார்....

மேகத்தின் கொடையோ பன்னீர் அருவிகள்
மலை வகுத்த வழியோ வெள்ளிச்சரிகைகள்..

பொழிந்தது போதும் மருதத்தில் மேகமே...
வா கிராமத்துப்பக்கம் தீர்க்க எம் தாகமே..

சீக்கிரம் வா முடிந்து போனது உன்
திருமணமும் முதல் இரவும்....

வராவிட்டால் உன்னை வரவைக்க கிராமத்தில்
செய்வோம் கழுதைக்கு கல்யாணம்..

::::நாகராஜன்:::

கொடை....:::நாகராஜன்:::

செய்தி:

அதியமான் கோட்டையில் நக்சலைட்டுகள் ஸ்டேஷன் புகுந்துத் துப்பாக்கித் திருடியதில் போலீஸ்காரர்கள் உடந்தை..

நன்றி- சன் டிவி


கொடை:
தனக்கு வேண்டாம் நெடுவாழ்வு

உனக்குத்தந்தான் ஔவையே நெல்லிக்கனி...


விடுமோ வள்ளல்தன்மை

அதியமான் ஆண்ட நாட்டில்...

தமிழ் மாநிலக் காவலருக்கு
தப்பில்லை போலும்....

திருடனுக்கு துப்பாக்கித்

தூக்கித் தந்தாலும்....


:::நாகராஜன்:::

சங்கக் கவிதைகள்....வ. மதிவாணன் - சிங்கப்பூர்

சங்கக் கவிதைகள்....
இப்படியும் கூட யோசிக்க முடியுமா?

ரொம்ப ஆச்சர்யமாகவும் அதே சமயத்திலே

enjoyable ஆகவும் இருந்தது..


வ. மதிவாணன் - சிங்கப்பூர்

ஏ ஃபார் ஆப்பிள்

பி ஃபார் பிக் ஆப்பிள்

சி ஃபார் சின்ன ஆப்பிள்

டி ஃபார் டபுள் ஆப்பிள்

ஈ ஃபார் இன்னொரு ஆப்பிள்
- ஆப்பிளை அறுத்து வைத்து திங்காமல்யோசிப்போர் சங்கம்

என்னதான் பூமி சூரியனைச்

சுற்றிச் சுற்றி வந்தாலும்

பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...

- நாசா வில் வேலை வாங்கத் துடிப்போர் சங்கம்


பவர் ஃபைல்யூருக்கும்

லவ் ஃபைல்யூருக்கும்

என்ன ஒற்றுமை? ....
பவர் ஃபைல்யூர் ஆனால்

வீடு இருட்டாகும்

லவ் ஃபைல்யூர் ஆனால்

வாழ்க்கை வெளிச்சமாகும்...


- பிரம்மச்சாரிகள் சங்கம்

(தலைமை இடம்: வெளி நாடு..)


சங்க முழக்கங்கள்


விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல

பரிட்சையில் பிட்டுக்கொடுப்பதும் நட்பேயாம்....


- மிட்நைட்டில் படித்தும் மண்டையில் ஏறாதோர் சங்கம்

இந்தியாவில்...

தோண்டினால் தங்கம் கிடைக்கும்

வெட்டினால் வெள்ளி கிடைக்கும்

அடித்தால் அலுமினியம் கிடைக்கும் ஆனால்

படித்தால் மட்டும் வேலை கிடைக்காது..


- வேலையில்லாமல் யோசிப்போர் சங்கம்


என்னதான் தீனி போட்டு

கோழி வளர்த்தாலும்

அது முட்டைதான் போடும்

100/100 போடாது

- கையேந்தி பவனில் கோழிக்கால் சாப்பிடுவோர் சங்கம்

என்னைப்பார் யோகம் வரும்

ஃபிகரைப்பார் சோகம் வரும்


- ஃபிகரு வந்தாலும் பார்க்கததுபோல் நடிப்பவர் சங்கம்


- தொகுப்பு: மணிவண்ணன்

அனுப்பியவர்: எஸ். வாசுதேவன் , சிங்கப்பூர்

கடவுள் வந்திருந்தார்...:::நாகராஜன்:::

கடவுள் வந்திருந்தார்...

காலம் பல கடந்தாலும்
கடவுள் இங்கே வந்திருந்தார்...

கூப்பிட்டதும் வாராமல் காலம் கடந்தே
வந்தார்... கடமை நிறைய இருந்ததென்றார்...

கடவுளுக்கில்லை கையும் காலும்..
காலண்டர் அச்சில் நான் கண்டது போல...

கடவுளுக்கில்லை மெய்யில் வடுக்கள்
கடவுளுக்கில்லை வெறும் கை மட்டும்...

கடவுள் இல்லை ஆண் பெண் வடிவாய்..
கடவுள் இல்லை உயர்த்திய கைகளாய்..

கடவுள் வந்தார் ஓர் ஒளி வடிவாய்... முகமில்லை
அவர்க்கு... இடையில் மொழியில்லை எமக்கு ..

ஒளி ஊடகம் சென்றது என்னுள்ளே.. என்
உள்ளம் உணர்ந்தது கடவுள் மொழி..

மௌனமாய் இருந்தோம் சில மணித்துளிகள் ..
கேட்பதைக் கேள் என்றார் நம் கடவுள்...

எங்கே இருக்கிறாய் நீ என்றேன்...வானத்தில்
இருக்கிறேன் எனவில்லை அவன்...

விளித்தால் ஏன் வருவதில்லை என்றேன்
விளிப்பவர்க்கு இல்லை தகுதி என்றான்...

உன்னை எங்கே காண்பேன் இனி என்றேன்..
காணும் இடம் என்று ஒரு பட்டியல் தந்தான்...

ஏழைக்கு இடும் உணவில், ஒரு குழந்தையின்
சிரிப்பில், வறியவனுக்குதவும் வழிமுறைகளில்..

பெற்றோர் இழந்த பிள்ளையில், கணவனில்லாப் பெண்ணில்
ஏய்ச்சிப்பிழைக்கா எஜமானன், ஏமாற்றாத மாந்தரிடம்,

கற்றுக்கொடுத்த குருவிடம் பெற்ற வயிற்றுக் கருவிடம்
பற்றில்லா பக்தனிடம் சிற்றின்பம் அற்றவனிடம்..

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவன்
தாரம் இழந்த பெண்ணை மதித்தவன்

பட்சி மிருகத்தோடு பகையற்றவன், பணத்திற்காய்
பாசம் கொடுக்காதவன், பெற்றவரை மறக்காதவன்

கல்விக்கு உதவியவன், கடமைக்குத் தயங்காதவன்
வலி உணர்ந்த வலியவன் வழக்காடப் போகாதவன்

வாக்கில் சுத்தம் உண்டானவன் வேசிக்கு உதவியவன்
வாய்மையின் வலிமையை உணர்ந்தவன்

பகைவனை நேசித்தவன் பசியறிந்து கொடுத்தவன்,
பாத்திரம் அறிந்து பிச்சையிட்டவன்

அடுத்தவன் மனையை விரும்பாதவன்
ஆலய சொத்தை அபகரிக்காதவன்

உருவின்றி அருவிலும் அருவற்ற
உருவிலும் புல்லாய் பூண்டாய் புழுவாய்

மரமாய் மீனாய்ப் பறவையாய் பாம்பாய்
விலங்காய் மனிதனாய் பூதமாய்..

வானாகி மண்ணாகி ஒளியாகி வளியாகி
ஊணாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்..

ஒலியாகி வழியாகி விருத்தமாய் செய்யுளாய்
விதியாய் விளக்கமாய் விளங்காமலாய்

அத்தனை இடத்திலும் என்னைப் பார்ப்பாய்...
புத்தனை போல் அந்தச் சித்தனைப் போல்..

இங்கெல்லாம் தேடாமல் வேறெங்கும் தேடாதே...
இங்கில்லைஎன்றால் எங்கும் இல்லை மறவாதே...

புரிந்தது எனக்கு.. புரியவில்லை எனக்கு..
ஒளி மறைந்தது ஓரிரு நிமிடத்தில்....

கடவுள் வந்திருந்தார்... என் கண்களைத் திறந்திருந்தார்..
எங்கும் இருக்கிறேன் என்றது இதுதானோ?....

:::நாகராஜன்:::

14 பிப்., 2008

காதல் கவிதை - சென்னைத் தமிழில்!::::நாகராஜன்:::

காதலர் தின வாழ்த்துக்கள்

வாரவதி மேல குந்திக்கினு கீறேன்...
வாத்யாரே வராங்காட்டி பேஜாராப் போறேன் ...

காவாக் கஸ்மாலம் கப்பு அடிக்கிது...
மூச்சு புடிச்சா மப்பு அடிக்கிது..

மைனரு மன்னாரு கண்டுக்கினு போறான்..
மஜ்ஜானம் உதாரா வூட்டாண்ட வர்றான் ...

கபால்னு மச்சான் நீ வா மண்ணடி ரோட்டுக்கா...
கபாலி நெஞ்சில மஞ்சா சோத்தை எடுத்துக்க ...

சொம்மாங்காட்டியும் குந்திக்கினா பீலிங்கா கீது..
மச்சான் நீ இல்லாமே படா பேஜாரா போவுது...

நீ இல்லாமே மனசு சொம்மா புஸ்ஸுன்னு கீது...
நெனப்பெல்லாம் எங்கேயோ இஸ்துகினு போவுது...

லவ்வுல இம்மாம் பேஜாரா கீதே?
கண்ணாலம் கட்டுனா கரிட்டாப் போவுமா?

ரோட்டுல போறவன் கண்ணெல்லாம் அடிக்குறான்...
பீச்சாங்கை பக்கமா சொம்மா வரியாங்கறான்...

மஜ்ஜானம் முல்லா கூப்புட வராங்காட்டி நான்
மைனரு மன்னாரோடெ ஜகா வாங்கிப் பூடுவேன் ....

பிரியாணி பொட்டலம் பிரிக்காத மாதிரி...
பிரிஞ்சிக்கோ மச்சான் முண்டச்சி மனசெ...

::::நாகராஜன்:::

தமிழ்த்தாயே என்னை மன்னிப்பாயா.. உன் மொழியை நான் களவாண்டதிற்கும் மேலே இருப்பதை கவிதை என்று சொன்னதிற்க்கும்...

உலோபி வீட்டு உரிப்பானை ...

உலோபியின் வீட்டின்
கூரையில் தொங்கும்
ஒன்றிரண்டு உரிகள்....

உத்திரத்தில் தொங்கும்
உள்ளே உள்ளது
என்றும் வெளியே வாராது...

காலம் அழிக்கும் அதை
கவலை இல்லை
உலோபிக்கும்...

காலம் மாறும்....
கவலையும் வரும் கையும்
கூப்பும் கடவுளின் முன்...

காலத்தில் செய்யா கருமங்கள்
அனைத்தும் கூட்டிச்
செல்லுமோ சொர்க்கம் வரை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் வரும்..

வாழ முடியாதான் வாழ்விற்கு
வழியுண்டோ என்று யோசி..
இல்லை என்றாலும் பலரிடம் யாசி..

தோள் கொடு முடியாதவன்
முதுகிற்கு... பாதியைப்பிரி
சுமப்பவன் பாரத்தை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் தெரியும் ..

:::நாகராஜன்:::

வா... கவிதை எழுதுவோம்... :::நாகராஜன்:::

வா... கவிதை எழுதுவோம்...

படிக்கும் காலத்தில் தளையும் வெண்பாவும்
தலையில் ஏறவில்லையா இல்லை தமிழ் பிடிக்கவில்லையா?

அடுத்தவன் கவிதை மனதை துளைக்கும்போது
கை பரபரத்து கவிதை எழுத துடிக்கிறதா?

வா... கவிதை எழுதுவோம்... உனக்குள் உணரும்
உணர்வுகளுக்கு வரி வடிவம் கொடுப்போம்...

மனசு உணர்ந்ததை வரிக்குள் கொண்டு வா..
பிறப்போ இறப்போ பூப்படைந்ததோ புஷ்பித்ததோ..

பிரிவோ சந்திப்போ பிள்ளையோ பெருமையோ
கடவுளோ தாசியோ மனிதனோ மிருகமோ..

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் யாவும் மற...

கைக்கு வந்ததை கிறுக்கிப்பார்,...
கிறுக்கிய வாக்குகளை குறுக்கிப்பார்....

வரிகளின் முதல் வாக்கு முக்கியம்....
ஒலிக்க வேண்டும் ஒரே மாதிரி அவை..

குறைக்கு குரையும் நிறைக்கு நிரையும்
எழுத்துக்குக் கழுத்தும் யானைக்குப் பானையும்...

எண்ணிப்பார் எத்தனை வாக்குகள் அறிவாய் நீ...
அத்தனையும் வரிசையாய் வரியாக்கிப்பார் ...

முடியும் வாக்குகள் அனைத்தும் மோனை என்பார்..
மோனைக்கும் எதுகைக்கும் அதே இலக்கணம்....

முடியும் வாக்கிற்கும் வார்த்தைகளை விரி...
படியும் என்றால் விடியும் மாலைக்குக் காலை...

எதுகையும் மோனையும் உனக்குக் கீழ் படிந்தால்
சந்தமும் படிமமும் உன் வசப் படும்....

பின் ஒரு வரிக்கு நான்கு நான்காய் வார்த்தைகள்..
முன் அனுபவம் வேண்டாம் கவிதைக்கு...

இரு வரி கவிதை வெண்பா...நான்கு வரி செய்யுள்
ஆறுவரி விருத்தம் அளவில்லா வரிகள் இலக்கியம்...

எதுகை மோனை சந்தம் படிமம் நான்கும்
இருந்தால் நீயும் ஒரு கவிஞன்....

தமிழ் உன் தாய்.. பிழை செய்தாலும் பொறுப்பாள் ...
எழுது அவளை கணினியிலோ அல்லது கவிதையிலோ...

உணர்வுகள் அவசியம் கவிதைக்கு.. உணர்ந்ததை
வரிக்குள் ஊசி போல செலுத்து, செம்மைப்படும் உன் கவி...

மொழியோ வார்த்தைகளே வேண்டாத ஒரு சில கவிதைகள்
எண்ணியதுண்டோ எப்போதேனும்.. கீழே பார் சிதறியதில் சில....

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் எதுவும் வேண்டாம்..

குழந்தையின் சிரிப்பு, ஒரு கூடை நிறைய பூக்கள்
கிழவியின் கனிவு, மழைக்குமுன் சில நொடிகள்...

யானையின் அசைவு, ரயிலின் கடப்பு
மார்கழி காலைக் குளிர், மனைவியின் அரவணைப்பு...

காதலியின் முத்தம், கடல் அலையின் சத்தம்
பிரிந்து சேர்ந்த தாய் சேயின் அழுகை..

வருஷக் காலண்டரின் காகிதப் படபடப்பு..
வரிக்குதிரையின் நிறம், வாரி சுற்றிய பெண்ணின் முடி..

குழந்தையின் கையில் காற்றாடி, கிழவனின் பொக்கை வாய் சிரிப்பு..
வறுமையிலும் சொந்தங்களோடு நடைபாதைக் குடும்பம்...

வா, உணர், வந்து எழுது, பேனாவில் தமிழ் மை நிரப்பு...
வெளியே கொட்டும் வரிகளும் கோடும் கவிதைகளாகட்டும் ...

முயன்று பார்...முடியும் உன்னால்... வா இங்கே
உட்கார்… ஒன்றாய்ச் சேர்ந்து கவி எழுதுவோம்...

:::நாகராஜன்:::

13 பிப்., 2008

காணாமல் போனவன்...::::நாகராஜன்::::


காணாமல் போனவன்...



பெத்த மனசு பதறுதய்யா...பாவி
மகனெக் பார்க்கலியே.....

கஞ்சி குடிச்சியோ கால்வயிறு ரொப்பினயோ. ..
பொலம்பறேனே நா இங்கே வெறுஞ்சிறுக்கி ...

உறியிலே காசு களவாண்டப்போ
நீதான் எடுத்தேன்னு நினைக்கலையே ....

அருக்காணி நெக்லசை எடுத்தது நீயாம் ..
அம்பல பூட்டையும் உடைச்சதும் நீயாம்...

ஆரோ சொன்னப்ப உடம்பெல்லாம் பதறிச்சு...
போலிசு பிடிச்சப்போ உசிரே பூடிச்சு..

வெலங்கேல்லாம் பூட்டிட்டு புடிச்சிட்டு போனானாம்..
வழியெல்லாம் உன்ன உதைச்சிட்டே போனானாம்...

பெத்த மனசு பதறுதய்யா... களவாணிப்பய
குடியிருந்த கருவும் கதறுதய்யா....

என்ன கொற வச்சோமையா நாங்க ஒனக்கு...
பஞ்சத்தைக்கூட வைக்கலயே பங்கு ஒனக்கு...

போலிசு ஜெயிலிலே தப்பிச்சு போனயாமே ...
போட்டாவெல்லாம் பேப்பர்ல வந்துச்சாமே ...

பெத்த மனசு பதறுதய்யா... உன் பேரக்கேட்டா
உடம்பெல்லாம் நடுங்குதய்யா ...

பூட்டு சூட்டு போட்ட போலிஸய்யா...
நல்லாத்தான் நான் வளத்தேன் எம்புள்ளய்ய...

கண்டா சுடசொல்லி உத்தரவாமே?
கலக்டர் ஐயா சொன்னாலும் நடக்காதாமே?

பொலம்பினாலும் மனசு ஆறலியே..
பாவிப்பய புத்தி மாறலியே...

பெத்தவ மனசு பதறுதய்யா...அம்மாவா
கோரிக்கை ஒன்னு கேக்கிறேன்யா..

சுட்டாக்க என்கிட்டே சொல்லாதீங்க...எங்காச்சும்
சொகமாத்தேன் இருக்கான்னு நெனச்சிப் போறேன்..

::::நாகராஜன்::::

10 பிப்., 2008

பிச்சைக்காரன்....:::நாகராஜன்:::

பிச்சைக்காரன்... நன்றி - புகைப்பட உதவி
- ஹென்றி டிசில்வா
அபுதாபி
http://www.henrydsilva.com/


ஏந்திப்பிழைப்பவன் நீயென்றால் ...
எந்தப் பிழைப்பில் பின் நாங்கள்?

வானுக்கும் பூமிக்கும் நடுவில் உன் வாசம்..
வாழ்க்கையோடு வெகுதூரம் உன் நேசம்...

வர்ணமடித்த கூரைக்குக் கீழும் பளிங்கு
தரைக்கு மேலும் நான் வாழும் கூடு...

வாங்கிய கட்டிலில் உறக்கம் வரவில்லை..
வட்டிக்குப் போய் பின்னே கையில் மிச்சமில்லை..

உன் பாத்திரம் உலோகத்தில் செய்த ஒன்று...
என் பாத்திரம் அளாளுக்குமாய் மாறும் என்றும்..

இல்லாத ஒன்றை கேட்பது பிச்சை என்றால்...
உன்னிடம் மட்டும் கேட்பேன் பிச்சை..

பச்சை வர்ணம் அச்சடித்த காகிதமும் கவலையும்
கட்டுக் கட்டாய் என் வீட்டு பெட்டிக்குள் மட்டும்..

இசையும் அமைதியும் கலையும் வித்தையும்
கட்டுண்டிருப்பது காண்பேன் உன்முன்னம் ..

யாசித்தவனிடமே நான் யாசிக்கிறேன்..
பிச்சை போட்டு பிச்சை கேட்கிறேன் ...

காகிதம் கொடுக்கிறேன் கலையைக்கோடு...
இருப்பதைக் கொடுக்கிறேன் இசையைக்கொடு..

இல்லாததை யாசிப்பது பிச்சை என்றால்...
இங்கு நீ மட்டுமா பிச்சைக்காரன்...

:::நாகராஜன்:::

வாழ்க்கை - முஹம்மது எலியாஸ்

என் வாழ்க்கை எனக்கு
miss ஆகிவிட்டது!
என் காதலி Mrs
ஆகி விட்டாள்!!
அதுவும் எனக்கே!

காதலுக்கு மரியாதை - முஹம்மது எலியாஸ்

காதலித்தோம்! கருத்தொருமித்தோம்!!
மயிரிழையில் தப்பிப்யது எங்கள் காதல்!!
மணங்கோண்டோம் நாங்கள்!!
வெவ்வேறு நபர்களுக்கு!!

தையல்காரன் :::நாகராஜன்:::

வேலை வெட்டி செய்ய வேண்டி
வெட்டி வேலை செய்பவன்....

காலச் சக்கரம் சுற்ற வேண்டி
காலால் சக்கரம் சுற்றுபவன்...

பாக்கெட்டிலும் கை வைப்பான்
ஜாக்கெட்டிலும் கை வைப்பான்...

ராமன் இவன்தானோ...
இன்று போய் நாளை வா என்பானே...

அருகில் உதவியாய் அங்கு(ஸ்தான்) தைப்பானை
அங்கு (உ)தைப்பானே...

பழைய துணி தைக்கான்! மழைக்காலத்தில்
அல்லது புதிய துணி இல்லாதபோது..

இவன் பெண் உடுத்தும் துணிகள் எல்லாம்
ஊரான் வீட்டு துணியின் மிச்சம்....

தையல்காரன் புதுத்துணி உடுத்தியதை
நீவிர் எங்கேனும் பார்த்ததுண்டோ?

தீபாவளியோ பொங்கலோ கிறிஸ்துமஸ் இல்லை
ரம்ஜானோ இவன் உறங்கியதாய் நினைவில்லை...

ஏற்ற தாழ்வு தையல்காரனிலும் உண்டன்றோ?
கடை வைத்தவன் மற்றவன் கையில் சுமப்பவன்..

ஆயத்த ஆடை வந்தபின் வேலை வெட்டி
ஏதும் இன்றி வெட்டி வேலை ஆனதே....

அடுத்த முறை ஆயத்த ஆடை வாங்கும்போது
இக்கவிதை உனக்குள்ளே எட்டிப்பார்க்கும்...

முடிந்தால் உதவி செய்! ஒரு துணியேனும்
தைக்கக்கொடு ஒரு வேளை சோற்றுக்காய்...

::::நாகராஜன்:::

மு. மேத்தா & ஷபிர் அஹ்மத்

காதலியிடம்!
மௌனம் உலகத்தில்
சிறந்த மொழிதான்
இருந்தாலும்
இன்னொரு மொழியை
தெரிந்து கொள்வதில்
என்ன தவறு?
ஏதேனும் பேசு!

-மு. மேத்தா

மனைவியிடம்!
உன் பேச்சைக்
கேட்ட பின் புரிந்தது.
மௌனம் எவ்வளவு
அழகு என்று!
கொஞ்சம் நிறுத்து!

-ஷபிர் அஹ்மத்

படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்

படித்ததில் பிடித்தது


திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.

கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.

காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.

கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்

சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.

படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்

படித்ததில் பிடித்தது

திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.
கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.
காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.
கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்
சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.

மனைவி ::::நாகராஜன்::::

பெண்ணென்றால் பேயென்று சொல்லிச்
சென்றவன் ஒரு சித்தனோ இல்லை புத்தனோ...

அற்றது பற்றென்றால் உற்றது வீடென்றார்..
புத்தா... விட்டுச்சென்றவளை வீண்டும் நினைத்தாயோ?

எதை எண்ணி உன்னோடு வந்தாள்?
எதைக்கொண்டு அவள் நிறைவெய்தினாள்?

படுக்கையை பகிர்ந்தாள், பின்னே உண்டாள்..
உன் பிள்ளையை பெற்றாள், உன் சுகம் தன் சுகம் என்றாளே...

வறுமை வந்தபோதும் வழக்கு விரட்டும் போதும்
நீண்டது அவள் கைதானே.. வளையல் போய் விஞ்சியது வெறுமை..

அம்மை போட்டபோதும் காமாலை கண்டபோதும்
உடல் மெலிந்ததும் எடை குறைந்ததும் அவள்தானே..

எத்தனை தந்தைக்குத் தெரியும் தன் மகன் தேவைகள்?
தேவைகளை செய்வித்து வாழ்க்கை சக்கரம் உருட்டியதவள்தனே..

ஒரு பண்டிகையின் முதல் நாளிரவு அவள் உறங்கினாளா?
உறங்காத குழந்தையைத்தான் உதறினாளா?

பேருந்தில் தெரியாதவன் கால் மிதித்தாலும்
மன்னிப்புக் கேட்கும் ஆண் வர்க்கமே..

ஒரு முறையாவது அவள் பணிவிடைக்கு நீ
மனப்பூர்வமாய் நன்றி சொன்னதுண்டா?

சில நேரம் நமக்குப் புரிவதில்லை
அருகில் உள்ள நம் சொத்துக்கள்...

அது மனைவியையும் சேர்த்துத்தான்...
புரியும்போது அவள் நம்மருகில் இருப்பதில்லை...

ஒரு நாள் அவள் அருகில் உட்கார்... அவள் செய்த
நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்..

பின் புரியும் உனக்கு நீ அடைந்த பெண்ணால்
எத்தனை பாக்கியம் உனக்கு என்று...

:::நாகராஜன்:::

வாத்தி... ::::நாகராஜன்::::

அய்யாசாமிக்கும் அருக்காணி சிறுக்கிக்கும்
அருமைப்பிள்ளையாம் வெள்ளையப்பன்...

அரை திரௌசெர் போட்டு அனுப்பி வைத்தார்
அடுத்த தெருவில் அரைப்பள்ளிக்கூடம் ....

மூக்கொழுகும் வெள்ளையப்பனை பிடிக்கவில்லை வாத்திக்கு...
மூலையில் அமர்த்தி முட்டிபோட வைத்தான் நாள் பாதிக்கு...

முன்சீப்பு பிள்ளைக்கும் கர்ணம் பொண்ணு காமாட்சிக்கும்
முன்சீட்டு எதுக்கென்று கேட்கவில்லை வெள்ளையப்பன்...

முன்சீப்பு பிள்ளை வரவில்லைஎன்றாலும் பிரெசென்ட் தான்..
வீட்டுப்பாடம் பண்ணினாலும் வெள்ளையப்பனுக்கு முட்டிதான்...

சந்தேகம் தீர்க்க யாரும் இல்லை அருகிலேயும்..
கர்ணம் போல ட்யூஷன் வைக்க வக்குமில்லை...

அந்த வருஷமே முடிந்தது வெள்ளையப்பன் படிப்பு..
அப்பா சொன்னது போல எருமை ஓட்டமட்டும் லாயக்கு..

கிழிந்த டவுசரும் கையில் ஏருமாய் மாறிப்போச்சு வாழ்க்கை..
பட்டணத்திற்கு படிக்கப்போனது முன்சீட்டு பிள்ளைகள் ...

கல்லூரிக்குப்போன பிள்ளைகள் காதலித்து ஓட..
ஊரே சிரித்தது முன்சீப்பையும் கர்ணத்தையும்...

முன்சீப்பு பிள்ளை கம்ப்யூட்டர் படித்து அமெரிக்கா வேலை..
காமாட்சிக்கு யோகம் ஒரு பிரசவத்தில் இரட்டை பிள்ளை...

வெள்ளையப்பனுக்கு தெரியாது அமெரிக்கா பற்றி..
நாட்டமை விளக்கியபோது விழுந்தது வாய் எச்சி ...

கொள்ளிபோட யாருமின்றி வாய் பிளந்தார் வாத்தி..
ஊர் கூடி யோசித்தது பிணம் எரிப்பது பற்றி...

முடிவானது வெள்ளையப்பந்தான் கொள்ளிபோடணுமாம்..
ஏனென்றால் தன் பிள்ளைபோல வளர்த்தானாம் வாத்தி...

:::நாகராஜன்:::