மொத்தப் பக்கக்காட்சிகள்

20 பிப்., 2008

அந்தாதித் துதி....:::நாகராஜன்:::

அந்தாதித் துதி

அபிராமி ஆத்தாளை .....
ஈசனடி அமர்ந்தாளை
வணங்கிடும் அக்காளை
ஒன்றாய் இருந்தாளை
பித்தன் இடந்த்தோளை
அனைவரையும் ஈத்தாளை
மலைமேல் உற்றாளை
கங்கை நீர் ஊற்றாளை
சூல் கையில் எடுத்தாளை
எனை மகனாய் ஏற்றாளை
அணிந்தாளை ஐந்தாழை
ஒறுத்தாரை ஒறுத்தாளை
ஓதித் தெளிந்தாளை
அண்டம் காத்தாளை
ஞானம் கொடுத்தாளை
பல்லுயிர்ச் சார்ந்தாளை
குங்கலீயம் சூழ்ந்தாளை
சேவித்தவரைத் தாழ்த்தாளை
குங்கும நிறத்தாளை
கரங்கீழ்ப் படிந்தாளை
தாளறுத்தாள் படிந்தாளை
கடைக்கண் பார்த்தாளை
பக்தனுக்குப் பித்தாளை
கரன் கரம் பிடித்தாளை
ஈசன் இடம் பிடித்தாளை
அகிலம் பூத்தாளை
பிள்ளையீர் பெற்றாளை
மோகமதை மாய்த்தாளை
பசிக்குணவு வார்த்தாளை
கடுகேனும் வெறுத்தாளை
மேனியெல்லாம் வேர்த்தாளை
பாசத்தளை அறுத்தாளை
ஓதித் துதித்தாளை
நடமாடிக் குதித்தாளை
மாரிப் பொழித்தாளை
ஆறாய் வழிந்தாளை
அசுரனை விழித்தாளை
விதியதை வகுத்தாளை
ஞானம் பகுத்தாளை
வீரம் சொரித்தாளை
மேனிபச்சை உகுத்தாளை
வெள்ளிமலை வாழ்ந்தாளை
சிவனடி வீழ்நதாளை
அந்தமாதி அற்றாளை
பகை கொள்ளாதாளை
திரண்ட ஞானத்தாளை
மேகமெனும் மானத்தாளை
மச்சமெனும் மீனத்தாளை
தவமெனும் மோனத்தாளை
மினுக்கும் மஞ்சத்தாளை
அணியுடை விஞ்சித்தாளை
கொடையிலை வஞ்சித்தாளை
இடையது இளைத்தாளை
புலிமேல் உடுத்தாளை
உடுக்கைப் பிடித்தாளை
இடுக்கண் கலைந்தாளை
புலிவாகனம் வரித்தாளை
திரிபுரம் எரித்தாளை
திரிகண்ணவனை உரித்தாளை
ஏகம்பர் தவத்தாளை
கரும்பொடு இருந்தாளை
காளத்தில் ஞானக்கொழுந்தாளை
உயிர் மெய் எழுத்தாளை
உயிர் மெய் எழுத்தாலே
பணிந்தேன் அத்தாய்த்தாளை


:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: