மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

முனி .... :::நாகராஜன்::::

முனி ....

மூணாம் கிளாஸ் முருகேசனை
முனி அடித்ததை ஊரே பேசியது!
காப்பு கட்டணும் என்றது ஒரு சாரார்
ஆனைமுடி அவசியம் என்றாள்
பூனை மீசை கன்னியம்மா ….
முனியப்ப சாமிக்கு நேரணும்
முன்சீப்பு ராமசாமி சொன்னது …
புளியமரத்தில் ஆணி அடிக்க
மரமேறி நாடான் சொன்னான் ….
முருகேசன் முகத்தில் பயம் பார்த்து
நிச்சயம் போன மாசம் தூக்கில்
தொங்கிய அருக்காணிதான் என்று
அடித்து சொன்னார் கிராமத்து மணியகார் ….
யாரும் சொல்லவில்லை முருகேசனும்
சொல்லவில்லை எந்த முனிஎன்று...
ஆனாலும் நிறுத்தவில்லை
வேலிக்குள் புணர்தலை
யாருக்கும் தெரியாமல்...
தலையாரியும் தாயம்மாவும்.....

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: