மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

சிதம்பரம்.... :::நாகராஜன்:::

சிதம்பரம்....

நடுக்கில் முளைத்த கோவில் சுவரில்
காவியும் வெளுப்பும் வர்ணமாய்
சுற்றிலும் மாட வீதிகள், முழுவதும்
அந்தணர்களும் அம்மாமிகளும் ...
மற்றவர் நுழையத்தடை....

ஆனாலும் பாலுக்கும் காய்க்கும்
சாக்கடை கழுவவும் ஜாதியின்றி
யாவர்க்கும் உண்டு அனுமதி...
கோவிலில் சில்லறையைக் கழுவாமல்
மடியில் சுருட்டும் குடுமி பிராம்மணன்....

சித்திரையோ பங்குனியோ
கண்டிப்பாய் ஒரு பண்டிகை….
பிராமணன் பிழைக்க வேண்டாமா?
உற்சவர் வீதியில் உலா வருதலும்
மற்றவர் சாமிக்கு தேங்காய் உடைத்தலும்....

ரத சப்தமியோ இல்லை ஆருர்தோடு
தரிசனமோ இல்லை பங்குனி
உத்திரமோ இல்லை சிவா ராத்திரியோ
ஏதும் இல்லை என்றால் இருக்கவே
இருக்கு நந்திப் பிரதோஷம்...

எத்தனை இருந்து என்ன?
ஈசனை தமிழில் துதிக்க நமக்கு
கோர்ட்டின் அனுமதி வேண்டியிருக்கு...
அல்லது தலித்தின் தோளேறிப் போராட
ஒரு முதிவனும் தமிழக அரசின்
பென்ஷன் திட்டத்தில் ஒரு வயதான
தருமபுர ஆதீன சிவ பக்தனும்....

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: