மொத்தப் பக்கக்காட்சிகள்

15 பிப்., 2008

ஒளிக்கவிதை - :::நாகராஜன்:::



மழைக்கும் மேகத்திற்கும் மறுமணமோ....
மலைக்கும் மாலைக்கும் தோரணமோ...

வர்ணத்தை நூல் கட்டி விட்டது யார்..
பட்டொளி வீசிப் பறக்குது பார்....

மேகத்தின் கொடையோ பன்னீர் அருவிகள்
மலை வகுத்த வழியோ வெள்ளிச்சரிகைகள்..

பொழிந்தது போதும் மருதத்தில் மேகமே...
வா கிராமத்துப்பக்கம் தீர்க்க எம் தாகமே..

சீக்கிரம் வா முடிந்து போனது உன்
திருமணமும் முதல் இரவும்....

வராவிட்டால் உன்னை வரவைக்க கிராமத்தில்
செய்வோம் கழுதைக்கு கல்யாணம்..

::::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: