மொத்தப் பக்கக்காட்சிகள்

15 ஜன., 2008

அம்மா என்னும் அழகான கவிதை....:::::நாகராஜன்::::

அம்மா என் தேவதை....
அம்மா என் தெய்வம்....

அம்மா இல்லாதபோதுதான்
அவள் அருமை புரிந்தது.......

எத்தனை பொய்கள் நீசொன்னாலும்
அத்தனையும் கவிதை எனக்கு.....

வயிற்றில் இருந்து உதைத்தபோது
வலி பொறுத்து சிரித்தாயே அதுவா....

எவ்வித விஞ்ஞான அறிவுமின்றி
அப்பாவின் ஜாடை பிள்ளை என்றாயே அதுவா....

எத்தனையோ ராத்திரிகள் என்னை தூங்கச்செய்ய
நீ தூக்கம் தொலைத்தாயே அதுவா?

பால்குடி மறக்காமல் பிராயம் ஐந்து வரை
மார்பை கடித்த பொது பொறுத்துக்கொண்டாயே அதுவா?

அடுத்த வீடுப் பெண்ணுடன் விளையாடினால்
காது அறுந்துவிடும் என்பாயே அதுவா?

என் தேவைக்கு வேண்டும் என்று தெரிந்தே
உரிப்பானைக்குள் காசு ஒளித்து வைப்பாயே அதுவா?

காமாலை வந்தபோது உணவைக்குறை என்றான் வைத்தியன்
ஆனால் உண்ணாமல் உபவாசம் இருந்தது நானல்ல நீ...

அம்மை போட்ட உடல் வேகமாய் குணமாக ஈரத்துடன்
கோவிலில் எனக்காக உருண்டாயே அதுவா?

எந்த ஒரு நாளும் எனக்கு முன் நீ சாப்பிடாததை
சாமர்த்தியமாக மறைப்பாயே அதுவா?

பாடம் படிக்கும் என்னுடன் படிக்காத நீ
சமமாய் உட்கார்ந்து தூக்கம் சொக்குவாயே அதுவா...?

என்ன பட்டம் படிக்கப்போகிறேன் என்று தெரியாமலே
எனக்காக அப்பாவிடம் வாதாடுவாயே அதுவா?

புகை பிடித்த வாய் நாறும் போதும் பொறுத்துக்கொண்டு
என்னை உச்சி முகர்ந்து வழியனுப்புவாயே அதுவா?

வாலிப வயதில் வாழ்க்கை விளையாட்டிற்கு என் ஜோடிக்காக
அப்பாவிடம் அழகாக ஜோடிப்பாயே அதுவா?

எத்தனை இடங்களில் என் சந்தோசம் முக்கியம் என்று
கல்யாணப்பெண் பார்த்திருப்பாய்....

எத்தனை கற்பனைகள் உனக்கு
என்னை விட என் மனைவி பற்றி?

கல்யாணம் ஆனதும் என் முதல் சம்பளம் மனைவியிடம் போனபோது
நான் மிகவும் பொறுப்பென்று பூரித்தாயே?

மனைவி முகம் சுளித்தாள் என்று ஒரே நாளில் தீர்மானித்து
தனிக்குடித்தனம் வைத்தாயே....

அப்பாவின் உடலுக்கு கொள்ளி வைக்கத்தான் கூப்பிட்டாய்
அவரின் ஆஸ்த்மாவுடன் நீ மட்டும்தானே போராடினாய்?

யாருமின்றி தனியானபோது மனைவியின் வெறுப்பையும் மீறி
என்னோடு வந்தபோது சந்தோஷம் எனக்கு...

ஆனால் உன்னுடன் பேச வரும்போது உன்னை சுருக்கி
சமையல் அறையின் உள்ளே எப்போதும் பதுங்குகிறாயே அது ஏன்?

ஒவ்வொரு நாளும் அலுவலகம் போகும்போது விதவை எதிரே வரக்கூடாதென்று அடுப்படியில் ஒளிகின்றாயே அது ஏன்?

ஒருநாள் என் மகன் நடுநிசியில் விழித்து உறக்கம் கெடுத்தபோது என் மனைவியின் மடியில் நான் என்னைப் பார்த்தேன் ...

நீ மட்டும்தான் எனக்கு கடமை செய்திருக்கிறாய்
நான் உனக்கு ஒன்றும் செய்யவில்லையே?....

அம்மா! சுயநலத்தின் முன் கோழையாகிவிட்டேன்
வாழ்க்கை முழுதும் ...
புரிந்த பின் பிழை திருத்த நியில்லை உயிரோடு! ...

அடுத்த பிறவி ஒன்றிருந்தால் உன் தாயாய்
பிறந்து உன் கடன் தீர்ப்பேன்....

என் மனைவிக்கு இது எதுவும் புரியாது ..
உனக்கும் எனக்கும் உள்ள உறவு பற்றி....

ஆனால் ஒருநாள் புரியும் அவளுக்கு
தன் மகன் எழுதிய கவிதை படித்த போது!

:::::நாகராஜன்::::

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

தூள் கிளப்பரேயே மச்சி முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்- யுவராசன்

Unknown சொன்னது…

vimarsikka mudiyavillai......uraindhu poyirukkiren......vaazzhtthukkal

துபாய் நாகராஜன் சொன்னது…

Thanks Kala. Pl send me an email to lps@eim.ae and i register your name as a critic in my site

:::Nagarajan:::