மொத்தப் பக்கக்காட்சிகள்

11 மார்., 2008

வினையெழுத்துக் கவிதை.....:::நாகராஜன்:::

வினையெழுத்துக் கவிதை.....

பிற பாலுக்கழு
முகம் நோக்கிச் சிரி
தவழ் நட ஓடு
பாடம் படி தேர்வெழுது
விளையாடு சண்டையிடு

தெருப் பெண்களிடம்
செட்டைசெய் வம்பிழு
தொட்டுப்பார் புகைப்பிடி
மையால் மீசை வரை
படியில் தொங்கு பிரயாணி

கல்லூரி சேர் நண்பனைப்பெறு
காதலி பெண்ணைப் புரி
பிரி வருந்து மீண்டும்
சேர்கையில் மகிழ்
வாழ்க்கைப் பாதைக்குள் வா

வேலைக்கு அலை பணம் பார்
ஒண்ட ஓர் கூரை செய்
கல்யாணம் செய் பிள்ளை பெறு
வாலிபம் விலகு பொருள்
சேர் வித்தை அறி

உலகம் சுற்று அனுபவி
போகி மோகி பின் யோகி
நாற்பதில் எல்லாம் முடி
பற்றறுத்து பரமன் பதம் பார்
பந்தம் விலக்கு வாழ்தலின் நோக்கு காண்..

இல்லையெனில்.....

அனுபவங்களை திரட்டு
அசைபோடு நினைவுகளை
இதயத்தில் உள்ளதைக்
கைக்குக் கொண்டு வா
கவிதை எழுது.. இதுபோல...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: