மொத்தப் பக்கக்காட்சிகள்

30 ஜன., 2009

உனக்குத் தெரியாதா?

உனக்குத் தெரியாதா?

விழியோரம் உன் வெறுப்பு
நகையில்லை ஓர விழிப்பில்லை ...

பாதம் சுற்றி மண்ணில்
வட்டமிடவில்லை ...

கடிதமில்லை தூது போக
ஒரு பொடியனுமில்லை...

பேருந்தில் நீ காலி செய்த
சூடான இடத்தில் நான்...

உன் கூந்தல் உதிர்த்த மலர்
என் பூஜை அறையில் ...

நீ அறியாமல் திருடிய ஒரு ஜோடி
செருப்பு தலையணை கீழ்

நீ மணி பார்க்க தேவையின்றி நான்
உன் வீட்டு வாசல் முன் தினமும் ....

மழிக்காத என் மூன்று மாத முடி
கைகள் கிறுக்கிய தமிழ் வரிகள்....

இன்னும் என்னடி வேண்டும்
என் காதலைச் சொல்ல சாட்சியாய் ....

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: