மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

பயம்....:::நாகராஜன்:::

பயம்....

பகலில் ஒரு தொல்லையுமில்லை!
பேயோ பிசாசோ முனியோ சனியோ
வாய்க்கு வந்ததை வெளியில் சொல்லி
தைரியவான் ஆகலாம்...
ஆனாலும் சந்தை முடிந்து
மிச்சம் கட்டி சுவேகாவில்
ராத்திரி பத்திற்கு வீடு
திரும்புகையில் இருட்டில்
தெரியும் நிழலும் தூரத்து
லாந்தர் விளக்கும் உறங்காமல்
கத்தும் மரத்தும்பிகளும்...
சப்தம் போடும் மின் கம்பிகளும் ....
பேச்சு துணைக்கேனும் யாரும்
வருவாரோ என்று நினைக்கையில்
அதிகம் பேசினோமோ என்று
தோன்றுதலை தடுக்க முடியவில்லை...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: