மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

ஏதடா வீரம்?

ஏதடா வீரம்?

சமாதானப் புறாக்களுக்கு முன் துப்பாக்கிப் பிடிப்பதா வீரம்?

பசியென்றால் எதிரியின் குழந்தைக்கும் என் தாய் முலைப்பால் கொடுக்கும் நாடடா இது..

இறந்தவனின் பிள்ளை கூட கொன்றவனை சந்தித்து பூங்கொத்து கொடுக்கும் தேசமடா இது..

உன் நாட்டில் பூகம்பம் வந்தபோது தன் வீட்டு உலையை அனைத்து உனக்குணவு அளித்தவன் பூமியடா...

புத்தனும் காந்தியும் என்னைப் படிப்பித்த சத்தியம், என்னைக் காக்க அல்ல, உன்னை என்பதை புரிந்துகொள்..

ஒன்றை விதைத்தால் வளர்வது ஆயிரம் ஆயிரம் பயிர் மட்டுமல்ல வீரனின் உயிரும் கூட..

பற்றியெரியும் கட்டிடமும் உயிர் விட்டுப் போன உடல்களும் காணும்போது என் பல்லாயிரம் காலத்து நாகரிகம் மறந்து
மொழி மறந்து, தமிழ் மறந்து, கற்றது மறந்து உன்னை திட்டத் தோணுதடா.... தேவிடியாப் பசங்களா..

நாகராஜன்


__,_._,___

கருத்துகள் இல்லை: