மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

ஆட்டோகிராப்....:::நாகராஜன்:::

ஆட்டோகிராப்....

பள்ளியின் இறுதி நாட்கள்
துள்ளலின் பருவ முடிவில்
பாடம் படித்த இடம்
மறக்குமோ என நினைக்கையில்...

இல்லை... அதுவரை கூடப்
படித்தவனை மட்டுமே அறிந்து
பிரியும் ஏக்கம் தாளாமல்
வரிகளில் துக்கம் அடக்கவோ...

அடுத்த பெஞ்சில் அமர்ந்தவள்
ஒருவேளை ஐ லவ் யூ எழுதி
காதலை சொல்வாளோ
என எதிர் பார்த்தோ....

எதுவோ ஒன்று… ஆனால் என்ன?....
கையில் அடக்கமாய் குறு நோட்டை
பல வண்ணத் தாள்களை ஒன்றொன்றாய்
ஓடிச்சென்று நிரப்பிய நினைவுகள்...

தெரியாமல் விரல் தொட்ட லலிதா
தப்பு கணக்கிற்காய் குட்டிய வாத்தி
விளையாட்டில் அடித்த சக மாணவன்
மணி அடிக்கும் பியூன் முனுசாமி ....

இன்னும் எத்தனையோ பேர்
நாலு வரிகள் எழுதிக் கொடுத்தது...
எதையோ பரணிலிருந்து இழுத்து
எடுக்கையில் தலைமேல் விழுந்தது....

பக்கம் புரட்டுகையில் எல்லார்
நினைவும் ஊர்ந்து போனது….
ஒரொரு பக்கமும் நினைவெல்லாம்
இனித்து நிகழ் காலம் மறந்தது...

கோவிலிலிருந்து அவசரமாய்
உள்ளே வந்த மனைவி குங்குமம்
சுற்ற ஒரு தாளைக் கிழிக்கையில்
என் இதயமும் கிழிந்தது...

:::நாகராஜன்:::

1 கருத்து:

Chitra Lakshimi சொன்னது…

Nagaraj avargalukku, kavithai migavum nanraga irrunthathu. Siru vaarthaikalil azlagai ninaivugal. Vazhthukkal. Thodarattum.
Chitra Lakshimi