மொத்தப் பக்கக்காட்சிகள்

14 பிப்., 2008

காதல் கவிதை - சென்னைத் தமிழில்!::::நாகராஜன்:::

காதலர் தின வாழ்த்துக்கள்

வாரவதி மேல குந்திக்கினு கீறேன்...
வாத்யாரே வராங்காட்டி பேஜாராப் போறேன் ...

காவாக் கஸ்மாலம் கப்பு அடிக்கிது...
மூச்சு புடிச்சா மப்பு அடிக்கிது..

மைனரு மன்னாரு கண்டுக்கினு போறான்..
மஜ்ஜானம் உதாரா வூட்டாண்ட வர்றான் ...

கபால்னு மச்சான் நீ வா மண்ணடி ரோட்டுக்கா...
கபாலி நெஞ்சில மஞ்சா சோத்தை எடுத்துக்க ...

சொம்மாங்காட்டியும் குந்திக்கினா பீலிங்கா கீது..
மச்சான் நீ இல்லாமே படா பேஜாரா போவுது...

நீ இல்லாமே மனசு சொம்மா புஸ்ஸுன்னு கீது...
நெனப்பெல்லாம் எங்கேயோ இஸ்துகினு போவுது...

லவ்வுல இம்மாம் பேஜாரா கீதே?
கண்ணாலம் கட்டுனா கரிட்டாப் போவுமா?

ரோட்டுல போறவன் கண்ணெல்லாம் அடிக்குறான்...
பீச்சாங்கை பக்கமா சொம்மா வரியாங்கறான்...

மஜ்ஜானம் முல்லா கூப்புட வராங்காட்டி நான்
மைனரு மன்னாரோடெ ஜகா வாங்கிப் பூடுவேன் ....

பிரியாணி பொட்டலம் பிரிக்காத மாதிரி...
பிரிஞ்சிக்கோ மச்சான் முண்டச்சி மனசெ...

::::நாகராஜன்:::

தமிழ்த்தாயே என்னை மன்னிப்பாயா.. உன் மொழியை நான் களவாண்டதிற்கும் மேலே இருப்பதை கவிதை என்று சொன்னதிற்க்கும்...

கருத்துகள் இல்லை: