கூடை பிணங்கள் குப்பையிலே ....
குப்பை மேட்டில் கிடக்குது.....
காய் கறிக்கு பதிலாக
கறி கால் கை கிடைக்குது.....
ஈழம் ஆண்ட சோழனுக்கு
ஈரக்குலைகள் சமர்ப்பணம்...
பசியெடுத்த சிங்களனுக்கு
தமிழன் பிணத்தால் தர்ப்பணம்...
வீரத்தமிழன் என்கிறாயே...
வெட்கமில்லை உங்களுக்கு?
வெட்டித்தின்னும் சிங்களனை
தட்டிக் கேட்கத் தங்களுக்கு?
மந்திரி பதவி கேட்க மட்டும்
விமானம் ஏறிப்போகிறாய்..
மாண்ட தமிழன் மானத்தை
மறந்துதானே போகிறாய்....
உண்ணா விரதம் என்றுரைத்து
ஊர் வாயை மூடுகிறாய்...
வேஷம் களைந்து விலகினால்
பார்ப்பனர் சூழ்ச்சி என்கிறாய்...
அரசியல் கட்சி எல்லோர்க்கும்
தமிழன் பிணத்தில் ஓட்டு வேட்டை....
பச்சை சட்டை போட்டு கிட்டா
போராளி தமிழன் ஆவாயா?
மிலிடரி சட்டை போட்டுக்கிட்டு..
போஸ் கொடுத்து போவாயா?
பதவி பிடிக்க உங்களுக்கு
தமிழன் பிணங்கள் போதுமே...
தின்னு பாருங்கள் தமிழன்
கறியை...வீரமாவது வரட்டுமே...
:::பா. நாகராஜன்:::::
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக