மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

எண்ணில் அடங்காதான் தாள் வாழ்க..

எண்ணில் அடங்காதான் தாள் வாழ்க..


பூஜ்யமொன்றாகி ஒன்றிரண்டாகி இரண்டு
மூன்றாகி மூன்று நான்காகி நான்கைந்தாகி
ஐந்தாறாகி ஆறேழாகி ஏழுமெட்டாகி
எட்டொன்பதாகி ஒன்பதும் பத்தாகி பித்தா

பிறைசூடி பெருமானே எண்ணில் அடங்காத
எந்தையே என்னில் அடங்கி முந்தை வினை முடிக்க
தந்தையாய் தாயாய் வந்தெனை ஆட்கொண்ட
நாதன் தாள் வாழ்க நமசிவாயம் வாழ்க...

ஆணும் பெண்ணுமாய் ஒன்றாகி அரியும் சிவனும்
ஒன்றாகி தலையும் பிண்டமும் ஒன்றாக்கி
நான் எனும் ஒன்றை நீ என்று ஒன்றாக்கி
பரம் பொருளாய் நின்ற ஒன்றே....

பிள்ளை இரண்டாகி பெண்ணும் இரண்டாகி
பேறும் இரண்டாகி நான் எனது எனும் இரண்டாய்
நீ உனது என்றிரண்டாக்கி நடமாடும் இரண்டு
கால் பற்றி நாடாண்டு நிற்கும் நமசிவாயமே...

முப்புரம் எரித்து முக்கண்ணுடைத்து
மூவிலை விரும்பி மூன்று சூலம் ஏந்தி
முப்பிறப்பு அறுத்து மூன்று குணமாகி
மூன்று பிள்ளை பெற்ற பிரானடி சரணம்...

நான் மறையும் நானிலமும் நாற்தோளில்
நீ சுமந்து நான் உன்னடி சேர நாலாயிரம்
காதம் கடந்து நாற்திசையும் உன்னை
நான் தேடும் பித்தா பெருமானே..

:::நாகராஜன்::::

கருத்துகள் இல்லை: