மொத்தப் பக்கக்காட்சிகள்

30 ஜன., 2009

எப்படியானாய் நீ?

எப்படியானாய் நீ?

நீயும் நானும் வாழ்ந்தோம்

அந்த கணங்களில்...

நீ பிணங்கினாய் கோபித்தாய்

வணங்கினாய் வாதிட்டாய்...

கடல் பரப்பில் நீயும் நானும்

கைகோர்த்து சிரித்ததும் ...

என் வாகனத்தில் உன் பிடிப்பு

என் இடுப்பாய் இருந்ததும் ....

பகலில் நம் சந்திப்பென்றாலும்

இரவெல்லாம் நான் விழித்ததும்...

உன் சுமையெல்லாம் நான்

உணர்ந்து பகிர்ந்ததும்....

சட்டென்று உன் தந்தைக்காய்

உன் முடிவை மாற்றி ....

உன் மணப் பத்திரிக்கையை

என்னிடம் கொடுத்தபோது ....


உணரவில்லையா நீ ஒரு

கொலை செய்தாய் என்று ....

:::நாகராஜன்:::

1 கருத்து:

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in