மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

வா இங்கே இயற்கையே…வர்ணம் தீற்றக் கற்றுக்கொடு...

வா இங்கே இயற்கையே…வர்ணம் தீற்றக் கற்றுக்கொடு...

தங்கத்தை உருக்கி ஜுவாலையைக் குளிர்த்தனுப்பு
வானவில்லை வளைத்து வழியில் கிடத்து
வானக் குழம்பை பாத்திரத்தில் குழைத்து
காற்றுத் தூரிகையால் தரையில் வார்த்து
தீற்றிய நீலத்தை வைத்துப் பார் ஓர் புள்ளியில்
அருவிகள் முழுவதும் சரிகையாட்டும் வெள்ளியில்
புல்லெல்லாம் பசுமையாய் வெளியெல்லாம் புல்வெளியாய்
வளர் பிறையை தரையில் உரைத்து மலைஎங்கும்
வெள்ளையடி தேய் பிறையை சந்தனம் சேர்த்து
தரையெல்லாம் மஞ்சள் பூசு புற ஊதா கதிரெல்லாம்
கத்தரிப்பூ வரிசையாய் கோடிட்டு நிறமாக்கி
கொட்டி கொடுக்குது பார் இயற்கை இங்கே, வார்த்தைகள்
விவரிக்க தடுமாறும் வர்ணங்களை ஓர் கவிதையாய்…

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: