மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

கடவுளும் கவலையும்.....

கடவுளும் கவலையும்.....

வேண்டி வணங்கி தாள் வீழ்ந்து
கவலையெல்லாம் தெரிவித்து
கஷ்டம் போக காசு யாசித்து
தேங்காய் உடைத்து பூசை செய்து
தட்டில் நிறைய காசு இட்டு
அழுக்கு வேஷ்டி தினம் உடுத்தும்
அந்தணனை சந்தோஷப் படுத்தி
கைகள் கற்பூரம் ஒத்தி நெற்றியில்
நீறிட்டு மிகுந்ததை பொட்டலம் கட்டி
கடைசியாய் சாமியை திரும்பிப்
பார்த்து ஒரு அவசர விடைபெற்று
திரும்புகையில் மனசில் நிம்மதியாய்
தோன்றும் ஒரு கணம் மட்டும்...
புதுச் செருப்பு வெளியில் அங்கேயே
இருக்குமோ என்று புதிய கவலை
தொடங்குவதை தடுக்க முடியவில்லை....

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: