மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

பட்டம்....

பட்டம்....

காற்றில் ஆடும் வானின் வர்ணமாய்
கடல்புறத்து கவிதையாம் காற்றாடி .....
வித வித வடிவமாய் மெருகேற்றி
கண்ணாடி பதித்த பருத்தி இழை... ...

சில பறக்கும் சில சுழலும் மேலும்
சில அறுந்து எங்கோ மிதக்கும் ......
பட்டம் என்பது சிறுவரின் மகிழ்ச்சி
சட்டமா என்ன அவர் மட்டும் மகிழ....

பட்டம் விடுதல் ஒரு திருவிழாவாகும்
ஆடி மட்டுமல்லாது அனைத்து காலமும்....
காற்றாடி பறக்கையில் பரபரக்கும் மனசெல்லாம்
ஊற்றாய் எழும் உற்சாகம் உடலெல்லாம்....

கஞ்சி காய்ச்சி ரத்தம் வர கண்ணாடி அரைத்து
மாஞ்சா பிடித்து கையால் நூலிலேற்றி
அடுத்தவன் பட்டம் அறுக்கும் வரை யாரும்
தடுத்து நிறுத்தாத வெறியே வெற்றியாகும்....

விடுமுறை நாளில் தவறாமல் நடக்கும்
பட்டம் விடுதல் பருவம் தோறும், கதறி
கழுத்தறுந்து விழுந்தவனைக் காணும் வரை
நிறுத்தவில்லை யாரும் பட்டம் விடுவதை.....

:::நாகராஜன்::::

கருத்துகள் இல்லை: