மொத்தப் பக்கக்காட்சிகள்

16 பிப்., 2008

அடங்கா மனைவி... :::நாகராஜன்:::

அடங்கா மனைவி...

ஆனைப்பெரிதெனினும் அங்குசத்திற்கு அடங்கும்
பானைப்பெரிதாயினும் கயிற்றுரிக்குள் அடங்கும்
ஆறு பெரிதானாலும் அகண்ட கரைக்கடங்கும்
எதைக்கொண்டு கட்டிய பெண் அடங்கும்?

வலியவன் எத்தனை பெரியவன் ஆயினும்
மெலியவன் தாள் வீழும் நாள் வரும்
வலியவன் வெளியே பெரியவன் ஆனாலும்
விழுவது பெண்ணின் தாள் வெளியில் அறியார்

எறும்பூர கல்லும் குழியும்
ஏர் ஊற நெல்லும் விளையும்
சேர்ந்தூர தேரும் நகரும்
எது செய்தல் பெண் நகரும்...

நிலவில் அழுக்கிருந்தாலும் உலகிற்கு வெளிச்சம்
மெய்யில் தாள் வலித்தால் கண் உகுக்கும் நீர்
கொள்வார் இல்லையெனினும் காக்கை விரும்பும் வேப்பங்கனி..
சுயநலம் இல்லாது வாழ்ந்தும் புரியாதே உன் மனை..

தாழற்ற கதவில் வலுவில்லை கொண்ட
தலையற்ற பெண்டிர்க்கு வழ்வுமில்லை
உடல் தாக்க விரையும் தடியை எதிர்பார்ப்பின்றி
முன்னின்று கரம் சென்று காக்கும் விழும் அடியை...

காப்புளது குளம் கரையுளது ஆறு விரிந்து பரந்த
கடலுக்குண்டோ கரை? கணவனைப்பேனும் பெண்டிர்க்கு
காவலுண்டு என்றைக்கும் கண்டீர் இம்மாநிலத்தீர்
கண் அற்றவன் அஞ்சான் இருளைக்கண்டு...

நிலம் நீர் காற்று நெருப்பு பூதங்களிவை மாத்திரம்
இதில் சரிவிகிதம் உணர்தல் உயிரின் மந்திரம் - பூத
விகிதம் கலைந்தால் உயிர் மறையும் என்பதே விதி
உயிர் மறையும் உணர்வே இறப்பென்றுணர் மனையே...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: