மொத்தப் பக்கக்காட்சிகள்

14 பிப்., 2008

உலோபி வீட்டு உரிப்பானை ...

உலோபியின் வீட்டின்
கூரையில் தொங்கும்
ஒன்றிரண்டு உரிகள்....

உத்திரத்தில் தொங்கும்
உள்ளே உள்ளது
என்றும் வெளியே வாராது...

காலம் அழிக்கும் அதை
கவலை இல்லை
உலோபிக்கும்...

காலம் மாறும்....
கவலையும் வரும் கையும்
கூப்பும் கடவுளின் முன்...

காலத்தில் செய்யா கருமங்கள்
அனைத்தும் கூட்டிச்
செல்லுமோ சொர்க்கம் வரை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் வரும்..

வாழ முடியாதான் வாழ்விற்கு
வழியுண்டோ என்று யோசி..
இல்லை என்றாலும் பலரிடம் யாசி..

தோள் கொடு முடியாதவன்
முதுகிற்கு... பாதியைப்பிரி
சுமப்பவன் பாரத்தை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் தெரியும் ..

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: