மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

பிராமணன்....:::நாகராஜன்:::

பிராமணன்....

தலை மழித்து பின்னில் ஒரு
கற்றை மயிர் மட்டும் முடிச்சுடன்
மாரில் குறுக்காய் முப்புரி நூல்
இடையில் குறுக்கு கட்டி வேட்டி....

கையில் செம்புடன் காலை நேரம்
ஆற்றில் குளியலும் சூர்ய வந்தனமும்
மதியம் சந்தியைக்கு மீண்டும் தொழலும்
காயத்ரி மந்திரம் நூறு முறையேனும்....

இடைப்பட்ட வேளையில் கையில்
வாத்தியத்துடன் உஞ்ச விருத்தி
இல்லை கோவில் கருவறையில்
கடவுளோடு சமஸ்கிருதக் கொஞ்சல்...

வெளியே பக்தனுக்கு மேலிருந்து
பிரசாதம் எறிதல் அல்லது
வேலையில்லாதபோது பத்தாவது
பிள்ளையை உருவாக்குதல்....

தட்டில் விழும் காசிற்க்காய் கூடுதல்
மந்திரம் சொலல், இல்லையேல்
அமாவாசை, தர்ப்பணத்தி்ற்கு கால் கழுவி
வாழையும் அரிசியும் பிதுர் யாசகம் பெற்று…

பிராமணனுக்குத் தெரியாமல் போனது
வேறெந்த வேலையும் வாழ்வியலும்...
வியாபாரம் தெரியாது விளம்பரம்
தெரியாது அரசியல் தெரியாது....

காலம் மாறி கலி முற்றுகையில்
பிராமணன் வாயில் பீடியும் பிஸ்ஸாவும்
அமெரிக்க வாசம் மென்தொழில், நுனி நாக்கில்
சமஸ்கிருதம் மாறி அன்னிய மொழி....

வறுமை விரட்டுகையில் கைவசம்
சமையல் தொழில், இல்லையேல்
சேட்டு வீட்டு கணக்குப் பிள்ளை
வஞ்சனையில்லாத உழைப்புடன் ...

வாங்கும் சம்பளத்திற்கு நன்றியோடு
பணிசெய்யும் க்ருஷ்ண தர்மம்....
தொழில் பயம் பக்தி எல்லாம் இருக்கும்
மோசம் செய்ய ஒருபோதும் எண்ணமில்லை

அரசாங்கம் பிராமணனுக்கு ஒன்றும்
செய்யாது.... சில நேரம் வசவும்
சில நேரம் செருப்பு மாலையும்
சில நேரம் பூணுல் அறுத்தலும்....

எந்த ஜாதியிலும் பிராமணன் இல்லை
உயர் குடி, தாழ் குடி இல்லை
இட ஒதுக்கீடு இல்லை வறுமையை
கண்டுகொள்வாரில்லை அரசாங்கத்தில்

வெறுக்கப் படுவோமோ என்று பயந்து
பூணுல் மறைத்தவனை கண்டதுண்டு...
ஆனாலும் தெருவில் பிச்சை எடுக்கும்
பிராமணனை நான் பார்த்ததில்லை...

வேறெந்த வேலையும் தெரியாத
பிராமணன் செய்வது தற்காலம் எல்லா வேலையும்…
வியாபாரம் விளம்பரம் அரசியல் எல்லாம்...
பிராமணன் பணியினை தமிழ் ஓதுவான் செய்யலாச்சு ....

ஆனாலும் இன்னும் எனக்கொரு சந்தேகம்
கடவுளுக்கும் பிராமணனுக்கும் மட்டுமே
புரியும் சமஸ்கிருத பாஷையில் பக்தன் குறையை
இனி யார் கடவுளுக்கு புரிய வைப்பார் ?

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: