மொத்தப் பக்கக்காட்சிகள்

16 பிப்., 2008

சிலேடைக்கவி....:::நாகராஜன்::;

சிலேடைக்கவி - ஒரு விளக்கம்.

ஒரே பாடல் இருவேறு பதங்களுக்கோ இருவேறு பொருள்களுக்கோ பொதுவாய் அமைவதை சிலேடை என்கிறோம். பண்டைய காலத்தில் கவி காளமேகப்புலவர் என்பார் மாத்திரம் இச்சிலேடைக்கவிதைகளை நமக்குத் தந்து போனார். அவர் காலம் போனபின் சிலேடைக்கவி வழக்கொழிந்து மரபுக்கவியும் புதுக்கவியும் மட்டும் அளவில் பெரிதாக உருவெடுத்தன. சம காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர் கி வா சகந்நாதன் மட்டும் சிலேடையை உரைநடையிலும் பேச்சிலும் உபயோகித்து மகிழ்வித்தார். வழக்கொழிந்த சிலேடைக்கவிக்கொரு வாழ்க்கை கொடுப்போம் . சில சிலேடைக்கவிதைகளை இங்கே நான் தொடுத்திருக்கிறேன். தமிழ் அறிந்த புலவர்கள் இலக்கண பிழை இருந்தால் எளியவனை மன்னிக்கவும். தயை கூர்ந்து தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், திருத்திக்கொள்கிறேன். எளிமையான நடையில் புரியும்படி எழுதியுள்ளேன் . தயவு செய்து அனைத்து நண்பர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பி, எவ்வொப்பிலக்கிய சிலேடைக்கவிதையை மீண்டும் வளர உதவுங்கள்.

:::நாகராஜன்:::

அரசாங்கமும்... குதிரையும்...


வரியுண்டாதலால் நல்ல குடிதேர்வால் கோட்டையில் இருத்தலால்
நாற்காலியாதலால் மக்களைச் சுமப்பதால் - நன்னாட்டில் இனிய
கராமா வாழ் காளமேகம் நாகராசன் உரைப்பதைக்கேள்
அரசாங்கமும் குதிரையும் ஒன்றே.

பின் கால் இழுத்தலால் நாற்காலி வேட்டைக்காய் கூட்டமும்
ஓட்டமும் உண்டதால் கள்ளில் கொள்ளில் விருப்பமுண்டாதலால்
கராமா வாழ் கவிராயன் உரைப்பதைக்கேள் பிடரி உடைய
பரியும் அரசும் ஒன்றே என்று.

க(ட்)ச்சியுடையதாம் போர்புரிவதாம் புறங்காட்டுதலாம்
சட்டத்தின் முன் நிற்பதால் நேரெதிர் மோதுதலால் - மாளிகை வாசத்தினால்
கட்டிய மனைவியுடன் சண்டையிடும் கராமா வாழ் கவி சொன்னேன் கேள்
கொட்டிலில் கட்டும் குதிரையும் அரசும் ஒன்றேயாம்.

கழுதையும் ஊசியும் ...

சந்தில் நக அழுக்கெடுத்தலால் அங்கு தைத்தலால் பழுதுக்குதவுவதால்
துணிகளைச் சேர்ப்பதால் துளையுள்ள செவியுள்ளதால் - விருப்பமுடன்
காகிதம் சேரும் தொலையும்போது கால் பாதையில் கவனம் வைப்பதால்
கராமா காளமேகம் உரைப்பேன் கேள் கழுதைக்கு சமன் ஊசிஎன்று.

ஆலமரமும் புகைப்படமும்.

நிழலாவதால் சேனை அரசர் படையையும் உள்ளடக்குவதால்
விழுவதால் சட்டத்திற்கும் தோதாய் வெளிச்சத்திற்கு எதிரியாய்
பல்லுக்கு உதவியாய் இருப்பதால் கவிராயன் நாகராசன் உரைப்பேன்
தொல்லுலகில் ஆலமரமும் புகைப்படமும் சரிசமம் என்று..

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: