மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

காதல்....::::நாகராஜன்:::

காதல்

நீயே நானானதால் நானே நீயானதால்
நான் அங்கிருக்கிறேன் நீ இங்கிருக்கிறாய்
இடம் மாறுதல் பிழையல்ல பெண்ணே...
மாறாவிட்டால் இல்லை காதல் கண்ணே...

உறக்கத்திலும் உன்னை உணர்வேன் நீ
விழிக்காமலிருக்க நான் விழித்திருப்பேன்
உடல் வசமிழந்து தளர்கையில் நாளை
முடிந்தால் செய்வோம் என்பதிலிருக்கிறது காதல்..

தொடுவதில் படுவதில் உராய்வதில் இல்லை காதல்
கட்டுடல் தசைப் பிடிப்பு கவர்ச்சி வேண்டாம் காதலில்
எனக்கொரு தொல்லைஎனில் உன் கண் உகுக்கும்
என் தொல்லை உன்னிடம் சொல்லாமல் போகுமது காதல்

நாடி தளர்த்து நடை பிசகையில் துணையாய் வரும் உன் கை
ஆடி முடித்த நாட்களை அசை போடுகையில் உடன் உன் துணை
கிடக்கும் முன் நாளை பார்ப்போம் என்பதில் உண்டு காதல்
விதவையாய் நினைவுகளுடன் போராடித் தோற்பதில் உண்டு காதல்

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: