மொத்தப் பக்கக்காட்சிகள்

2 மார்., 2008

சிலேடைக்கவி - பரமசிவனும் பலாப்பழமும்


சிலேடைக்கவி - பரமசிவனும் பலாப்பழமும்

பிடித்தொரு சடையுண்டு கொட்டையுண்டு மரவுரியன்
பருத்ததைப் பெற்றவன் தேமதுரன் நாவிற்கினியவன்
பிரம்படி பெற்றுப் பழுப்பன் கராமா வாழ் காளமேகன் சிலேடை
உருப்படியாய் செய்வது பலாவையும் பரமசிவனையுமா?

::::நாகராஜன்:::

விளக்கம்:

பிடித்தொரு சடையுண்டு கொட்டையுண்டு மரவுரியன்
சிவன்: பிடித்தது போல சடைமுடி உண்டு, கழுத்தில் ருத்திராக்ஷ கொட்டை அணிந்தவன், முனிவர்களுக்கான மரவுரி என்னும் ஆடை அணிந்தவன்
பலா: சுளையைச் சுற்றிலும் சடை போன்றவற்றால் பிடிக்கப்பட்டது, பலாச் சுளையில் கொட்டையிருக்கும், மரத்தில் காய்ப்பது பலா

பருத்ததைப் பெற்றவன் தேமதுரன் நாவிற்கினியவன்

சிவன்: பருமனான விநாயகரைப் பெற்றவன், அடியவர்க்கு இனியவன், திருநாவுக்கரசருக்குப் பிடித்தமானவன்
பலா: பலா அளவில் பெருத்ததாகும், இனிப்பானது, நாவிற்கு சுவையானது

பிரம்படி பெற்றுப் பழுப்பன் கராமா வாழ் காளமேகன் சிலேடை

சிவன்: சிவ லீலையில் பிட்டிற்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பழுத்த வேடதாரி
பலா: பலாவைப் பிரம்பால் அடித்தால் பழுக்கும்

உருப்படியாய் செய்வது பாலாவையும் பரமசிவனையுமா?

செய்யுள் முற்று முத்திரை வாக்கியம்

கருத்துகள் இல்லை: