மொத்தப் பக்கக்காட்சிகள்

17 பிப்., 2008

சிலேடைக்கவி... :::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பாகற்காயும் கந்தல் துணியும்

கசக்குதல் கூடியதால் பறிக்க ஏதுவாய் கொடியில் தொங்குதலால்
துவட்டலுக்கு உதவியதால் மேலே சொரசொரப்பாய் மஞ்சளாய் மாறும்
பழையதானால் தண்ணீர் இல்லாத் துபாயில் தலை துவட்டி
மழைநாளில் கவிராயன் கூறுவேன் பாகலும் கந்தலும் ஒன்றென்று!

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி....::::நாகராஜன்::::

சிலேடைக்கவி - பாம்பும் மலையாளிப் பெண்ணும்

சே(ட்)டன் என்பார் தலைக்கேறும் அவ்விடம் என்பார்
கட்டுடல் உண்டு வெளியே வருகையில் தலை விரித்து நெளியும்
தன் குலமே சேரும் வெளுப்பு முண்டு தமிழ் வீசும் தரணியில்
நாகராசன் சொல்வேன் சமன் மலையாளியும் பாம்பும்

சிலேடைக்கவி - அருவியும் மூக்குச்சளியும்

மேல் தொடங்கித் தாழ் ஒழுகும் கொட்டும் இயல்புண்டு
பச்சை நிறம் சேரும் அருகில் சாரல் அடிக்கும் மழையே பருவம்
கராமா காளமேகன் கவிராயன் நாகராசன் சொன்னது கேள்
அருவியும் மூக்குச்சளியும் இவ்விதத்தில் ஒன்றேயாம்


:::நாகராசன்:::