மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

நாளை மரணம்....

நாளை மரணம்....

சேமித்ததெல்லாம் மனைவியிடம் சொல்லியாச்சு..
வரும் கடன் வராக்கடன் வாங்கிய கடன்
எல்லாம் மகன் மகளிடம் தெரிவித்தாச்சு..
ஏ டி எம் அட்டை பின் நெம்பர் கொடுத்தாச்சு
பேங்க் அக்கௌன்ட் EOS மாத்தியாச்சு
இன்சூரன்ஸ் தொகை அதிகப் படுத்தியாச்சு
பர்சில் உள்ள காசை பிச்சை போட்டாச்சு
பத்து வெள்ளை தாளில் கையெழுத்திட்டு
பையன் கையில் கொடுத்தாச்சு...
இனி ஏதும் பாக்கியில்லை செய்ய...
ஆனாலும் சாகத்தான் வேண்டுமா?

::::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: